voiceofchrist


உன் தேவனை சந்திக்க ஆயத்தபடு 



சொர்க்கலோக இராட்சியம், நரகம், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

சாட்சி : அன்ஜளிக்கா சம்ப்ரானோ

 

அன்ஜளிக்கா எனும் பெயர் கொண்ட 18 வயது நிரம்பிய ஒரு எகோடோரியன் பெண்பிள்ளை சொர்க்கலோக இராட்சியத்தையும் நரகத்தையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் பார்த்துள்ளாள் சுமார் 23 மணித்தியாலங்கள் இந்த மூன்று காரியங்களும் அவளுக்கு காட்டப்பட்டுள்ளது. நரகத்தில் நித்திய அழிவுக்கு தள்ளப்பட்ட ஆத்துமாக்களுக்காகவும், இயேசு கிறிஸ்துவை மருதலித்து கொண்டிருக்கும் உலகத்துக்காகவும், இயேசு கிறிஸ்துவுக்காக ஆயத்தமாகாத சபைகளுக்காகவும், புறஜாதியார் மத்தியில் சாட்சியின் ஜீவியத்தை கைவிட்ட  மக்களுக்காகவும், சாத்தானுக்கு மனிதர்களை பிடிக்கும் தூண்டிலாக நவ நாகரீக கேளிக்கை துறைகளை பார்த்தும் இயேசு கிறிஸ்து கண்ணீர்விட்டளுவதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள்.  அத்தோடு மதிப்புக்குரிய அநேக பிரபல்யங்கள் நரகக்குழியில் கிடந்து வேதனைப்படுவதாகவும் அதில் பாடகர்கள், கேளிக்கையாளர்கள், இன்னும் பலர் வேதனைப்படுவதாகவும் பாப்பரசர் கூட இருப்பதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள். அத்தோடு அன்ஜளிக்கா ஒரு தீங்கும் அற்ற, அற்புதமான, எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ள, தயார் நிலையில் இருக்கும், கற்பனைக்கு அப்பால்பட்ட மகிமையான இடமாக சொர்க்கலோக இராட்சியத்தை கண்டுள்ளால் இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவது தம்முடைய பரிசுத்தமான ஜனங்களுக்காக மாத்திரமே பல தேவ பிள்ளைகள் அந்த நாளிலே ஆயத்தமாக இருப்பதில்லை அவர்கள் கைவிடப்பட்ட கூட்டமாக இந்த பூமியிலே காணப்படுவர் என்பது  அன்ஜளிக்காவின் சாட்சி.  

 

 மக்சிமா (தாயார்)

என் பெயர் மக்சிமா சம்ப்ரானோ மோரா நாங்கள் நிகாரோகுவா தேசத்தில் அமைந்துள்ள எல் எம்பாம் ஊரில் நடத்தப்பட்டு வருகின்ற "காசா டீ ஒராசியன்" எனப்படும் கர்த்தருடைய சபையிலே 15 நாட்கள்  உபவாசித்து கர்த்தரை நோக்கி மன்றாடிக்கொண்டிருந்தோம். என் மகள் அன்ஜளிக்காவும் எங்களோடுகூட உபவாச ஜெபத்திலே இணைந்து கொண்டாள். இந்த 15 நாட்கள் உபவாச ஜெபத்திலே, நான் இது வரை கண்டிராத என் அறிவுக்கு எட்டாத அநேக காரியங்களை என்னால் காணக்கூடியதாக இருந்தது. கர்த்தர் எங்களோடு பேசும் படியாக நாங்கள் குழுவாக உபவாசித்து ஜெபித்தோம் இல்லத்திலும் எங்கள் மன்றாடல் தொடர்ந்தது.

 

எங்கள் சோதனைகளிலே நாங்கள் பின்வாங்கி போக எத்தனித்த சமயங்களில் கர்த்தர் எங்களை மிகவும் தைரியப்படுத்தினார். எரேமியா 33:3ல் சொல்லப்பட்ட படி "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்."  என்ற வாக்குதத்தத்தின் மூலம் கர்த்தர் எங்களோடு இடைப்பட்டார். என் மகள் கர்த்தர் கொடுத்த இந்த வாக்குத்தத்தத்தை உறுதியாக பற்றிக்கொண்டு மன்றாடியுள்ளாள் அந்நேரத்தில் நான் அதை அறிந்திருக்கவில்லை.

 

அன்ஜளிக்கா (மகள்)

என் பெயர் அன்ஜளிக்கா எலிசபெத் சம்ப்ரானோ மோரா என் வயது 18 நான் எல்கேன்டன், எல்எம்பாம், எகொடோர் "எனும் இடத்தில் உள்ள கொளிகியோ ஜோசே மறயா வேலாஸ்கோ இப்பர்ரா" பள்ளியில் கல்வி கற்கிறேன். நான் 12 வயதாக இருந்த போது இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டேன் ஆனாலும் நான் என்னோடு கூட சொல்லிகொண்டது என்னவென்றால் "என் நண்பர்களுக்கிடையில் சுவிசேஷத்தை அறிந்தவர் ஒருவரும் இல்லை அவர்கள் மத்தியில் நான் அந்நியவளாக காணப்படுவேன்" என்பதே ஆகவே நான் ஆண்டவரை விட்டு விலகி பயங்கரமான கெட்ட  பழக்க வழக்கங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தேன்.

 

ஆனாலும் ஆண்டவர் என்னை மீட்டெடுத்தார். என்னுடைய 15 ஆவது பிறந்த தினத்தன்று  நான் மறுபடியும் ஆண்டவர் கரத்திற்கு என்னை ஒப்படைத்தேன்.  இருந்தும் கூட என் மனம் இருமனமாகவே காணப்பட்டது. வேதம் சொல்லுகிறது   "இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்" (யாக்கோபு 1:8) என்று நானும் கூட அப்படிப்பட்டவளாக இருந்தேன். என் தந்தை கூறுவார் "நீ அப்படி இருக்க கூடாது, அது சரி இல்லை தவறு" என்று நான் அவருக்கு மறுமொழியாக " நான் இப்படித்தான் இருப்பேன், நான் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் எப்படி உடுத்த வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்ல அவசியம் இல்லை" என்பேன். அதற்கு அவர் ஆண்டவர் உன்னை மாற்றுவார் அவர் பார்த்து கொள்வார் என்பார்.

 

என் 17 ஆவது பிறந்த தினத்தன்று நான் ஆண்டவரை கிட்டி சேர்ந்தேன். ஏப்ரல் 28 ம் திகதி நான் அவரிடம் வந்து கூறினேன் " ஆண்டவரே நான் என்னை தவறாக உணர்கிறேன்,  நான் ஒரு பாவி என்பது எனக்கு தெரியும்" என்று நான் எனக்கு எப்படி தோன்றியதோ அதை அப்படியே ஆண்டவருக்கு சொன்னேன் ' ஆண்டவரே என்னை மன்னியுங்கள் என் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படட்டும் என்னை உங்கள் பிள்ளையாக மாற்றுங்கள்" என்றேன். நான் மனந்திரும்பி என் வாழ்க்கையை ஆண்டவரிடம் ஒப்படைத்தேன். நான் ஆண்டவரிடம் என்னை மாற்றும் படியாகவும் என்னில் ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணும்படியாகவும் மன்றாடினேன் நாட்கள் கடந்தது அனாலும் ஒரு மாற்றமும் நிகழவில்லை. ஒரே ஒரு மாற்றம் மட்டும் என்னில் காணப்பட்டது நான் ஆலயத்திற்கு செல்லுபவளாகவும் வேதம் வாசிபபவளாகவும் ஜெபம் செய்பவளாகவும் மட்டுமே காணப்பட்டேன்.

 

அப்படி இருக்கும் போது ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் உபவாசித்து ஜெபிக்கும் ஒரு நிகழ்விற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்நிகழ்வில் கலந்து கொள்ள நான் முடிவுசெய்து ஆண்டவரிடம், "ஆண்டவரே நீங்கள் என்னோடு இடைபடவேண்டும்" என்று சொன்னேன். அந்த உபவாச ஜெபத்திலே என்னை தவிர மற்ற எல்லோரிடமும் ஆண்டவர் பேசினார்! அது ஆண்டவர் என்னை கனாததைபோல எனக்கு மிக வேதனை தரக்குடியதாக இருந்தது. ஆண்டவரிடம், நான் "ஆண்டவரே நீங்கள் என்னோடு இடைபட மாடீர்களா?" என்று கண்ணீர் வடித்து மன்றாடி கொண்டிருந்தேன்  "ஆண்டவரே நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா? இங்கே இருக்கிறீர்களா? என்னோடு இருக்கிறீர்களாமற்றவர்களிடம் பேசுவதைப்போல் என்னோடு ஏன் பேசவில்லை? மற்றவர்களிடம் அநேக வார்த்தைகளை பேசுகின்றீர்களே தீர்கதரிசன வார்த்தைகள் கூட ஆனால் என்னோடு இல்லையே" என்று கேட்டு கொண்டே இருந்தேன். கர்த்தர் என்னோடு கூட இருந்தால் ஒரு அடையாளத்தை எனக்கு காட்டும் படியாக கேட்டேன் அதற்கு அவர் எரேமியா 33:3 காட்டினார் "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்."  என்ற வாக்குதத்தத்தை எனக்கு கொடுத்தார். அப்போது நான் "ஆண்டவரே நீங்கள் என்னோடு பேசினீர்களா?" என்றேன் காரணம் நான் அவரது ஓலியை கேட்டேன் அத்தோடுகூட எரேமியா 33:3 ல் உள்ள வார்த்தைகளை தரிசனமாக கண்டேன்.

 

நான் கர்த்தரிடம் "ஆண்டவரே இது எனக்கு தானா?" என்று கேட்டேன், அந்த வார்த்தையை எனக்காக நான் வைத்துக்கொண்டேன், ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த வார்த்தைகளை சாட்சியாக சொன்னார்கள் ஆனால் நானோ எனக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை ரகசியமாக வைத்துக்கொண்டு தியானித்து கொண்டிருந்தேன்: "என்னை நோக்கிக் கூப்பிடு" என்பது ஜெபம் செய்வது ஆனால் "அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்கள்" என்பது? இது நிச்சயமாக சொர்க்கமும் நரகமுமாகதான் இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். ஆகவே நான் ஆண்டவரிடம் சொன்னது "ஆண்டவரே சொர்க்கத்தை மட்டும் எனக்கு காட்டுங்கள் நரகத்தை நான் பார்க்க விரும்பவில்லை காரணம் அது பயங்கரம் நிறைந்த இடம் என்று நான் கேள்விப்பட்டதுண்டு இருப்பினும் உங்களுடைய சித்தம் எதுவோ அதை செய்யுங்கள் அதற்கு முன்பதாக எனக்குள் ஒரு மாற்றத்தை செய்யுங்கள் நான் என் தன்மையிலிருந்து மாற்றபட விரும்புகிறேன்" என்று சொன்னேன். 

 

நாங்கள் உபவாச ஜெபத்தை முடித்தபோது சோதனைகளும் கஷ்டங்களும் வந்தது சில சமயங்களில் நான் சோர்ந்து போனேன் கர்த்தரோடுகூட நடக்க முடியாத நிலை காணப்பட்டது அனாலும் அவர் எனக்கு பெலனளித்தார். நான் அவரது குரலை கேட்க அவரை நன்றாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். நாங்கள் நல்ல நண்பர்களானோம். பரிசுத்த ஆவியானவரே நமது நல்ல நண்பர். நான் அவரிடம்  "ஆண்டவரே நீங்கள் தான் என் நல்ல நண்பர். நான் உங்களை அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும்" என்று சொன்னேன். என் சிந்தனைகளையும் அவரோடுகூட பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.  

 

நான் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஜெபித்தேன் நவம்பர் மாதம் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர் எங்கள் வீட்டிற்கு வந்தார் அவர் கூறியதாவது: " கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக" நான் மறுமொழியாக "ஆமென்" என்றேன். தொடர்ந்தும் அவர் " நான் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை உனக்கு கொடுக்கும் படியாக இங்கே அனுப்பப்பட்டேன் நீ உன்னை தயார் படுத்தவேண்டும் காரணம் ஆண்டவர் நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு காண்பிக்க போகிறார். நீ எரேமியா 33:3 ல் இருந்து ஜெபித்து கொண்டிருந்தவாறு அவர் உனக்கு சொர்கத்தையும் நரகத்தையும் காண்பிக்க போகிறார்" என்றார். நான் அவரிடம் " ஆம் அது உங்களுக்கு எப்படி தெரியும்? நான் அதை யாரிடமும் சொல்லவில்லையே என்றேன். அதற்கு அவர் "நீ சேவிக்கிரவரும் ஆராதிக்கிரவருமான அதே தேவனையே நானும் ஆராதிக்கிறேன் அவரே இவை எல்லாவற்றையும் எனக்கு சொன்னவர்" என்றார். 

 

துரிதமாக நாங்கள் ஜெபம்பண்ண ஆரம்பித்தோம். எங்கள் சபையின் சில சகோதேரிகளும், குடும்ப அங்கத்தவர்களும் அங்கே எங்களோடு கூடி இருந்தனர். நாம் ஜெபிக்க ஆரம்பித்த உடனே நான் வானம் திறந்திருப்பதை கண்டேன். நான் அப்போது சொன்னது " வானம் திறக்கப்பட்டுள்ளது இரண்டு தேவதூதர் கீழே இறங்கி வருகின்றனர் " அங்கே இருந்த ஒருவர் சொன்னார் "கேள் ஏன் அவர்கள் இங்கே வந்தார்கள்" என்று.

 

அவ்விரு தேவதூதர்களும் உயரமாகவும் அழகாகவும் காணப்பட்டனர். அவர்களுக்கு இரண்டிரண்டு செட்டைகள் இருந்தன. அவர்கள் பெரிய உருவத்திலும் மினுங்க கூடிய தன்மையிலும் காணப்பட்டனர் அவர்களது உடல் பசும்பொன்னை போல தோற்றமளித்தன. கால்களில் பளிங்கை போன்ற சென்ட்ல்ஸ்சும் பரிசுத்தமான உடைகளும் அணிந்திருந்தனர். "ஏன் இங்கே வந்தீர்கள்?" என்று நான் அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் "நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை செய்து முடிப்பதற்காகவே நீ சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் போய்வரவேண்டிய காரியம் முடியும் வரை நாங்கள் இங்கு இருக்க வேண்டும் என்றனர் " அதற்கு நான் "நல்லது, எனக்கு சொர்க்கத்திற்கு போகவேண்டும் நரகத்திற்கு அல்ல என்றேன்"  அவர்கள் என்னை பார்த்து புன்னகை செய்து அங்கேயே இருந்து விட்டனர் ஆனால் அதன்பிறகு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் எங்கள் ஜெபத்தை முடித்தோம், ஆனால் அந்த தேவதூதர்கள் அங்கேயே காணப்பட்டார்கள்.  நான் பரிசுத்த ஆவியானவரையும் பார்க்க ஆரம்பித்தேன் அவர் என் சிறந்த நண்பர் அவர் இறைவன், அவர் எங்கும் நிறைந்திருக்கிறவர்! நான் அவருடைய தோற்றத்தை அதிக பிரகாசம் நிறைந்ததாகவும் கண்ணாடிக்கொப்பாக மறுபுறத்தை ஊடுருவி பார்கக்கூடியவாறும் காண்பேன் அவருடைய முகம் மிகவும் பிரகாசாம் நிறைந்ததாக இருக்கும். அன்பு நிறைந்த முகத்தோடும் புன்முறுவலோடும் அவர் என்னை நோக்குவதை நான் பார்ப்பதுண்டு. நான் அவரை எழிதில் கண்டுபிடித்துவிடுவேன் காரணம் அவர் அந்த இரண்டு தேவதூதர்களையும் விட அழகானவர். தேவதூதர்களும்  அழகானவர்கள் ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை பார்க்கிலும்  மிக மிக அழகானவர். நான் அவரது குரலை கேற்பதுண்டு அன்பு நிறைந்த பாசம் ததும்பும் ஒரு குரல். என்னால் அதை விவரிக்க முடியாது இடிமுழக்க குரலாகவும் அந்தக்குரல் காணப்படும். "நான் உன்னுடனே கூட இருக்கிறேன்" என்று அவர் எனக்கு சொல்வதுண்டு. சோதனைகள்  வந்த போதும் கூட நான் ஆண்டவரோடு தொடர்ச்சியாக நடக்க முயற்சித்தேன். பலவிதமான சோதனைகளுக்கு நாங்கள் முகம்  கொடுக்கவேண்டி வந்தது ஆனாலும் அவை எல்லா சந்தர்பங்களிலும் எங்களுக்கு ஜெயமே கர்த்தரால் வந்தது. "ஆண்டவரே உங்கள் சித்தமே நடக்கட்டும்" என்று நான் கர்த்தரிடம் கூறினேன். நான் தொடர்ச்சியாக அவதானித்தது என்னவென்றால் அந்த இரண்டு தேவதூதர்களும் என் பள்ளியிலும் வகுப்பறையிலும் காணப்படுவர் அப்போதெல்லாம் எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

 

முன்பு ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கும்படி ஆயத்தப்படும்படி கூறிய தேவனுடைய ஊழியக்காரர் இன்னும் ஒரு கடினமான காரியத்தையும் கூறினார் அதாவது நான் மரிக்க போவதாக கூறினார் அதை நான் கேட்ட போது அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

 

நான் மரிப்பது எப்படி? நான் இளவயதை உடையவள் அல்லவா? என்று கேட்டதற்கு அவர் "நீ ஒன்றையும் குறித்து கவலைப்படாதே கர்த்தர் எல்லா காரியத்தையும் சரிவர செய்வார் அவர் உன்னை மறுபடியும் உயிருடன் எழுப்புவார் அப்போது சொர்க்கத்தையும் நரகத்தையும் குறித்து கர்த்தருடைய திட்டத்தின்படி நாங்கள் அனைவரும் அறிந்து கொள்ளுவதற்கு நீ சாட்சி கொடுப்பாய்" என்றார் நான் ஆமென் என்றேன், ஆனாலும் என் உள்ளத்தில் நான் மரிப்பது எப்படி? ஒரு கார் என்மேல் மோதுமோ அல்லது நான் எப்படி மரிப்பேன்? என்று குலம்பிக்கொண்டிருந்தேன் அப்போது கர்த்தர் கலங்காதே எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்றார் நான்  கர்த்தருக்கு நன்றி  சொன்னேன்.

 

நவம்பர் 6ம் திகதி நான் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன். இன்னும் தேவதூதர்கள் என்னோடு தான் காணப்பட்டனர் எப்போதும் போலவே அவர்கள் தேவனை துதித்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னுடன் பேசுவதில்லை, எப்போதும் "பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் அல்லேலூயா அல்லேலூயா  எல்லா துதி கன மகிமை எங்கள் பரலோக பிதாவுக்கே" என்று எப்போதும் கர்த்தரை துதித்து கொண்டே இருப்பார்கள். பரிசுத்த ஆவியானவரும் கூட அவர்களோடு இருந்தார் நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். ஆவிக்குரிய ஜீவியம் அலுப்பாக காணப்படும் என்று பலரும் கூறலாம் ஆனால் அது மிகப்பெரிய பொய் மனிதர்கள் தேவனை தேடுவதை தடுக்கும் படியாக சாத்தானே இப்பொய்யை மனிதர்கள் மத்தியில் விதைத்துள்ளான். நானும் கூட இப்படிப்பட்ட எண்ணத்துடனே காணப்பட்டேன் ஆனால் கர்த்தரை பரிசுத்த ஆவியானவரை சந்தித்ததும் தான் எனக்கு விளங்கியது ஆவிக்குரிய ஜீவியமானது எவ்வளவு இன்பம் தரக்கூடிய ஒன்று என்பது. அதுவே பூமியில் அனுபவிக்க கூடிய பெரிய சந்தோஷம்!

 

நான் பரிசுத்த ஆவியானவரை பார்க்கவும் அவரோடு விளையாடவும் கதைக்கவும் கூட செய்வேன். தேவதூதர்கள் என்னுடன் பேசுவதில்லை அவர்கள் எப்போதும் கர்த்தரை துதித்து கொண்டே இருப்பார்கள் "பரிசுத்த ஆவியானவரே என்னிடம் வாருங்கள் இதை செய்யுங்கள்" என்று நான் கூப்பிடும்போதெல்லாம் அவர் அங்கு வருவார் அப்போது நான் அவரை காணுவேன் அவரை உணருவேன்.

 

பரிசுத்த ஆவியானவர் கால் ஊன்றி நிற்பதை நான் காணுவேன் அவருக்காக ஒரு நாற்காலியையும் ஆயத்தம் செய்வேன். அவர் இங்கே இருக்கிறார்! அநேகருக்கு அவரை பார்க்கமுடியாது! எங்களுடைய உறவு இன்னும் தொடர்கிறது அதை நிறுத்துவதற்க்கு எந்த ஒரு காரணமும் இல்லை. நீங்களும் கூட அந்த அனுபவத்துக்குள் வந்தால் உங்களாலும் அதை உணரமுடியும் எப்படியும் அவரைவிட்டு பின் வாங்கி போக எனக்கு முடியாது. அவர் மனிதர்கள் மீது கொண்டுள்ள பாசத்தையும் என்மீது கொண்டுள்ள பாசத்தையும் எண்ணி பார்க்கும் போதும் என் பழைய வாழ்க்கையிலிருந்து அவர் என்னை மீட்ட விதத்தை நான் எண்ணி பார்க்கும் போதும் அவருடைய இரக்கத்திற்காக மிகவும் மிகவும் நன்றி கூறுகிறேன்.

 

நவம்பர் 7 ம் திகதி நான் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு குரலை கேட்டேன் அது "தயாராகு இன்று நீ மரிக்க போகிறாய்" என்றது. அது பரிசுத்த ஆவியானவருடைய குரல் ஏனெனில் நான் அவரை கண்டேன் ஆனாலும் நான் அவருடைய வார்த்தையை புறக்கணிக்கும் விதமாக "ஆண்டவரே நான் இன்று மரிக்க கூடாது" என்றேன். மறுபடியும் அவர் " தயாராகு இன்று நீ மரிக்க போகிறாய்" என்றார் ஆனால் இந்த முறை அவருடைய குரல் மிகவும் சத்தமாகவும் மிகுந்த வல்லமையோடும் காணப்பட்டது. அப்போது நான் "ஆண்டவரே நீங்கள் தான் என்னோடு பேசுவது என்று எனக்கு தெரியும் ஆனாலும் நான் ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் உங்களிடம் கேட்கின்றேன் அதன் பின் நான் பயந்தாலும் கூட உங்கள் சித்தம் என்னில் நடக்கட்டும் நீங்கள் சொல்வதை எல்லாம் செய்கின்றேன் என்னை உங்களுக்கு அர்பணிக்கின்றேன் ஏனெனில் நீங்கள் உண்மையான தெய்வம் என்பது எனக்கு தெரியும்" என்றேன்.

 

நான் ஜெபித்து "ஆண்டவரே முன்பு என்னிடம் உங்களால் அனுப்பப்பட்ட அதே ஊழியக்காரர் நான் வீடு செல்லும் முன் அங்கே இருக்க வேண்டும் நான் இன்று மரிப்பேன் என்று அவர் சொல்லவேண்டும்" இதுவே நான் எதிர் பார்க்கும் அடையாளம் என்றேன். ஆண்டவருக்கு எல்லாம் தெரியும் நான் எதை கேட்பேன் என்றும் தெரியும் ஆகவே அவர் நான் வீடு செல்லும் முன்பாகவே அவருடைய ஊழியக்காரர் அங்கே இருந்தார்.

 

மக்சிமா
என் மகள் வீட்டுக்கு வந்ததும் நாங்கள் சமையலறையிலே இருந்தோம். அன்ஜளிக்கா கர்த்தருடைய ஊழியக்காரரை பார்த்ததும் "கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக" என்றாள் பதிலுக்கு அவர் "கர்த்தர் உன்னையும் ஆசீர்வாதிப்பார் நீ ஆயத்தமா? இன்று தான் கர்த்தர் உன்னை அழைத்து போகப்போகும் நாள், மாலை 4 மணிக்கு" என்றார். அவள் அங்கே நின்றிருந்தால், அவள் எதிர்பார்த்த வண்ணமாகவே கர்த்தர் அவள் வேண்டுதலை கேட்டார்.

 

அன்ஜளிக்கா

நான் இதை கேட்ட மாத்திரத்தில் " ஆமென் ஆனால் ஆண்டவரே நான் மரிக்க கூடாது,  என்னால் முடியாது, எனக்கு திகில் பிடிக்கிறது பயமாக இருக்கிறது" என்றேன். அப்போது அங்கே இருந்த ஊழியக்காரர் சொன்னார் "நாங்கள் இப்போது ஜெபிப்போம் கர்த்தருடைய நாமத்தினாலே இப்போதே  உன் பயம் உன்னை விட்டு போய் விடும்" என்றார். நான் "ஆமென்" என்றேன் நாங்கள் ஜெபித்தோம் உடனடியாகவே என் பயம் என்னை விட்டு போனது, ஒரு பேரின்பம் என்னை ஆட்கொண்டது, மரிப்பது நல்ல காரியம் அது எனக்கு நடக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது! எல்லோரும் என்னை பார்த்து கொண்டிருக்கும் போதே நான் சிரிக்கவும் மகிழவும் ஆரம்பித்தேன். நான் சிரிக்கவும் பாடவும் குதிக்கவும் செய்தேன் நான் பயத்தை மறந்து மகிழ்ச்சி அடைந்திருப்பதை எல்லோரும் பார்த்தனர்.

 

மக்சிமா

என் மகள் சீக்கிரத்தில் சந்தோஷத்தை உணர்ந்தவளாய் சாப்பிடும்படி ஆயத்தமானாள். எல்லாவற்றிலும் சிறிய அளவு உணவையே எடுத்து கொண்டாள் "நன்றாக நிறைவாக சாப்பிட்டேன் ஒரு வேலை நான் திரும்பி வராவிட்டால்!" என்றாள். 

 

அன்ஜளிக்கா

எல்லோரும் என்னை பார்த்து நகைத்து கொண்டு கேட்டனர் "துக்க படுவதற்கு பதிலாக ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? நீ மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறாயா? என்றனர்" "ஆம்! ஏனெனில் நான் என் ஆண்டவரை பார்க்கபோகிறேன் அவரோடு இருக்க போகிறேன். ஆனால் நான் திரும்பி வருவேனா என்பது எனக்கு தெரியாது ஆகவே எனக்கு சொந்தமான எல்லாவற்றையும் நான் கொடுத்துவிட போகிறேன்" என்றேன். எல்லோரும் என்னை பார்த்து கேட்டனர் "உனக்கு சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துவிட போகிறாயா என்று? "என் அம்மா என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார்!

 

மக்சிமா

என் மகள் அவளுடைய பொருட்களை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க தொடங்கினால். எல்லாவற்றையும் கொடுத்தாள் எல்லாவற்றையும்!. எப்போதும் போல எங்கள் சபையின் சகோதரிகள் சிலர் எங்களோடு இருந்தனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது   ஒன்றை  அவள் கொடுத்தாள். நான் அதை பற்றி அவளிடம் கேட்ட போது அவள் "நான் மறுபடியும் திரும்பி வந்தால் இவர்கள் என் எல்லா  பொருட்களையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் நான் திரும்பி வராவிட்டால் அவர்களே அவற்றை  வைத்து கொள்ளலாம் என்றாள்.

 

அன்ஜளிக்கா

நான் இந்த வார்த்தைகளை என் அம்மாவிடம் சொன்னதும் அவர்கள் அடைந்த வேதனையை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் நான் மிக மகிழ்ச்சியாக என் பொருட்களை பகிர்ந்து கொண்டிருந்தேன் என் உடைகள் என் படுக்கை என் கை தொலைபேசி எல்லாவற்றையும் கொடுத்தேன் ஒரு நிபந்தனையோடு கூட என்ன வென்றால் நான் மறுபடியும் திரும்பி வந்தால் அவைகள் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதே.

 

மக்சிமா

அவள் மிக உறுதியாக இருந்தாள் ஆனால் ஒரு தாயாக எனக்கு மிகவும் துக்கமாக இருந்தது. அது இலகுவான காரியம் அல்ல. "ஆண்டவரே அந்த சந்தர்ப்பம் எப்போது வரும்? அது எப்படி இருக்கும்?" என்று நான் ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன் எனக்கு அது விளங்க வில்லை. அவர்கள் ஜெபிக்க ஆரம்பித்தனர் நானோ வீட்டு காரியங்களை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தேன். அவர்கள் என்னை ஜெபிக்க அழைத்தபோது "நீங்கள் ஜெபியுங்கள்  நான் என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்" என்றேன். 

 

அன்ஜளிக்கா

நாம் எல்லோரும் ஜெபிக்கும் போது அவர்கள் என்மீது கண்நோக்கமாக இருந்தார்கள். நான் ஜெபித்தேன் "ஆண்டவரே உங்கள் சித்தமே என்னில் நடக்க வேண்டும், நீங்கள் பொய் சொல்லவோ மனம் மாறவோ ஒரு மனிதன் அல்ல நீங்களே உண்மையான தெய்வம் என்பது எனக்கு தெரியும். நான் உங்கள் சித்தத்தை செய்ய தவருவேனானால் என்னை உங்களோடு கூட எடுத்து கொள்ளுங்கள், சரியாக செய்வேனானால் என்னை மறுபடியும் உயிரடைய செய்யுங்கள், நான் உண்மையை சொல்லும் படியாக எனக்கு உதவி செய்யுங்கள், என்னை ஆயத்த படுத்துங்கள். மனிதர்கள் மனந்திரும்பும் படியாக நான் எடுத்துரைக்கவும் உபதேசம் பண்ணவும் எனக்கு உதவி செய்யுங்கள்." என்றேன் இது தான் என் சிறிய ஜெபமாக இருந்தது. இதை நான் அந்த ஊழியக்காரருக்கு சொல்லிவிட்டு என் அம்மாவிடம் இதை சொல்லவேண்டாம்என்று சொன்னேன் அதற்கு அவர் இப்போது அவளிடம் சொல்லமாட்டேன் ஆண்டவர் உன்னை கொண்டுபோனதும் சொல்லுவேன் என்றார். நாங்கள் தொடர்ந்தும் ஜெபம் செய்து ஒருவர் கையை ஒருவர் பற்றி  கொண்டு ஜெபம் செய்தோம்.  

 

மக்சிமா

சரியாக பி.ப. 3:30 மணிக்கு கர்த்தர் தன்னுடைய ஊழியக்காரரிடம் என் மகளை எண்ணெயால் அபிஷேகம் செய்யும் படி சொன்னார். நாங்கள் சிலர் அவளை அபிஷேகம் பண்ணும் படியாக ஒரு அறைக்குள் சென்றோம். அவளை முழுவதும் அபிஷேகம் பன்னும் படியாக அவர் எங்களுக்கு நிமிடங்கள் மட்டுமே கொடுத்தார். அவள் உச்சிமுதல் பாதம் வரை முழுவதுமாய் அபிஷேகம் பண்ணப்பட்டாள்.

 

 

அன்ஜளிக்கா மரித்தல்

அன்ஜளிக்கா

என் அம்மாவும் சபை சகோதரி ஒருவரான பெடிமா நவர்றேடே என்பவரும் என்னை எண்ணெயால் அபிஷேகம் செய்தனர். அவர்கள் என்னை அபிஷேகித்தபோது ஏதோ என்னை சுற்றி கண்ணாடியை போல உரை இடபடுவதை நான் உணர்ந்தேன். அதை பற்றி விவரிப்பது கடினம். என்னை சுற்றி ஒரு கடினமான உரை காணப்பட்டது அதன் பின் அவர்களால் என்னை தொட முடியவில்லை.

மக்சிமா

நாங்கள் ஜெபித்து கொண்டிருந்த போது  நான் அன்ஜளிக்கா மேல் என் கைகளை வைக்க முயற்சித்தேன் என்னால் அவளை தொட முடியவில்லை. அவளை ஏதோ மூடி இருந்தது. அது கடினமாக இருந்தது யாருக்கும் அவளை தொட முடியவில்லை. அது அவள் உச்சந்தலை முதல் பாதம் வரை காணப்பட்டது சாதாரணமாக 12  அங்குல அளவிட்கு அதன் பருமன் காணப்பட்டது. இந்த காரியமே என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. ஊழியத்தில் அநேகர் மீது நான் ஜெபிக்கும் படியாக கைகளை வைத்ததுண்டு ஆனால் இதை போன்ற ஒரு காரியம் எப்போதும் நடந்ததில்லை. ஏதோ நடக்கிறது என்று நான் கூறிக்கொண்டே ஜெபிக்கவும் கர்த்தரை துதிக்கவும் ஆரம்பித்தேன். உடனடியாக என் மனதில் பெரும் மகிழ்ச்சி உண்டானது எனது துக்கம் வேதனை எல்லாம் என்னை விட்டு போனதை உணர்ந்தவளாக மகிழ்ச்சியோடு ஜெபித்தேன். எல்லோருமாக ஜெபித்து கொண்டே இருந்தோம். சரியாக பி.ப. 4 மணிக்கு என் மகள் நிலத்திலே சரிந்து விழுந்தாள்.

 

அன்ஜளிக்கா

ஜெபித்து கொண்டிருந்தபோது என் சுவாசம் குறைந்தது, நான் மூச்சு விட கஷ்டப்பட்டேன். என் அடி வயிற்றிலும் மார்பிலும் ஒருவித வலி காணப்பட்டது. என் இரத்த ஓட்டம் குறைந்து போவதை உணர்ந்தேன் ஒரு பயங்கரமான வேதனை என் முழு உடம்பையும் வாட்டியது. அப்போது நான் "ஆண்டவரே பெலபடுத்துங்கள் பெலபடுத்துங்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். எனக்கு பெலன் இருக்கவில்லை அது என்னை விட்டு போனது! நான் ஆவியில் இருந்துதேன்  என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன் நான் வானம் திறப்பதை கண்டேன் ஆயிரக்கனக்கான தேவதூதர்கள் ஒன்று கூடுவதை கண்டேன். அந்த  ஆயிரக்கனக்கான தேவதூதர்களுக்கு மத்தியிலே, ஒரு ஒளி சூரியனை விட 10,000 மடங்கு அதிகமாக பிரகாசித்தது. அப்போது நான் "ஆண்டவரே அது நீங்களா? யார் வருவது  நீங்களா?" என்று கேட்டேன். 

 

மக்சிமா

அவள் கீழே விழுந்த போது நாங்கள் அவள் தானாக நிற்கும் படியாக அவளை தூக்கினோம் ஆனால் அவளுக்கோ முடியவில்லை. ஆனால் இப்போது அவளை எங்களால் தொட முடிந்தது. அவள் முனங்கினாள் "ஜெபியுங்கள் அம்மா ஜெபியுங்கள் எனக்கு பெலன் இல்லை எனக்கு பெலன் இல்லை என் உடல் வலிக்கிறது" என்றாள் முதலில் அவளுக்கு நெஞ்சு வலித்து பின்பு அந்த வலி அவளது அடி வயிறு வரை சென்றதாம். நாங்கள் கர்த்தரிடம் ஜெபித்து கொண்டும் மன்றாடிக்கொண்டுமிருந்தோம் அவர் அவளது உயிரை எடுத்து கொண்டார்!. 

 

அந்நாள் வரை யாரும் மரிப்பதை  நான் பார்த்தது கிடையாது. என் மகள் மரண வேதனை படுவதை, அவள் மரிப்பதை நான் பார்த்தேன், அது இலகுவான காரியம் இல்லை! அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகளை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை கடைசியாக ஏதோ சொல்லி முடித்தாள். அவளது முகத்தில் எனது கைகளை வைத்தேன், கண்ணாடி ஒன்றை அவள் மூக்கருகே வைத்து அவள் சுவாசிக்கின்றாளா? என்று பார்த்தேன் சுவாசம் இருக்கவில்லை, அவள் சற்று நின்றிருந்தாள். அவளை தொட்டு பார்த்தபோது அவள் உடலில் சாதாரணமான வெப்பம் இருந்தது. நான் ஒரு போர்வையை எடுத்து அவளை போர்த்தினேன். சற்று நேரத்தில் அவள் உடல் குளிர்ந்து போனது. தலை மயிரும் வாடி இறந்த மனித மயிரை போலானது அவள் உடல் மிகவும் குளிர்ந்து போனது.

 

 

அன்ஜளிக்கா

இயேசு கிறிஸ்து கீழே இறங்கி வந்தார், நான் என் உடல் மரிப்பதை உணர்ந்தேன்.  இயேசு கிறிஸ்துவும் தேவதூதர்களும் நெருங்கி வந்தனர், என் உயிர் உடலை விட்டு பிரிவதை உணர்ந்தேன் நான் மரித்தேன் அது மிகவும் வேதனையான வலியாக இருந்தது! என் உடல் நிலத்தில் விழும்போதே அவர்கள் இறங்கி வந்திருந்தனர். என் வீடு தேவதூதர்களால் நிறைந்திருந்தது, அவர்களுக்கு நடுவில் நான் ஒரு ஒளியை கண்டேன் அந்த ஒளி சூரியனை விட பிரகாசமாக இருந்தது! என் ஆவியும் ஆத்துமாவும் பிரியும் பொது நான் பாரிய வலியை உணர்ந்தேன் அது மிகவும் கடினம்!.

 

நான் கதறி அழுது, என் உடல் நிலத்தில் இருப்பதை கண்டேன். நான் "ஆண்டவரே என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது? நான் என் உடலை தொட வேண்டும் அதற்குள் போக வேண்டும்" என்றேன் ஆனால் நான் முயன்றபோது என்னால் அதை செய்ய முடியவில்லை என் உடலை தொட்டால் அது என் கைக்கு அகப்படாமல் காற்றை பிடிப்பதை போல ஊடுருவி சென்றது. அங்கு ஜெபித்து கொண்டு இருந்த ஒருவருக்கும் என் குரல் கேட்க வில்லை!. "ஆண்டவரே உதவி செய்யுங்கள் என்று கதரி கொண்டிருந்தேன்!". 

 

 

மக்சிமா

நாங்கள் ஜெபித்து கொண்டிருக்கும்போதே என் கணவரும் வந்து சேர்ந்தார் , மகளின் உடலை அவர் பார்த்தார். அவ்வேளையிலே என்ன செய்வதென்று எனக்கு தெரியாதிருந்தது கர்த்தர்  எனக்கு மிகுந்த பெலனை கொடுத்தார் . என் மகள் கோமாவில் இருப்பதை போல காணப்பட்டாள், ஆனாலும் எனக்கு தெரியும் அவளுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று காரணம் அது கர்த்தருடைய வேலையாய் இருந்தது. நான் கூறினேன் "கர்த்தாவே உங்கள் சித்தமே நடக்கவேண்டும்" என்று.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

அன்ஜளிக்கா

அப்போது நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குரலை கேட்டேன், அழகியகுரல் இடிமுழக்கத்தைபோல அன்பு நிறைந்த ஒரு குரல், "பயப்படாதே, என் மகளே, நானே யேகோவா  உன் தேவன், உன் கர்த்தர், நான் உனக்கு ஆணை இட்டதை உனக்கு காண்பிக்கும் படியாகவே இங்கே வந்திருக்கிறேன். எழுந்திரு நானே யேகோவா, உன் வலதுகையை பிடித்திருப்பவரும் பயப்படாதே உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்பவரும்" என்றார். உடனே நான் எழுந்தேன் அதற்கு முதல் நான் என் உடலருகே மண்டியிட்டு  அதற்குள் போக வகைதேடி கொண்டிருந்தேன். அவருடைய குரலை நான் கேட்டதும் என் பயம் என்னை விட்டு அகன்றது.

 

நான் நடக்க தொடங்கினேன் தேவதூதர்கள் விலகி எனக்கு வழிவிட்டனர். அங்கு ஒரு வல்லமையான ஒளி உதித்தது நான் அதையே நோக்கிப்பார்த்தேன், நான் என்னுள் சமாதானத்தை உணர்ந்தேன். நான் பார்த்தபோது மிக அழகான, உயர்ந்த, அபூர்வமான, கட்டுமஸ்த்தான, திடகாத்திரமான ஒரு மனிதனை கண்டேன். அவரிடமிருந்து வல்லமையான வெளிச்சம் புறப்பட்டது அவருடைய முகத்தில் அதிகமான ஒளி பிரகாசித்த படியால் எனக்கு அவருடைய முகத்தை பார்க்க கூடாமலிருந்தது ஆனால் நான் அவரது அழகிய தலைமயிரை பார்த்தேன் அது பசும்பொன்னை போல இருந்தது வெள்ளை நிறமான அங்கி அணிந்திருந்தார்  அவரது மார்பில் ஒரு பொன்னிறமான கச்சை காணப்பட்டது அதில் வார்த்தைகள் எழுதி இருக்கக்கண்டேன் அது "ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா" என்பதே.

 

அவர் கால்களில் தகதகவென மின்னக்கூடிய பசும் பொன்னாலான செண்ட்ல்ஸ் அணிந்திருந்தார். அவர் மிகவும் மிகவும் அழகாக இருந்தார்!! தன் கையை என்னிடமாக நீட்டினார் நான் அவர் கையை பிடித்தேன் அதன் பிறகு தான் என் உடம்பை என்னால் தொட முடிந்தது. நான் அவரிடம் "என்ன நடக்கின்றது?" என்று கேட்டேன் அதற்கு அவர் "நான் உனக்கு நரகத்தை காட்டப்போகிறேன், ஆகையால் நீ திரும்பி வந்து நரகத்தின் உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும்; நரகம் என்ற இடம் இருப்பது உண்மையே. அத்தோடு நான் என்னுடைய மகிமையான சொர்க்கலோக ராட்சியத்தையும் உனக்கு காண்பிப்பேன் ஆகையால் அந்த இடத்துக்கு செல்ல நீ என் ஜனங்களை ஆயத்தப்படும்படியாக சொல்லவேண்டும்.  என் மகிமையான சொர்க்கலோகம் உண்மையே!, நானும் உண்மையே! என்றார்.

 

பின்னும் அவர் "மகளே பயப்படாதே" என்று மறுபடியும் கூறினார். அதற்கு நான் "ஆண்டவரே நான் சொர்க்கத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் ஆனால் நரகத்தை பார்க்க விரும்ப வில்லை காரணம் நான் அது கொடுமை நிறைந்த இடம் என்று கேள்விப்பட்டதுண்டு" என்றேன். அவர் சொன்னார் "மகளே நான் உன்னுடன் இருக்கிறேன். நான் உன்னை அந்த இடத்தில் விட்டு விட மாட்டேன் உனக்கு நான் அந்த இடத்தை காட்ட வேண்டும் காரணம்  ஜனங்களில் பலர் நரகம் உண்மை என்பதை அறிந்துள்ளனர் ஆனால் அதைக்குறித்த பயம் அவர்களிடம் இல்லை அதை ஒரு விளையாட்டாகவும்,கேலியாகவும் எண்ணுகிறார்கள் இன்னும் பலருக்கு அதன் தன்மை தெரியாது. அதனால் தான் நான் உனக்கு அதை காட்டபோகிறேன் என் சொர்க்கலோக ராட்சியத்திற்குள் வரும் ஜனங்களை விட நரகத்தில் கெட்டு போகிறவர்கள்  அதிகமாக இருக்கிறார்கள்" என்றார் அவர் இதை சொல்லிமுடிக்கும்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவர் உடைகளை நனைத்தது. "ஆண்டவரே ஏன் அழுகின்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் மகளே அந்த இடத்திலே அதிகமான  ஜனங்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள். நரகத்திற்கு போவதை தடுக்கும் முகமாக நான் உனக்கு காட்டும் காரியங்களை நீ  ஜனங்களுக்கு சொல்ல வேண்டும்" என்றார்.

 

 

நரகம்

 

அவர் கதைத்து கொண்டிருக்கும்போதே திடீரென  நாங்கள் இருந்த இடம் நகர ஆரம்பித்தது பூமி குலுங்கி  பிளவுன்டு திறந்தது.  நான் இருண்ட பெரிய குழி போன்ற ஒரு சுரங்கம் கீழே இருப்பதை கண்டேன்.

 

நாங்கள் ஒரு பாறையில் நின்றிருந்தோம் தேவதூதர்கள் எங்களை சூழ இருந்தனர். அப்போது நான் "ஆண்டவரே நான் அந்த இடத்துக்கு போக வேண்டாம்" என்றேன். ஆண்டவர் சொன்னார் "மகளே பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்" என்றார். நொடிப்பொழுதில் நாங்கள் அந்த சுரங்க குழிக்குள் இறங்கி சென்றோம். அந்த சுரங்கம் பயங்கர இருட்டாக இருந்தது. நான் ஒரு பெரிய வட்டத்தை போல கண்டேன் ஆயிரக்கனக்கான குரல்களை கேட்டேன்.

 

நான் என் உடல் எரிவதை போல் அதிகப்படியான வெப்பத்தை உணர்ந்தேன், "ஆண்டவரே என்ன இது? நான் அந்த இடத்துக்கு போக வேண்டாம்" என்றேன். ஆண்டவர் சொன்னார் "இது நரகர்த்திற்கு செல்லும் சுரங்கபாதை மட்டுமே" என்றார். அங்கே பயங்கரமான, குமட்டக்கூடிய துர்நாற்றம் வீசியது நான் ஆண்டவரிடம் அங்கு போக வேண்டாம் என்று கெஞ்சினேன். "மகளே நீ இந்த இடத்தை தெரிந்து கொள்வது அவசியம்" என்றார். "ஏன்? ஆண்டவரே ஏன்?" என்றேன். "நீ நரகத்தின் உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும் என் சொர்க்கலோக ராட்சியத்திற்குள் வரும் ஜனங்களை விட நரகத்தில் கேட்டு போகிறவர்கள்  அதிகமாக இருக்கிறார்கள்" என்றார். அவருடைய வார்த்தைகள் என்னை தைரியப்படுத்தியது நான் தொடர்ந்து நடந்தேன்.

 

நாங்கள் அந்த சுரங்கத்தின் முடிவிற்கு வந்து சேர்ந்தோம் நான் நெருப்பால் நிறைந்திருந்த பாதாளத்தை கண்டேன். ஆண்டவர் சொன்னார் "மகளே நான் இதை உனக்கு தருகிறேன்" என்றார் அது இணைக்கப்பட்ட காகித தாள்களாக இருந்தது "மகளே இந்த பென்சில்லை எடுத்துக்கொள் அப்போது நீ  நான் உனக்கு காண்பிக்கின்ற, கூறுகிற, நீ உணருகிற, பார்க்கிற ஒவ்வொன்றயும் எழுதிக்கொள்ளலாம்" என்றார். அப்போது நான் "சரி ஆண்டவரே நான் செய்கிறேன் இப்போதும் நான் அநேக ஆத்துமாக்கள் நெருப்பினால் வெந்து வேதனைப்படுவதை காண்கிறேன்" என்றேன்.

 

மக்சிமா

நேரம் கடந்து கொண்டிருந்தது என் மகளுடைய சரீரம் அங்கேயே கிடத்தப்பட்டிருந்தது. "ஆண்டவரே என்ன நடக்கிறது?"  என்றேன் காரணம் என் மகளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது நான் துடைத்தேன் மீண்டும் வழிந்தது கண்ணாடி ஒன்றை அவள் மூக்கருகே வைத்து அவள் சுவாசிக்கின்றாளா? என்று பார்த்தேன் சுவாசம் இருக்கவில்லை நாடி துடிக்கவில்ல வயிற்றில் கைவைத்து பார்த்தேன் ஒன்றும் இல்லை அங்கே இருந்த கர்த்தருடைய ஊழியக்காரர் சொன்னார் "அவள் இப்போது பார்த்து கொண்டிருக்கின்ற இடம் சிரிக்க கூடிய இடம் இல்லை வேதனைப்படுகிற இடம்" என்றார்.

 

அன்ஜளிக்கா

நான் ஆண்டவரிடம் சொன்னேன் "நான் நரகம் என்பது உண்மை என்றும், அப்படி ஒரு இடம் இருக்கிறது என்றும் சாட்சி கொடுக்கிறேன் ஆனால் என்னை இப்போது இந்த இடத்திலிருந்து கொண்டு போய் விடுங்கள்!" என்றேன். அதற்கு கர்த்தர் பதிலாக "மகளே இன்னும் நாம் சரியான இடத்தை அடையவே இல்லை, இன்னும் நான் உனக்கு ஒன்றையும் காட்டவும் இல்லை. அதற்கு முன்பாக உன்னை இந்த இடத்திலிருந்து கொண்டு போய் விட வேண்டுமா?" என்றார். ஆனால் நான் "ஆண்டவரே தயவு செய்து என்னை இந்த இடத்திலிருந்து கொண்டு போய் விடுங்கள்!" என்றேன். நாங்கள் பாதாளத்துக்குள் கடந்து செல்ல ஆரம்பித்தோம். "ஆண்டவரே வேண்டாம் வேண்டாம் நான் போகக்கூடாது" என்றேன். அதற்கு அவர் நீ கட்டாயம் இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்றார்.

 

பயங்கரமான பிசாசுகளை நான் பார்த்தேன் பெரிதும் சிறிதுமாக எல்லாவிதத்திலும் அவை காணப்பட்டன. அவைகள்  கைகளில் எதையோ தூக்கிக்கொண்டு  வேகமாக ஓடிக்கொன்டிருந்தன. "ஆண்டவரே அவைகளது கைகளில் என்ன? எங்கே இவ்வளவு வேகமாக ஓடுகின்றன?" அதற்கு கர்த்தர் "மகளே அவைகளுக்கு தங்கள் முடிவு சீக்கிரம் வந்து கொண்டிருக்கிறது என்று தெரியும் அதனால் முடிந்தளவு மனிதர்களை அழிக்கும் படிக்கு ஓடிக்கொனடிருக்கின்றன குறிப்பாக என் ஜனங்களை அழிக்கும் படிக்கு…. அவைகளது கையில் இருப்பது மனிதர்களை அழிக்கும் படிக்கு வீசக்கூடிய முட்கள். ஒவ்வொரு பிசாசிற்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பெயரின் படி அவைகளுக்கு  வீசக்கூடிய முள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பெயருள்ள மனிதனை அழித்து இந்த நரகத்திற்க்கு கொண்டு வரும்படியான  முள்ளே அவைகளது கையில் இருக்கிறது. அவைகளது லட்சியம் அந்த குறிப்பிட்ட நபரை நரகத்திற்கு கொண்டு வருவதே" என்றார். நான் பார்த்தேன் பிசாசுகள் பூமிவரை ஓடியது ஆண்டவர் சொன்னார் "அவைகள் ஓடுவது மனித இனத்தை இதற்க்குள் கொண்டுவரவும் வீசவுமே" என்று. அவர் இவற்றை சொல்லி கொண்டே அழுதார் மிகவும் அழுதார். எல்லா சந்தர்பங்கள்ளிலும் அழுதார் நானும் அவரோடு சேர்ந்து அழுதேன்.

 

 

 

மக்சிமா

என் மகள் 23  மணித்தியாலங்கள் மரித்திருந்தாள் நான் அதைக்குறித்து எந்த ஒரு அதிகாரிக்கும் தகவல் கொடுக்கவில்லை நான் ஜெபித்து கர்த்தரிடம் "கர்த்தாவே நான் 24  மணித்தியாலங்கள் பார்ப்பேன் என் மகள் உயிரடையாவிட்டால் வைத்தியருக்கு தகவல் கொடுப்பேன்" என்றேன். ஆனால் கர்த்தர் என் மகளை 24  மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே உயிரோடு எழுப்பினார்.

 

அன்ஜளிக்கா

ஆண்டவர் என்னிடம் "நான் உனக்கு காண்பிக்கும் காரியங்களை பார்க்க நீ ஆயத்தமா?" என்றார். நான் "ஆம் ஆண்டவரே" என்றேன். அவர் என்னை செல் எனப்படும் சிறிய அறைக்கு அழைத்து போனார் அங்கே ஒரு வாலிபன் நெருப்பில் வெந்து வேதனைப்பட்டு கொண்டிருந்தான். நான் கவனித்தேன் அந்த சிறிய அறை வரிசைபடுத்த பட்டிருந்து, அவைகளின் இலக்கங்கள் எனக்கு விளங்க வில்லை  அவைகள் பின்னிருந்து காணப்பட்டது.அங்கே ஒரு பெரிய பெயர்ப்பொறி கல் காணப்பட்டது. அந்த வாலிபன் தன் நெற்றியில் 666 என்ற இலக்கத்தை உடையவனாக இருந்தான். அத்தோடு ஒரு உலோகத்தகடு அவனது தோளோடு இணைக்கப்பட்டிருந்தது புழுக்கள் அவனை தின்றது. அந்த உலோக தகட்டை மட்டும் புழுக்களுக்கோ நெருப்பிற்கோ பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஆண்டவரை பார்த்து அவன் கதறினான் "ஆண்டவரே என் மீது இறக்கம் காட்டுங்கள் இந்த இடத்திலிருந்து என்னை வெளியே எடுத்து விடுங்கள். என்னை மன்னியுங்கள் ஆண்டவரே" என்றான். கர்த்தர் பதிலாக "இப்போது மிகவும் பிந்தி விட்டது. நான் உனக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்களை கொடுத்தேன் நீ மனந்திரும்பவில்லை" என்றார்.

 

நான் "ஆண்டவரே இவன் ஏன் இங்கிருக்கிறான்?" என்றேன், எனக்கு விளக்கப்பட்டது. பூமியில் அவன் இருக்கும் போது அவனுக்கு கர்த்தருடைய வார்த்தை தெரிந்திருந்தும் அவன் கீழ்படியவில்லை போதை பொருட்களை விரும்பி பாவித்தான் தீயவழியில் நடந்தான். கர்த்தர் அநேக முறை எச்சரித்தும் அவனுக்கு அவரை பின்பற்ற பிடிக்கவில்லை. ஆண்டவர் "மகளே இவன் இங்கிருப்பது என் வார்த்தைகளை தள்ளிவிட்டதால் தான், யாராவது என் வார்த்தைகளை தள்ளிவிட்டால் அதுவே அவர்களுடைய நியாயத்தீர்ப்பு: நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். (யோவான் 12:48 ) என்று சொல்லி அழுதார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அழும் விதமானது பூமியில் எந்த ஒரு மனிதனும் அழும் விதத்தை பார்க்கிலும் அதிக வித்தியாசமானது. உள்ளத்திலிருந்து மிகவும் வேதனைப்பட்டு தேம்பி அழுதார், "நான் நரகத்தை உண்டாக்கியது மனிதவர்க்கத்திற்காக அல்ல" என்றார் அப்போது ஏன் ஆண்டவரே மனிதர்கள் இங்கிருக்கிறார்கள்? என்றேன்" அவர் "மகளே நான் நரகத்தை உண்டாக்கியது சாத்தானுக்காகவும் அவன் தூதர்களான பிசாசுகளுக்காகவுமே;(மத்தேயு 25:41) ஆனால் பாவத்தினாலும் மனந்திரும்பாததாலும் மனிதர்களுடைய முடிவு நரகத்தில் காணப்படுகின்றது. என்னுடைய ராட்சியத்துக்கு வருபவர்களை விட கெட்டுபோகும் ஜனங்களே அதிகமாக இருக்கிறார்கள்(மத்தேயு 7: 14)" என்றார். அவர் தொடர்ந்தும் அழுதார் அவர் அழுத விதம் என்னை மிகவும் வருத்தப்படுத்தியது."மகளே ஒருவரும் கெட்டு போகாதபடிக்கும் அவர்களது முடிவு இங்கே வராத படிக்குமே நான் மனிதவர்கத்திற்காக என் ஜீவனை கொடுத்தேன். என் அன்பிற்கும் இறக்கத்திற்கும் மேலாக என் ஜீவனையே நான் கொடுத்தது எல்லா ஜனங்களும் மனந்திரும்பி பரலோக ராட்சியத்தை சுதந்தரித்து கொள்ளும் படியாகத்தான்." என்றார். வேதனையை வலியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் வருந்தி புலம்புவதை போல இங்கே இருக்கும் மனிதர்களை பார்த்து ஆண்டவர் வருந்துகின்றார்.

 

ஆண்டவரோடு கூட இருந்தது எனக்கு பாதுகாப்பாக இருந்தது. "நான் கர்த்தரை விட்டு போனால், இங்கேயே தரிக்க நேரிடும்!" என்று நினைத்தேன். "ஆண்டவரே எனது உறவினர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா?" என்று கேட்டேன். அவர் என்னை பார்த்தார் நான் அழுது கொண்டிருந்தேன். நான் பயந்திருந்த படியால் "மகளே நான் உன்னுடனே இருக்கிறேன்" என்றார். அவர் என்னை இன்னொரு சிறிய அறைக்கு அழைத்து போனார். நான் கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை அந்த அறையிலே நான் என்னுடைய ஒரு உறவினரை பார்ப்பேன் என்று. நான் அங்கே நெருப்பில் எரிந்து வேதனைப்பட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தேன் புழுக்கள் அவள் முகத்தை தின்று கொண்டிருந்தன, பிசாசுகள் அவளுடைய உடலை  ஈட்டியால் குத்தி கொண்டிருந்தன. அவள் கர்த்தரை பார்த்து கதறினாள் ஆண்டவரே என்மீது இரக்கம் காட்டுங்கள், என்னை மன்னியுங்கள், இங்கிருந்து ஒரு நிமிடத்திற்கு மாத்திரம் என்னை வெளியே விடுங்கள்" (லூக்கா 16:24)  என்று கெஞ்சினாள்  அவள் என் பெரிய பாட்டி .

 

நரகத்திலே, வேதனைப்படும் மனிதர்களுக்கு அவர்கள் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை நன்றாக நினைவிருக்கிறது. பிசாசுகள் அவர்களை அடித்து நொறுக்கி அவர்களிடம் "துதித்து ஆராதனை செய் இதுவே உன் ராட்சியம்" என்று சொல்லுகிறது. அந்த மனிதர்களோ கர்த்தரை அவர்கள் மறுதலித்த விதத்தை நினைத்து நினைத்து கதறுகிறார்கள். கர்த்தரை அறிந்து அவரை மருதலித்தவர்கள் இரட்டிப்பான வேதனையை அனுபவிக்கிறார்கள்.

 

ஆண்டவர் சொன்னார் "இங்கே இருப்பவர்களுக்கு வேறொரு சந்தர்ப்பம் இல்லை: இன்னும் உயிருடன் இருப்பவர்களுக்கு தான் சந்தர்ப்பம் இருக்கிறது" என்றார். நான் கேட்டேன் ஆண்டவரே ஏன் என்  பெரிய பாட்டி இங்கே இருக்கிறாள்?, அவள் உங்களை அறிந்திருந்தாளா என்று எனக்கு தெரியாது  அவள் ஏன் இங்கே இருக்கிறாள்? என்றேன். அதற்கு கர்த்தர் "மகளே அவள் மற்றவர்களுக்கு மன்னிப்பு கொடுக்காததால் தான் இங்கே இருக்கிறாள்... மகளே மற்றவர்களை மன்னிக்காதவர்களை என்னாலும் மன்னிக்க முடியாது" என்றார்.

 

நான் "ஆண்டவரே நீங்கள் இரக்கம் நிறைந்தவரே மன்னிப்பவரே" என்றேன் அதற்கு அவர் "ஆம் மகளே, மன்னிப்பது அவசியம் அநேகர் மற்றவர்களை மன்னிப்பதில்லை அதனால் தான் இந்த இடத்தில் மன்னிக்காதவர்கள் அநேகர் இருக்கிறார்கள். மன்னிக்கும் தருணம் இதுதான் என்று நீ போய் மனிதர்களிடம் கூறு விசேஷமாக என் மக்களிடம் கூறு என் மக்கள் அநேகர் மற்றவர்களை மன்னிப்பதில்லை.  தாங்கள் விரும்பாத காரியங்களிலிருந்து தங்களை விடுவித்து கொள்ளுமாறு கோபத்தையும் பகைமையையும் விட்டு மற்றவர்களை மன்னிக்கும் படி கூறு. மன்னிக்க மறந்தவன்  ஆச்சரியவன்னமாக நரகத்திற்கு போவான் அங்கிருந்து ஒருவரும் அவன் ஆத்துமாவை ஆதாயப்படுத்த முடியாது" என்றார். நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம் என் பெரிய பாட்டி நெருப்பிலே வெந்து "ஆஆஆ" என்று கதறினாள் கர்த்தரை திட்டவும் சபிக்கவும் தொடங்கினாள். நரகத்திலிருக்கும் எல்லா மனிதர்களும் கர்த்தரை திட்டவும் சபிக்கவுமே செய்கிறார்கள்.

 

நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம், அங்கே வெந்து வேதனைப்படுகிற அநேக ஆத்துமாக்களை கண்டேன். அநேக மனிதர்கள் தங்களுக்கு உதவி செய்யும்படி தங்கள் கைகளை ஆண்டவருக்கு நேரே நீட்டி கெஞ்சினார்கள். ஆண்டவர் எதுவும் செய்யவில்லை அதனால் அவர்கள் கோபத்தால் அவரை திட்ட சபிக்க தொடங்கினார்கள். அப்போது கர்த்தர் அழுதுகொண்டே சொன்னார் "அவர்கள் சத்தத்தை கேட்பதும் அவர்களை பார்ப்பதும் எனக்கு மிக வேதனையாக இருக்கிறது காரணம் எனக்கு இவர்களுக்கு உதவி செய்யும் சந்தர்ப்பம் கடந்து விட்டது. ஆனால் இன்னும் பூமியில் உயிரோடு இருப்பவர்களுக்கு உதவ என்னால் முடியும் அவர்களுக்கு மனந்திரும்புவதற்கான நேரம் இன்னும் இருக்கிறது" என்றார்.

 

பிரபல்யமான பலர் நரகத்திலே இருப்பதாக கர்த்தர் கூறினார். அத்தோடு பலர் கர்த்தரை அறிந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். "நான் இன்னுமொரு அக்கினி மயமான பகுதியை உனக்கு காட்டப்போகிறேன்" என்றார் நாங்கள் ஒரு இடத்திற்கு வந்தோம் அங்கே ஒரு பெண் நெருப்பினால் சுற்றி வலைக்கப்பட்டு அதிக வேதனைப்பட்டாள் அவள் ஆண்டவரை கண்டதும் இரக்கம் கேட்டு கெஞ்சினாள்.  அவளுக்கு நேராக கர்த்தர் கைகளை நீட்டி "மகளே நீ அங்கே பார்க்கும் பெண் தான் செலினா " என்றார் நாங்கள் அவளருகே நெருங்கியதும் அவள் அதிகதிகமாக சத்தமிட்டு கெஞ்சினாள்ஆண்டவரே என்மீது இரக்கம் காட்டுங்கள், என்னை மன்னியுங்கள், இங்கிருந்து என்னை வெளியே எடுத்து விடுங்கள்" என்றாள். ஆனால் கர்த்தர் அவளுக்கு மறுமொழியாக "இப்போது மிகவும் பிந்தி விட்டது. உனக்கு மனந்திரும்ப இனி சந்தர்ப்பம் இல்லை" என்றார். 

 

அப்போது அவள் என்னை பார்த்து "நான் உன்னை கெஞ்சி கேட்கிறேன் உலகத்திற்கு போய் சொல் சொல்லாமல் விடாதே மனிதர்களை இந்த இடத்திற்கு வரவேண்டாம் என்று சொல், அவர்களிடம் என் பாடல்களை கேட்க வேண்டாம் என்று சொல் என் பாடல்களை பாடவேண்டாம் என்று சொல் (1 யோவான் 2 :15)  " என்றாள். நான் அவளிடம் "ஏன் நான் இதை சொல்லும் படி கேட்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவள்  "மனிதர்கள் என் பாடல்களை கேட்கும்போதும் பாடும்போதும் இங்கே என் வேதனை அதிகதிகமாக இருக்கிறது. ஒருவன் அப்படி செய்யும் போது அந்த காரியம் இங்கே வந்து என்னை அதிகமாக சித்திரவதை செய்கிறது ஆகையால் தயவு செய்து போய் அவர்களிடம் சொல் இந்த இடத்திற்கு வரவேண்டாம் என்று சொல் நரகம் உண்மை என்று சொல்" என்றாள். அவள் கெஞ்சினாள் அப்போது பிசாசுகள்  தூரத்திலிருந்து  வேகமாக வந்து அவளை தாக்கியது அவள் கதறி அழுதாள்.ஆண்டவரே இரக்கம் காட்டுங்கள், மன்னியுங்கள் என்றாள். கர்த்தர் வேதனையோடு "இப்போது மிகவும் பிந்தி  விட்டது" என்றார்.

 

நான் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்த போது அந்த இடமானது இறந்துபோன பாடகர்களாலும் கலைஞர்களாலும் நிறைந்திருந்தது. அங்கே அவர்கள் நிறுத்தாமல் பாடி பாடி கொண்டே இருக்கிறார்கள். ஆண்டவர் எனக்கு விளங்கப்படுத்தினார் "மகளே ஒரு மனிதன் மனந்திரும்பாவிட்டால் அவன் பூமியில் எதை செய்தானோ அதை இங்கே இடைவிடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்." என்றார்.

 

நான் அந்த பகுதியை கவனித்த போது, ஒரு பகுதியில் திரளான பிசாசுகள் ஒரு விதமான மழையை பொழிகின்றது. நான் அதை மழை என்று நினைத்தேன். ஆனால் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அதற்கு விலகியோடி கதறுகிறார்கள் " வேண்டாம், உதவி செய்யுங்கள், ஆண்டவரே உதவி செய்யுங்கள். முடியாது இப்படி இருக்க முடியாது" என்று கதறுகிறார்கள் அப்பொழுது அந்து பிசாசுகள் சிரித்து கொண்டு அவர்களிடம் "துதித்து ஆராதனை செய்யுங்கள் இதுவே உங்கள் முடிவில்லாத ராட்சியம்" என்கின்றன. நான் பார்த்தபோது அவர்களுடைய நெருப்பும் புழுக்களும் அதிகரிக்கின்றன!. அந்த மழையில் தண்ணீர் இல்லை அவை கந்தக கற்கள் அவை அந்த மனிதர்களின் நெருப்பை அதிகரிக்க செய்து பொறுக்கமாட்டாத வலியை ஏற்படுத்துகிறது. நான் ஆண்டவரிடம் "ஆண்டவரே இது என்ன?, என்ன நடக்கிறது?" என்றேன். அதற்கு கர்த்தர் "இதுதான் மனந்திரும்பாதவர்களின் கூலி (சங்கீதம் 11 :6 )" என்றார்.

 

எல்லோருக்கும் பிரபல்யமான ஒரு மனிதன் இருக்கும் இடத்திற்கு கர்த்தர் என்னை அழைத்து வந்தார். என் ஆரம்ப நாட்களில் இருமனம் கொண்ட வாலிப பெண்ணாக நான் வாழ்ந்தேன். நான் எபோதும் நினைத்தேன் ஒருவர் மரித்தால் சொர்க்கத்திற்கு போவதாக; சபை கூட்டங்களை ஆசரிப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாக, ஆனால் நான் நினைத்தது பிழை. இரண்டாவது பாப்பரசர் என்று சொல்லப்படும் ஜோன் போல்மரித்தார், என் நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் அவர் சொர்க்கத்திற்கு தான் சென்றிருப்பார் என்றனர். எல்லா தொலைக்காட்சி (டிவீ)  செய்திகளிலும், மற்ற இடங்களிலும் "இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்சமாதானமாக இளைப்பாறுகிறார். அவர் ஆண்டவரோடும் தேவதூதர்கலோடும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்றனர். நானும் அவை எல்லாவற்றையும் விசுவாசித்தேன் அது என் முட்டாள் தனம், காரணம் நான் அந்த மனிதனை நரகத்திலே பார்த்தேன். அவர் முகத்தை பார்த்தேன் அவர் இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்ஆண்டவர் சொன்னார் "மகளே நீ அங்கு பார்க்கும் மனிதன் இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்2. அவன் இங்கே தான் இருக்கிறான். மனந்திரும்பாத காரணத்தினால் அவன் இங்கு வெந்து வேதனைப்படுகிறான்" என்றார்.

 

நான் "ஆண்டவரே ஏன் இந்த மனிதன் இங்கே இருக்கிறான் இவன் எப்போதும் சபைகளில் உபதேசம் செய்பவன் அல்லவா" என்றேன். அதற்கு ஆண்டவர் "மகளே விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது என்னுடைய ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை(எபேசியர் 5:5)" என்றார். அது உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன் ஆண்டவரே ஆனால் இந்த மனிதன் எப்படி இங்கு? இவன் ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு உபதேசம் செய்தவன் அல்லவா? என்றேன். கர்த்தர் பதிலாக "ஆம் மகளே இவன் அநேக உபதேசங்களை செய்தான் ஆனாலும் ஒரு நாளும் சத்தியத்தை உபதேசிக்கவில்லை.  இவனுக்கு சத்தியம் நன்றாக தெரியும் ஆனாலும் இவன் இரட்சிப்பை விட பணத்தையே அதிகம் விரும்பினான். இவன் உண்மையை மதிக்கவில்லை பரலோகமும் நரகமும் உண்மை என்று ஜனங்களுக்கு  சொல்லவில்லை இப்போது இந்த நரகத்தில் வெந்து வேதனைப்படுகிறான்" என்றார்.

 

நான் இந்த மனிதனை பார்த்த போது ஆணிகளால் நிறைந்த ஒரு பெரிய பாம்பு அவனுடைய தொண்டையை சுற்றி இருக்கிக்கொண்டிருந்தது அவன் அதை எடுக்க போராடிக்கொண்டிருந்தான். நான் ஆண்டவரிடம் கெஞ்சினேன் "ஆண்டவரே இவனுக்கு உதவுங்கள்" என்று, அந்த மனிதனும் கதறினான் "ஆண்டவரே எனக்கு உதவுங்கள்! என் மீது இறக்கம் காட்டுங்கள், இந்த இடத்திலிருந்து என்னை வெளியே எடுத்து விடுங்கள், என்னை மன்னியுங்கள் ஆண்டவரே. நான் மனந்திரும்ப மறுபடியும் பூமிக்கு செல்லவேண்டும்" என்றான். ஆண்டவர் அவனுக்கு சொன்னார் "உனக்கு நன்றாக தெரியும் இந்த நரகம் உண்மை என்று, இப்போது மிகவும் பிந்தி விட்டது உனக்கு வேறு சந்தர்ப்பம் இல்லை" என்றார்.

 

ஆண்டவர் என்னிடம் "மகளே பார் நான் இந்த மனிதனுடைய வாழ்க்கையை உனக்கு காட்டுகிறேன்" என்றார். ஒரு பெரிய திரையிலே இவனுடைய வாழ்க்கை எனக்கு காட்டப்பட்டது இவன் ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு உபதேசம் செய்வதும் அந்த ஜனங்கள் அதிக விக்கிரகாராதனைக்காரராக இருப்பதையும் நான் பார்த்தேன்" ஆண்டவர் சொன்னார் "பார் மகளே, இந்த இடத்தில் அநேக விக்கிரகாராதனைக்காரர்கள் இருக்கிறார்கள், விக்கிரகாராதனை ஒரு மனிதனை விடுதலை செய்யாது நான் மட்டுமே எவரையும் விடுதலை செய்வது. என்னை அல்லாமல் விடுதலை செய்ய யாருமே கிடையாது. நான் பாவியை நேசிக்கிறேன் பாவத்தையோ வெறுக்கிறேன். மனிதர்களிடம் போய் சொல் நான் அவர்களை நேசிக்கிறேன் அவர்கள் என் பக்கமாக திரும்புவது அவசியம்" என்றார். 

 

ஆண்டவர் பேசி கொண்டிருக்கும் போது, இந்த மனிதன் எப்படி கோடிக்கணக்கான பணத்தை பெறுகிறான் என்று திரையிலே பார்த்தேன் அதிகமான பணம் இவனிடம் இருந்தது. ஒரு சிங்காசனத்தில் இவன் வீற்றிருந்தான் அவனுடைய மறைவான காரியங்களும் எனக்கு காட்டப்பட்டது. கர்த்தர் எனக்கு காட்டிய ஒரு உண்மையை கூறுகிறேன் இது  என்னால் உண்டாக்கப்பட்டதல்ல, இந்த மனிதர்கள் திருமணம் முடிப்பதில்லை என்பது உண்மை ஆனால், இந்த மனிதர்கள் கன்னியாஸ்திரிகளுடன் விபச்சாரம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் அங்கே அநேக பெண்கள் உண்டு!. (இதோ ஒரு கன்னியாஸ்திரியின் சாட்சி: http://www.youtube.com/watch?v=-Q_aj8YPaKE ) 

 

இந்த மனிதர்கள் விபசாரத்தில் வாழ்வதை ஆண்டவர் எனக்கு காண்பித்தார், கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது விபசாரகாரர்கள் அவருடைய ராட்சியத்தை சுதந்தரிப்பதில்லை என்று. ஆண்டவர் சொன்னார் "மகளே பார் நான் உனக்கு காட்டுவதெல்லாம் அநேக மனிதர்களிடம் தற்போதும் நடக்கிறது, அதில் அநேக திருச்சபை தலைவர்களும், குருமார்களும் இருக்கின்றனர். மகளே மனிதர்களிடம் நீ  போய்  அவர்கள் மனந்திரும்பும் நேரம் இதுதான் என்று சொல்" என்றார்.

 

அநேக மனிதர்கள் நரகத்தை நோக்கி நடந்து வரும் ஒரு இடத்தை கர்த்தர் எனக்கு காண்பித்தார். நான் கேட்டேன் "ஆண்டவரே அவர்கள் எப்படி இந்த இடத்தை நோக்கி நடக்கிறார்கள்? என்றேன், அவர் எனக்கு ஒரு சுரங்கத்தை காண்பித்தார் அதற்கூடாக அநேகர் நடக்கின்றார்கள் அவர்களது கைகளிலிருந்து கால்கள்வரை சங்கிலிகளால் கட்டபட்டிருக்கின்றது. அவர்கள் கருப்பு உடை அணிந்தவர்களாக தங்களுடைய தோள்களில் சுமைகளை சுமந்தவர்களாக வந்து கொண்டிருக்கின்றனர். ஆண்டவர் சொன்னார் "மகளே நீ பார்க்கும் மனிதர்கள் இன்னும் என்னை அறியாதவர்கள் அவர்கள் சுமப்பது அவர்களது பாவசுமையே அவர்களிடம் போய் சொல் என்பக்கமாக திரும்பி அவர்களது சுமைகளை என்மீது வைக்கும் படி அப்போது நான் அவர்களுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவர்களிடம் நீ போய் சொல் அவர்கள் இந்த நரகத்தை நோக்கியே நடக்கிறார்கள் நானோ என் கரங்களை நீட்டிய வண்ணம் அவர்களுக்காக காத்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

 

நடந்து வரும் மனிதர்களை நான் கவனித்தபோது. நான் சொன்னேன் "ஆண்டவரே அதோ அங்கே நடந்து வரும் வாலிபன் என் மைத்துனன், அந்த வாலிப பெண் என் மைத்துனி என் உறவினர்கள் இங்கே வருகிறார்கள்!" என்றேன். ஆண்டவர் சொன்னார் "மகளே நீ அவர்களிடம் போய் அவர்கள் நரகத்திற்கு வருகிறார்கள் என்று சொல் இதோ நான் உன்னை என் காவலாளியாக வைத்தேன் அதற்கே உன்னை தெரிந்து கொண்டேன் ஆகையால் நீ உண்மையை சொல்வது அவசியம். நான் உனக்கு காட்டிய எல்லாவற்றையும்  நீ போய் சொல்ல வேண்டும். நீ சொல்லாமல் அந்த மனிதனுக்கு ஏதும் நடந்தால் அவனது ரத்தபலியை உன் கையில் கேட்பேன். நீ அவனை எச்சரித்தும் அவன் மனந்திரும்பாவிட்டால் அவன் ரத்தப்பலி அவன் தலைமீதே இருக்கும் நீயும் உன்னை தப்புவித்து கொள்வாய் (எசேக்கியேல் 3 :17 -19) என்றார்.

 

பல பிரபலங்களும் முக்கியஸ்தர்களும் இந்த இடத்தை நோக்கி வருவதாக ஆண்டவர் சொன்னார். உதாரணமாக "மைக்கேல் ஜாக்சன்" இந்த மனிதன் முழு உலகத்திற்கும் தெரிந்தவன் ஆனாலும் இவன் ஒரு சாத்தான் பக்தன். பலருக்கு இது தெரியாதிருந்தாலும் இது உண்மையே. இவனுக்கு அதிகமான ரசிகர்கள் ஏற்படும் படியாகவும் இவனுடைய பாடல் அதிக புகழ் அடையும் படியாகவும்  இவன் சாத்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தான்.

 

இப்படித்தான் இவன் முன்னேறி இருக்கிறான், பிசாசுகள் நரகத்தில் சத்தமிட்டு கொண்டே மனிதர்கள் மேல் பின்புறமாக சறுக்கி விழுகிறது முன்னதாக நகர்வதில்லை, விழுந்து மனிதர்களை மிகவும் கொடுமையாக வேதனைப்படுத்தி மகிழ்ச்சியடைகின்றது. ஆண்டவர் மைகேல் ஜாக்சன் நரகத்தில் படும் பாடுகளை எனக்கு காட்டினார் என்னால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. அவன் கொடுமைப்படும் விதத்தையும் கதறும் விதத்தையும் சகிக்க முடியாது. நான் ஆண்டவரிடம் "ஏன்?" என்று கேட்டு கொண்டே கதறி அழுதேன். மைகேல் ஜாக்சனுடைய ரசிகர்களுக்கும் அவனுடைய பாடல்களை கேட்பவர்களுக்கும் நான் எச்சரிப்பாக சொல்வது என்னவென்றால் சாத்தான் உங்களை வஞ்சிக்கிறான் உங்களுடைய முடிவு நரகத்தில் தான் இருக்கும். இப்போதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவற்றை கைவிட்டு, மனந்திரும்புங்கள். கர்த்தர் உங்களை விடுதலைசெய்ய விரும்புகிறார். அப்போது நீங்கள் கெட்டுபோவதில்லை.

 

ஆண்டவர் சொன்னார் "மகளே என்னை அறிந்த மனிதர்களும் இந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்" என்றார். நான் "ஆண்டவரே எப்படி உங்களை அறிந்தவர்கள் இங்கே வருகிறார்கள்?" என்றேன். அதற்கு அவர் "அவர்கள் என் வழிகளை கைவிட்டு இருமனமுள்ள வாழ்க்கை வாழ்கிறார்கள்" என்றார். யாரெல்லாம் நரகத்தை நோக்கி வருகிறார்கள் என்பதை கர்த்தர் காண்பித்தார் அவர்கள் கைமுதல் கால் வரை சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். 

 

அவர்கள் வெள்ளை உடை அணிந்திருந்தனர் ஆனால் அது அழுக்காகவும் கரைபடிந்தும் கிழிந்தும் கசங்கிய நிலையிலும் காணப்பட்டது. "மகளே எந்த அளவு என் ஜனங்கள் என்னை விட்டு  விலகி நடக்கிறார்கள் என்று பார், மகளே என் ரகசிய வருகையானது இப்படிப்பட்டவர்களுக்காக அல்ல, நான் வருவதோ பரிசுத்தமாகவும், குற்றம் சாட்டப்படாமலும், கசங்காத கறைபடியாத ஜீவியம் செய்பவர்களுக்க்காகவுமே, ஆதலால் ஆதி கிரியைகளுக்கும் ஆதி அன்புக்கும் திரும்பும் படி அவர்களிடம் சொல்(எபேசியர் 5:26 -27)" என்று ஆண்டவர் சொன்னார். நான் பார்த்தபோது எனது உறவினர்களும் இன்னும் அநேகரும் கர்த்தரை விட்டு விலகி நடப்பதை கண்டேன். ஆண்டவர் என்னிடம் "மகளே நான் அவர்களுக்காக காத்துகொண்டிருக்கிறேன் அவர்களோ இந்த இடத்தை நோக்கிவருகிறார்கள்! உன் உறவினர்களிடம் நீ போய் உண்மையை சொல். மகளே பலர் உன்னை விசுவாசிக்க மாட்டார்கள், ஆனால் நான் உன் நம்பிக்கைக்குரிய சாட்சியாய் இருக்கிறேன், நான் உன்னை கைவிடமாட்டேன், அவர்கள் உன்னை விசுவாசிக்காவிட்டாலும் நான் உன் நம்பிக்கைக்குரிய சாட்சியாய் இருக்கிறேன். அவர்களிடம் போய் உண்மையை சொல். அவர்கள் எவ்விதம் இங்கு வருகிறார்கள் என்பதை நான் உனக்கு காட்டுகிறேன்" என்றார்.

 

நாங்கள் ஒரு சுரங்கத்தண்டையிலே போனோம் அங்கே அதிகமான மனிதர்கள் பாதாள குழிக்குள் விழுந்து கொண்டிருந்தனர் ஆயிரம் ரெண்டாயிரம் பேர் அல்ல. கடல் மணலத்தனையான  எண்ணிக்கைற்ற ஜனங்கள். கை நிறைய மணலை அல்லி வீசுவதைப்போல் அவர்கள் நொடிப்பொழுதில் அதிவேகமாக விழுகின்றனர். இயேசு கிறிஸ்து அழுதுகொண்டே சொன்னார் "இப்படித்தான் மகளே மனிதகுலம் அழிந்து கொண்டிருக்கின்றது இதை பார்ப்பது எனக்கு மிகுந்த வேதனையை  தருகின்றது" என்றார். 

 

ஆண்டவர் "பிசாசுகள் இந்த இடத்திலே கூட்டங்களை நடத்தும்" என்றார். நான் "பிசாசுகள் கூட்டம் நடத்துமா?" என்றேன். அதற்கு அவர் "ஆம் மகளே அவைகள் ரகசியமாக ஒவ்வொரு நாளும் கூட்டம் கூடி மனிதவர்க்கத்தை எப்படி அழிக்கலாம் என திட்டமிடும்" என்றார். அவர் என்னை ஒரு இடத்திற்கு அழைத்த்து சென்றார் அங்கே ஒரு பெரிய மேசையையும் அதை சுற்றிலும் கதிரைகளையும் நான் கண்டேன் அங்கே எல்லா விதமான பிச்சாசுகளும் இருந்தன. ஆண்டவர் என்னிடம் "மகளே இவைகள் இப்போது போதகர்களையும், சுவிசேஷகர்களையும், என்னை அறிந்த யாவரையும், அவர்கள் குடும்பங்களையும், எப்படி நிர்மூலமாக்கலாம் என்று திட்டமிடுகின்றன. அவர்களை நிர்மூலமாக்குவதே இவைகளுடைய தேவை இவைகளிடம் அநேக விதமான குறிவைத்து வீசும் முல்லுகள் இருக்கின்றன" என்றார். 

 

பிசாசுகள் சிரித்து கேலியாக, நாம் போய் மனிதர்களை நிர்மூலமாக்கி இந்த இடத்துக்கு கொண்டு வருவோம் என்றன. ஆண்டவர் சொன்னார் "ஜனங்களிடம் நீ போய்; நான் அவர்களோடு இருக்கிறேன் என்றும், தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1 பேதுரு 5 :8 ) என்றும் சொல்" என்றார். வார்த்தை சொல்கிறது கெர்ச்சிக்கிற சிங்கம்போல் என்று தான் ஆனால் மெய்யான சிங்கம் யூதாவின் சிங்கமே அது நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவே (வெளிப்படுத்தல் 5:5) ஆண்டவர் சொன்னார் "மகளே முக்கியமாக ஊழியக்காரர்களை நிர்மூலமாக்குவதே பிசாசுகளுக்கு தேவை" என்றார். " நான் "ஏன் ஆண்டவரே முக்கியமாக ஊழியக்காரர்களை? என்றேன். ஆண்டவர் பதிலாக "காரணம் அவர்களே மந்தைகளின் மெய்ப்பர்களாக இருக்கின்றனர். கர்த்தர் அவர்களையே ஆடுகளை மேய்க்கும் படியாக வைத்திருக்கிறார். ஆகவே அந்த மேய்ப்பர்களை நிர்மூலமாக்கி ஆடுகளான என் ஜனங்களை மறுபடியும் உலகத்தின் இன்பங்களுக்கு கொண்டு வந்து அவர்களின் முடிவை நரகத்தை அடையவைப்பதே இவைகளின் திட்டம். ஆகையால் நீ என் ஊழியகாரர்களிடம் போய் உண்மையை பேசும்படியாகவும் நான் அவர்களுக்கு சொல்வதை பிரசங்கிக்கும் படியாகவும் தங்கள் சுய பிரசங்கத்தை விடும்படியாகவும் சொல்லு" என்றார்.

 

நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் ஆண்டவர் சொன்னார் "இன்னும் சில காரியங்களை நான் உனக்கு காட்ட வேண்டும், சிறுவர்களும் இங்கே இருக்கின்றனர்" என்றார். நான் கேட்டேன் " ஆண்டவரே " சிறுவர்கள் இங்கே இருக்கின்றனரா? ஏன் அவர்கள் இங்கே வந்தனர் உங்கள் வார்த்தை சொல்கிறதே, சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, (மத்தேயு 19:14) " என்றேன். ஆண்டவர் சொன்னார் "அது உண்மை தான் மகளே பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது தான் ஆனால் சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வரவேண்டும் என்னிடத்தில் வருபவர்களை நான் புறம்பே தள்ளுவதில்லை (யோவான் 6:37)" என்றார்.  உடனடியாக ஆண்டவர் எனக்கு 8 வயது நிரம்பிய ஒரு சிறுவனை காட்டினார் அவன் நெருப்பினால் வெந்து வேதனைப்பட்டு கொண்டிருந்தான். அந்த பையன் அழுதான் "ஆண்டவரே என்மீது இறக்கம் காட்டுங்கள், என்னை வெளியே எடுத்து விடுங்கள், எனக்கு இங்கே இருக்க முடியாது" என்றான் அவன் அழுதுகொண்டு கதறினான். அவனை சுற்றிலும் பிசாசுகள் இருந்து அவனை துன்புறுத்தின அவை காட்டூன் உருவங்களாக இருந்தன. அவை டிராகன், பாய்ஸ், பென்10 ,போக்மேன், டோரள் இன்னும் பல உருவங்களில் இருந்தன. "ஏன் இவன் இங்கிருக்கிறான்?” என்றேன். ஆண்டவர் ஒரு திரையில் இந்த சிறுவனின் ஜீவியத்தை காண்பித்தார். அவன் வாழ்ந்த நாட்கள் முழுவது தொலைக்காட்சி பெட்டி (டி வீமுன்பாக இருந்து இப்படிப்பட்ட காட்டூன்களையே  பார்க்கிறான்.

 

ஆண்டவர் சொன்னார் "மகளே இப்படிப்பட்ட காட்டூன், திரைப்படங்கள், நாடகங்கள் என்பவை எல்லாம் தினமும் தொலைக்காட்சி பெட்டியில் (டி வீ யில்) காண்பிக்கப்படுகின்றன. இவைகள் எல்லாம் மனிதர்களை நாசம் செய்யும் படியான சாத்தானுடைய ஆயுதங்கள். மகளே பார் எப்படி இவன் இங்கே வந்தானென" என்றார். நான் பார்த்தேன் இவன் அடங்காதவனும் தாய் தகப்பனுக்கு கீழ்ப்படியாதவனுமாய் இருந்தான். இவனுடைய பெற்றோர் இவனை கண்டித்தபோது இவன் அவர்களுக்கு கீழ்ப்படியாமல் பொருட்களை வீசியடித்து வெளியிலே ஓடி ஒரு காரில் மோதுகிறான் இப்படியே இவன் வாழ்க்கை முடிகிறது. "அதன் பின் இவன் இங்கேயே இருக்கிறான்" என்றார் ஆண்டவர்.

 

நான் சிறுவனை பார்த்தேன் அவன் கொடுமை படுத்தப்பட்டு கொண்டிருந்தான். ஆண்டவர் சொன்னார் "மகளே பெற்றோரிடம் போய் சொல் என் வசனத்தில் சொல்லப்பட்டபடி பிள்ளைகளை வளர்க்கும்படியாக (நீதிமொழிகள் 22 :6) கர்த்தருடைய வார்த்தை சத்தியம், ஒரு பிள்ளை கீழ்ப்படியாதபோது தண்டனையின் பிரம்பினால் அவனை திருத்தும்படி கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது (நீதிமொழிகள் 22 :15 )

 

"மகளே கீழ்ப்படியாமையினாலும், காட்டூன் கதைகளை பார்ப்பதாலும் இங்கே அநேக சிறுவர்கள் இருக்கிறார்கள்" என்று கர்த்தர் கூறினார். அது மனதிற்கு மிகவும் வேதனை தரக்கூடியதாக இருந்தது.  நான் கேட்டேன் ஏன் ஆண்டவரே காட்டூன் பார்ப்பது தவறு?" என்று. ஆண்டவர் சொன்னார் "காரணம் அந்த காட்டூன்களுக்கூடாக பிசாசுகள் கீழ்ப்படியாமை, அடங்காமை, கசப்பு, பகைமை போன்ற ஆவிகளை கொண்டு வந்து உணர்வுகளாக சிறுவர்களின் இருதயத்தில் விதைகின்றன, இன்னும் சில பிசாசுகள் இந்த சிறுவர்களுக்குள் புகுந்து விடுகின்றன அதனால் இச்சிறுவர்கள் நல்ல காரியங்களை அல்ல கெட்ட காரியங்களையே விரும்பி செய்வார்கள். அது மட்டுமல்லாமல்  இச்சிறுவர்களுக்கு தேவை தாங்கள் தொலைக்காட்சி பெட்டியில் (டி வீ யில்) பார்க்கும்

காரியங்களை நிஜத்திலும் செய்ய வேண்டும் என்பதேஎன்றார்.

நரகம் இருப்பது உண்மை சிறுவர்கள் கூட தங்களுடைய பங்கை தெரிந்துகொள்வது அவசியம். "ஆண்டவரே ஏன் சிறுவர்கள் இங்கே இருக்கிறார்கள்?” என்று நான் மறுபடியும் கேட்டேன் ஆண்டவர் சொன்னார் "சிறுவர்களுக்கும் நல்லது எது? கெட்டது எது? என்கின்ற ஞானம் உண்டு ஆகையால் அவர்களும் சரியானதை தெரிந்துகொள்வது அவசியம்" என்றார்.

 

 

சொர்க்கம்

இன்னும் அநேக காரியங்கள் நரகத்திலே உண்டு ஆனால் இப்போது நான் சொர்க்கத்தில் கண்டவைகளை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன். கர்த்தர் என்னை நோக்கி "மகளே இப்போது நான் என்னுடைய பரிசுத்த ஜனங்களுக்காக ஆயத்தம் செய்தவைகளை உனக்கு காண்பிக்க போகிறேன்" என்றார். நாங்கள் அந்த நரக பகுதியிலிருந்து ஒரு சுரங்கபாதை கூடாக வெளிய வந்தோம். பின்பு திடீரென  ஓளி வீசும் இடத்தை அடைந்தோம் நான் பார்த்தேன் அங்கே இருள் இல்லை,நெருப்பு இல்லை, வேதனை இல்லை. "மகளே என் மகிமையை நான் உனக்கு காண்பிக்க போகிறேன் என்று கர்த்தர் சொன்னார்". அப்போது நாங்கள் மேல் நோக்கி உயர்ந்து சொர்க்கலோகத்தை நோக்கி சென்றோம்!. சீக்கிரத்தில் ஒரு வாசலண்டைக்கு வந்தோம் அங்கே  மிகப்பெரிய தங்க எழுத்துக்களால் "சொர்க்கலோக இராட்சியம் உங்களை வரவேற்கின்றது" என எழுதப்பட்டிருந்தது. ஆண்டவர் சொன்னார் "மகளே, உள்ளேபோ, நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்(யோவான் 10 :9 ) என்றார். 

ஆண்டவர் இந்த வார்த்தைகளை சொன்னதும் அந்த வாசல் கதவுகள் திறந்தது. நாங்கள் உள்ளே நுழைந்தோம். நான் பார்த்தேன் தேவதூதர்கள் மகிமையையும் கனத்தையும் எங்கள் பிதாவாகிய தேவனுக்கு செலுத்தினார்கள்! (வெளிப்படுத்தல் 7:11-12). நாங்கள் தொடர்ந்து நடந்தபோது நாங்கள் ஒரு ஆயத்தம் செய்யப்பட்ட மேசையை வந்தடைந்தோம். அதன் தொடக்கம் இருந்தது முடிவோ காணப்படவில்லை(வெளிப்படுத்தல் 19:9). ஒரு பெரிய சிங்காசனமும் சிறிய சிங்காசனமும் அதைசுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆசனங்களும் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆசனங்களுக்கு நடுவில் வெள்ளை நிற அங்கிகளும் கிரீடங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆண்டவர் சொன்னார் "மகளே நீ அங்கே பார்ப்பவைகள் தான் ஜீவகிரீடங்கள்(வெளிப்படுத்தல் 2:10)" என்றார்.

ஆண்டவர் சொன்னார் "இவை தான் மகளே நான் என் ஜனங்களுக்காக ஆயத்தம் செய்திருப்பவை" என்று , நான் பார்த்தபோது மேசையில்  வெள்ளை நிற மேசை துணி விரிக்கப்பட்டிருந்தது. அங்கே தட்டுகள், பாத்திரங்கள், பழங்கள் எல்லாம் பரிமாறப்பட்ட நிலையில் தயாராக இருந்தது.  அவை பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருந்தன. அந்த மேசைக்கு நடுவில் மிகபெரிய ஒரு பாத்திரம் இருந்தது அதில் திராட்சை ரசம் வார்க்கப்பட்டிருந்தது. ஆண்டவர் "மகளே என்னுடைய சபையின் வருகைக்காக எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

நாங்கள் இன்னொரு இடத்திற்கு போனோம் அங்கே அநேக ஜனங்கள் ஒரு பூங்காவிலே இருந்தனர். வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள நன்றாக அறிந்த அநேகர் அங்கே இருந்தனர் ஆனால் அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் அல்ல இளம் வயதுள்ளவர்கள். அங்கே ஒரு வாலிபன் கையில் பெரிய கைக்குட்டையுடன் சுழன்று சுழன்று நடனமாடி ஸ்தோத்தரித்து  கொண்டிருந்தான்.

 

ஆண்டவர் சொன்னார் "மகளே அங்கே நடனமாடி கொண்டிருக்கும் வாலிபன் என் ஊழியக்காரனான தாவீது" என்றார். அவன் பிதாவுக்கு மகிமை செலுத்தி கொண்டிருந்தான். ஆண்டவர் அங்கே இருந்தவர்களை காண்பித்து; "மகளே இவன் யோசுவா, இவன் மோசே அடுத்தவன் ஆபிரகாம்" என்றார். அவர்களை பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் தோற்றங்களும் அப்படியே இருந்தன. ஆண்டவர்  "மகளே நீ அங்கே பார்க்கும் பெண் என் ஊழியக்காரி மகதலேனா மரியாள்,  அடுத்தவள் சாராள்" என்றார்.

 

அவர் சொன்னார் "மகளே இவள் மரியாள் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தவள் அதாவது என்னை பெற்றெடுத்தவள். மகளே இவளுக்கு பூமியில் நடப்பவை தெரியாது. நீ போய் மனிதர்களிடம் சொல்லவேண்டும், விக்கிரகாராதனைக்காரர்களிடம் நரகம் இருப்பது உண்மை விக்கிரகாராதனைக்காரர்கள் தேவனுடைய ராட்சியத்தை சுதந்தரிப்பதில்லை, ஆனால் அவர்கள் மனந்திரும்பினால் நித்தியமான சொர்க்க ராட்சியத்தை அடையலாம் என்று, நான் அவர்களை நேசிப்பதாக அவர்களிடம் சொல், மரியாள் பூமியில் தன்னை ஆராதனை செய்வதை அறிவதில்லை. மரியாளோ, வேறு எந்த புனிதர்களோ இரட்சிப்பை கொடுப்பதில்லை.  நான் மட்டுமே இரட்சிப்பவர், என்னை அன்றி ஒருவருமில்லை! ஒருவருமில்லை! ஒருவருமில்லை!" என்று மூன்று தடவைகள் சொன்னார். அவர் இரட்சிக்காவிட்டால் ஒருவராலும் இரட்சிக்க முடியாது.

 

மனிதர்கள் தங்களாலேயே வார்க்கப்பட்ட புனிதர்களை விசுவாசிப்பதால் வஞ்சிக்கப்பட்டு போகிறார்கள். ஆனால் அவை புனிதர்கள் அல்ல மனிதனுடைய கைவேலையான விக்கிரகமாகவும், பிசாசாகவும் இருக்கிறது. ஆனாலும் கர்த்தர் மனிதர்களுக்கு சிறந்தவற்றையே கொடுக்கிறார் மனிதர்கள் விக்கிரகங்களை விட்டு மனந்திரும்பி தேவனுடைய ராட்சியத்தை அடைவதே அவரின் வாஞ்சையாக இருக்கிறது. காரணம் விக்கிரகம் இரட்சிப்பதில்லை. முழு மனிதவர்கத்திற்காகவும் தன் ஜீவனை கொடுத்த நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே இரட்சிப்பு உண்டு. ஆண்டவர் கண்ணீர் விட்டு சொன்ன காரியம் "மகளே தயவுசெய்து, நான் உனக்கு காட்டியவற்றையும் சத்தியத்தையும் மனிதர்களிடம் போய் சொல், சொல்லாமல் விடாதே" என்பதே.

 

மரியாள் இயேசு கிறிஸ்துவை வணங்குவதை நான் பார்த்தேன். பெண்கள் அழகிய நீண்ட கூந்தலுடன் இருப்பதை நான் பார்த்தேன். நான் "ஆண்டவரே, எவ்வளவு அழகாக இவர்களுடைய கூந்தல் இருக்கிறது" என்றேன். அதற்கு ஆண்டவர் "மகளே நீ பார்க்கும் இப்படியான கூந்தலே பெண்களுக்கு என்னால்  கொடுக்கப்பட்ட முக்காடாக இருக்கிறது மகளே பெண்களிடம் போய், நான் அவர்களுக்கு கொடுத்திருக்கும் முக்காடுகள் மேல் கவனம் செலுத்தும்படியாக சொல் " என்றார்.

 

பின்பும் அவர் என்னிடம் "உனக்கு காட்டும் படியான முக்கியமானதொன்று இருக்கிறது" என்றார். நான் தூரத்திலே ஒரு பளிச்சிடும் நகரத்தை கண்டேன். அந்த நகரம் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. நான் "ஆண்டவரே அது என்ன? நான் அங்கே போக வேண்டும் என்றேன். அவர் பதிலாக "மகளே அங்கே என்ன இருக்கிறது என்று நான் உனக்கு காட்டுகிறேன், நீ பார்ப்பது  தான் பரலோக குடியிருப்பு அது என் ஜனங்களுக்காக ஆயத்தமாக  இருக்கிறது" என்றார்.  

 

நாங்கள் ஒரு தங்க பாலம் இருக்கும் இடம் வரை வந்து அதற்கூடாக நடந்து சுத்த தங்கத்தால் கட்டப்பட்டிருக்கும் வீதிகள் வரை வந்தோம்!. (வெளிப்படுத்தல் 21 :21)

 

எல்லாம் பளிங்கிற்கு ஒப்பாக மிக நேர்த்தியாக, அழகாக இருந்தது, அது விபரிக்க முடியாத தெய்வீக  அதிசயமாக இருந்தது! நாங்கள் பரலோக குடியிருப்புகளை பார்த்தோம், அங்கே ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் கட்டுவேலையில் ஈடுபட்டிருந்தனர். சில தூதர்கள் மிகவேகமாகவும், சிலர் மெதுவாகவும், சிலர் ஒன்றும் செய்யாமலும் இருந்தனர். நான் ஆண்டவரிடம் "ஏன் சில தூதர்கள் மிகவேகமாகவும், சிலர் மெதுவாகவும், சிலர் ஒன்றும் செய்யாமலும் இருக்கின்றனர்?" என்று கேட்டேன்.  அதற்கு ஆண்டவர் "மகளே இவ்வண்ணமே என் ஜனங்கள் பூமியில் என் ஊழியத்தை செய்வது.... மகளே என் ஜனங்கள் இப்போது சுவிசேஷத்தை அறிவிப்பதில்லை, உபவாசிப்பதில்லை, வீதிகளில் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து சத்தியத்தை சொல்வதில்லை. என் ஜனங்கள் இப்போது ஊழித்துக்கு வெட்கப்படுகிறார்கள் அவர்களிடம் தங்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பும்படி போய் சொல். என் வழியை விட்டு விலகிப்போனவர்களுக்கு சொந்தமான தேவதூதர்களே நீ பார்த்த வேலை செய்யாமல் இருந்த தேவதூதர்கள்...  என் ஜனங்கள் தங்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பும் படி அவர்களிடம் சொல்" என்றார் (எரேமியா 6 :16 ). இதை சொல்லி இயேசு கிறிஸ்து கண்ணீர் விடத்தொடங்கினார்.

 

நான் இன்னும் வேறு ஜனங்கள் பாடும் சத்தத்தை கேட்டேன், "ஆண்டவரே அந்த பாடும் இடத்திற்கு என்னை அழைத்து செல்லுங்கள்" என்றேன். ஆண்டவர் நான் கேட்டதை கவனித்தார் அவரின் முக அசைவை வைத்தே நான் அதை விளங்கிக்கொண்டேன் எனக்கு அவருடைய முகத்தை அந்த சந்தர்ப்பத்தில் பார்க்கமுடியாமல் இருந்தது. ஆனால் அவருடைய உடை கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது. அவர் அழுவது ஏன்? என்று நான் கேட்டதற்கு பதில் ஏதும் அவரிடமிருந்து வரவில்லை.

 

பின்பு நாங்கள் அழகிய பூந்தோட்டத்திட்கு வந்தோம். அந்த பூந்தோட்டமானது பரலோக குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்தது. அங்கே பூக்கள் அசைந்தாடி கொண்டிருந்தன. நான் கேட்ட பாடும் சத்தம் இந்த பூக்கள் பாடிய சத்தமே. ஆண்டவர் சொன்னார் "மகளே இந்த பூக்களை பார் அவைகள் என்னை துதிக்கின்றன! ஆராதிக்கின்றன! ஆனால் என் ஜனங்களோ என்னை துதிப்பதையும், ஆராதிப்பதையும், என்னை தேடுவதையும்  கைவிட்டு விட்டனர் ஆதியன்பு அவர்களிடம் இப்போது இல்லை. அதனால் தான் நான் உனக்கு சொன்னேன் அவர்களிடம் போய் மறுபடியுமாக என்னை தேடும்படி சொல், இதோ நான் வருகிறேன், நான் வருகிறேன், நான் வருகிறேன், நான் வருவது என்னை ஆவியோடும் உண்மையோடும் தேடும் பரிசுத்தமுள்ள ஜனங்களுக்காக மட்டும் தான்" என்றார். இதை சொல்லி ஆண்டவர் அழுது கொண்டு  "நான் வருகிறேன்! வருகிறேன்!" என்றார். அவர் ஏன் அதிகமாக அழுதார் என்பதன் காரணம் எனக்கு விளங்கியது அது என்னவெனில் அவர் வருவது எல்லா கிறிஸ்தவ ஜனங்களுக்காகவும் அல்ல அவரை சரியான வழியிலும் ஆவியோடும் உண்மையோடும் தேடும் பரிசுத்தமுள்ள ஜனங்களுக்காக மட்டுமே.

 

பின்பு ஆண்டவர் என்னை பூமிக்கு திரும்பும்படி சொன்னார். நான் ஆண்டவரிடம் பூமிக்கு திரும்பி போக மனதாக இல்லை! ஏன் பூமியை குறித்து சொல்கிறீர்கள் எனக்கு உங்களுடனேயே இருக்க வேண்டும் நீங்கள் என்னை இங்கு கொண்டு வந்தீர்கள் நான் எங்கேயும் போக மனதாக இல்லை, நான் உங்களுடன் இருக்கிறேன்" என்றேன். அதற்கு ஆண்டவர் என்னை நோக்கி "மகளே நீ பூமிக்கு சென்று என் மகிமை உண்மையென்றும் நான் உனக்கு காண்பித்த காரியங்கள் அனைத்தும் உண்மை என்றும் சொல்வது அவசியம் அப்போது அநேகர் கெட்டு போகாமல் மனந்திரும்புவார்கள்" என்றார். நான் அழுதுகொண்டு, என்னால் பூமிக்கு செல்ல முடியாது என்று சொல்லும் படி அவருடைய பாதத்தில் விழுந்தேன். ஆண்டவருடைய பாதத்தில் ஆணிகள் பாய்ந்த காயங்கள் இன்னும் ஆற்ற படாமல் காயங்கலாகவே இருந்தன. நான் கேட்டேன் "ஆண்டவரே ஏன் இன்னும் இந்த காயங்கள் அப்படியே இருக்கின்றன?" என்று. அவர் சொன்னார் மகளே இந்த காயங்கள் ஜனங்களுக்காக நான் என் ஜீவனை கொடுத்த நாளிலிருந்தே இருக்கிறன" என்றார். நான் அவருடைய கைகளிலும் காயங்களை கண்டேன். "ஆண்டவரே ஏன் இன்னும் இவற்றை வைத்திருக்குறீர்கள் என்றேன். அவர் "நினைவு கூறுதலுக்காக" என்றார். "இவைகள் சுகமாகுமா?" என்றேன்.  அவர் சொன்னார் "மகளே என்னுடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் இங்கே என்னோடு கூட வந்து சேரும்போது இவைகள் சுகமாகும்" என்று சொல்லி மகளே நான் உன்னை அழைத்துபோக வேண்டும் உன் குடும்பமும் உன் ஜனங்களும் உனக்காக காத்திருக்கின்றனர்" என்றார்.

 

 நான் மறுப்பதற்கு முயற்சித்தேன் அவரோ கீழாக சுட்டிக்காட்டி "பார்!... அங்கே நீ பார்க்கும் மனிதர்கள் உன் உறவினர் அங்கே இருக்கும் உடல் உன்னுடையது நாம் இப்போது போக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது" என்றார். அவர் பளிங்கு போலிருந்த சுத்தமான ஒரு ஆற்றிற்கு என்னை அழைத்து வந்து அதில் மூழ்கும்படி சொன்னார். நான் அதில் மூழ்கும் முன் அதனிடத்தில் வந்து அந்த வர்ணிக்க முடியாத சந்தோஷத்தை அனுபவித்தேன், பின்பு நான் அதில்மூழ்கி பரவசம் அடைந்தேன். நான் நினைத்தேன் மறுபடியும் என் வீட்டிற்கு போக வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆனால் கர்த்தர் கூறினார். "மகளே நீ பூமிக்கு திரும்பிபோவது அவசியம், நான் உனக்கு என்னுடைய ரகசியவருகையில்  நிகழப்போகும் காரியங்களை காண்பிக்கிறேன் வா" என்று சொன்னார்

 

 

 

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் உபத்திரவகாலமும்

நாங்கள் ஒரு பெரிய திரை இருந்த இடத்திற்கு வந்தோம், அதிலே நான் மனிதர்களை பார்த்தேன். அதில் நான் முழு உலகத்தையும் கவனித்தேன் பல ஜனங்கள் காணாமல் போவதை பார்த்தேன். கர்ப்பிணிகளின் கர்ப்பம் மறைந்து போனது அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களை போல் கதறினார்கள்.

எல்லா இடங்களிலேயும் சிறுபிள்ளைகள் காணாமல் போனார்கள். நேகமான ஜனங்கள் இங்கும் அங்கும் கதறிக்கொண்டு ஓடினார்கள் அவர்கள் "இது நடக்க கூடாது, இது நடக்க கூடாது என்ன நடக்கிறது?" என்று கதறிக்கொண்டு ஓடினார்கள்

கர்த்தரை அறிந்தும் அவரை விட்டு விலகிய ஜனங்களை நான் கண்டேன்(மத்தேயு 24:40-41) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகை நடந்து விட்டது என்று கதறிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கின்றனர். ஆண்டவர் சொன்னார் "மகளே அந்த நாட்களிலே மரணம் அவர்களை விட்டு ஓடி போகும், அந்த நாட்களிலே பரிசுத்த ஆவியானவரும் பூமியிலிருந்து " போய் விடுவார் (வெளிபடுத்தல் 9:6) என்றார். அநேக விபத்துகளை கண்டேன்  ஆனால் ஒருவர் கூட மரிக்கவில்லை காயங்களோடு உயிருடனேயே இருந்தனர்.

 

பலவிதமான போக்கு வரத்து இடையூறுகளையும் ஆயிரக்கணக்கான மனிதர்களையும் அவதானித்தேன். ஆண்டவர் சொன்னார் "மகளே பார், இப்படிதான் எல்லாம் நடக்கும்" என்று. மனிதர்கள் "ஆண்டவர் வந்து விட்டார்!, ஆண்டவர் வந்து விட்டார்! என்று சத்தமிட்டு கொண்டே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடினர். அவர்கள் கெஞ்சிய வண்ணம் "ஆண்டவரே எங்களை மன்னியுங்கள், எங்களை மன்னியுங்கள், எங்களை உங்களோடு எடுத்து கொள்ளுங்கள்" என்றனர்.

 

ஆனாலும் துக்கமாக ஆண்டவர் சொன்னார். "அப்போது மிகவும் பிந்திவிடும் இப்போது தான்  மனந்திரும்பும் நேரம் ஆகையால் நீ போய் சொல் மனிதர்கள் மனந்திரும்பும் படியாக அல்லது அவர்களுடைய சந்தர்ப்பம் அவர்களை  விட்டு போய் விடும்

(ஏசாயா 55 :6 )” என்றார். ஜனங்கள் ஆண்டவரை விட்டு போவதை அவர் உணர்ந்தவராக கண்ணீர் விட்டு சொன்னார் "மகளே நான் பூமிக்கு செல்வது 1 தெசலோனிக்கேயர் 4 :16 -17 ல் கூறப்பட்டபடிதான் என்றார் (அதிலே – 16 ல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 ல்:. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.) என்று சொல்லப்பட்டுள்ளது.

 

ஆனாலும் எல்லா கிறிஸ்தவர்களும் கர்த்தரோடு போவது இல்லை பிதாவின் சித்தத்தை செய்பவர்களும் பரிசுத்த ஜீவியம் ஜீவிப்பவர்களுமே கர்த்தரோடு போவார்கள்(மத்தேயு 7 :21). ஆண்டவர் சொன்னார் "பரிசுத்தமுள்ளவர்கள் மாத்திரமே பரலோக இராட்சியத்தில் பிரவேசிப்பார்கள். என் ஜனங்களுக்காக நான் போகும் அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்(மத்தேயு 24 :36)" என்றார்.

 

அந்த திரையிலே ஜனங்கள் ஓடுவதை நான் பார்த்தேன். பத்திரிக்கைகளிலும்  தொலைக்காட்சி செய்திகளிலும் "இயேசு கிறிஸ்து வந்து போய் விட்டார்" என்று சொல்லப்பட்டது. திரை மூடப்பட்டது ஆண்டவர் "என்னுடைய ரகசிய வருகையானது பரிசுத்த ஜனங்களுக்கே" என்று சொல்லி முடித்தார். அதன் பின் அவர் என்னை பூமிக்கு கொண்டு வந்தார்.  தேவதூதர் கூட்டம் எங்களை சூழ்ந்திருந்தது அழகிய வெள்ளை நிற பூக்களால் சூழப்பட்ட படிகளில் இறங்கி வந்தோம். நான் அழுதுகொண்டே வந்தேன் ஆண்டவரே என்னை இங்கே விட்டு போகாதீர்கள் என்னை உங்களுடன் அழைத்து போங்கள் என்று கெஞ்சினேன். "மகளே உன் ஜனங்களும் உன் குடும்பத்தாரும் உனக்காக காத்திருக்கின்றனர்.... மகளே நீ அந்த உடலுக்குள் புகுந்து கொள்ள வேண்டும் உன் உயிர் திரும்பி வரும்  அப்போது நான் உனக்கு காண்பித்த எல்லாவற்றையும் நீ சாட்சியாக சொல்லவேண்டும் பலர் உன்னை விசுவாசிப்பார்கள் பலர் உன்னை விசுவாசிக்க மாட்டார்கள் ஆனால் நான் உன் சாட்சியாக இருக்கிறேன்" என்றார்.

 

 

மறுபடியும் பூமியில்

 

மக்சிமா

என் மகள் திரும்பி வந்தபோது நாங்கள் எல்லோரும் அங்கே இருந்தோம், அவள் நிலத்தில் கிடத்தப்பட்டிருந்தாள். மெதுவாக  "ஊஊம்ம்ம்" என்றாள். என் மகள் திரும்பி வந்து விட்டாள் "ஆண்டவரே ஸ்தோத்திரம்" என்றேன்.

நாங்கள் எல்லோரும் கர்த்தரை ஸ்தோத்தரிதோம். சீக்கிரமாகவே அவள் மெதுமெதுவாக மூச்சு விட ஆரம்பித்தாள். ஐந்து மணிநேரத்திற்கு பின் கண் விழித்து பேச ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் அவள் கூறியவற்றை எங்களால் விளங்கி கொள்ள முடியவில்லை அது விளக்கமாக இருக்க வில்லை. அவளுக்கு பெலன் இருக்க வில்லை. நாங்கள் ஜன்னல்களை மூடியே வைத்திருந்தோம் காரணம் அவளுடைய கண்களுக்கு வெளிச்சத்தை பார்க்க முடியாதிருந்தது.

நாங்கள் அனைவரும் அவள் பார்த்தவைகளை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தோம். அவள் மிகவும் பெலனற்று இருந்ததால் ஒருசில வார்த்தைகளை மட்டும் தான் அவள் பேசினால். இரண்டு வாரங்களின் பின்பு தான் அவள் பார்த்த எல்லாவற்றையும் எங்களுக்கு சொன்னாள்.

இவைகளின் பின் பிசாசுகள் அவளிடம் வந்து அவளை துன்பப்படுத்த ஆரம்பித்தன. அவளால் அந்த பிசாசுகளை நன்றாக பார்க்க முடிந்தது அவைகள் தங்களை நிழலுக்குள் மறைத்துக்கொள்ள முயற்சித்தன. அவள் மறுபடியும் உயிர் பெற்றதன் பின் மறுபடியும் பேசும்வரை மூன்று நாட்களாக அந்த பிசாசுகள் இங்கே இருந்தன. அவள் பேசும் நிலைக்கு வந்ததன் பின் அந்த பிசாசுகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் அதற்கு அவை "நாங்கள் உன்னோடு ஒரு ஒப்பந்தத்தை செய்யும்படியே வந்தோம்... நீ உன் வாயை மூடி கொண்டு பேசாமல் இருக்கவேண்டும் நீ கீழே நரகத்தில் பார்த்த ஒன்றையும் ஒருவருக்கும் சொல்லக்கூடாது சொன்னால் நாங்கள்  உன்னை கொலை செய்து விடுவோம்" என்றன.

 

அந்த பிசாசுகள் மிக விகாரமாகவும், உருவத்தில் பெரியதாகவும், பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாகவும் இருந்ததாக மகள் கூறினாள். அவள் அவைகளை அநேகமுறை அதட்டினாள் ஆனால் அவைகள் அவளை விடவில்லை. அவைகள் வந்து அவள்மீது பாயவும் அவள் கழுத்தை நெரிக்கவும்  செய்தன. அவள் அவைகளை கடிந்துகொண்டு அவைகளோடு போராட தொடங்கினாள். அப்படி அவள் கடிந்துகொண்டிருந்த ஒரு தடவை ஒரு மிகபெரிய ஒளி வீசியது அத்தோடு அவை ஓடி விட்டன. அந்த ஒளி கர்த்தரே.

 

என் மகள் பெற்றுக்கொண்ட அனுபவம் இலகுவானதல்ல. கர்த்தரை ஜனங்கள் தேடும் படியான ஒரு உன்னத செய்தியை அவள் மனிதர்களுக்கு கொடுக்கிறாள். மனிதர்களோ அவர்கள் செய்வது சரி என்றே நினைக்கின்றனர். வாலிபர்கள் மதுபானம் பாவிப்பது சரி என்றே நினைக்கின்றனர் அது சரி அல்ல. என் மகள் ஆச்சரியமான ஒரு அனுபவத்துக்கூடாக நரகத்தில் பிரபல நட்சத்திரங்களும் இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்2    கூட இருப்பதாக பார்த்திருக்கிறாள். இதுவே கர்த்தரை தேடவும் மனந்திரும்பவும் அவருக்கு முன்பாக தங்களை தாழ்த்தவும் கூடியநேரம். ஆண்டவருடைய வசனம் சொல்லுகிறது "வானமும் பூமியும் ஒழிந்து போகும் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை(மத்தேயு 13 :31 )" என்று, சரியான நேரத்தில் கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறும்.

 

ஒரு சுரங்கத்தையும் அதற்கூடாக மனிதர்கள் நரகத்தை நோக்கி செல்வதையும்  கர்த்தர் அவளுக்கு காட்டியுள்ளார். அநேகர் தற்போது நரகத்தில் இருக்கின்றனர். அது உண்மை! கர்த்தருடைய ஜனங்களில் சிலர் இதை நம்புவதில்லை,  அநேகர் நம்புவதில்லை.

 

முக்கிய செய்தி என்ன வென்றால் நாம் ஆண்டவரை தேடவேண்டும் என்பதே, உதடுகளால் மட்டுமல்ல முழு இருதயத்தோடும் நாம் அவரை தேட வேண்டும். அவர் சீக்கிரம் வருகிறார். அவர் சொல்கிறார் "இதோ நான் வாசற்படியண்டையிலே நிற்கிறேன், சீக்கிரம் வருகிறேன், தாமதிப்பதில்லை, என் வருகை அதிசீக்கிரம். என் ஜனங்கள் என்னை விட்டு உலகத்திற்குள் சென்றிருக்கின்றனர். சொல் என் ஜனங்களுக்கு அவர்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பும் படியாக" என்பதே. சபைகள் தங்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பவேண்டும் அதாவது நாங்கள் ஆவியிலே அனலுள்ளவர்களாய் கர்த்தரை தேடவும் எக்காள சத்தம் வானில் தொனிக்கும் போது அவரை சந்திப்பதற்கு ஆயத்தமாய் இருக்கவும் வேண்டும்.  

 

ஆண்டவருடைய முக்கிய செய்தி

 

அன்ஜளிக்கா சபையில் ஜனங்களுக்கு முன்பாக பேசியது

 ஆண்டவர் என்னிடம் சொன்னார் "மகளே அந்த நாட்களில் பரிசுத்தாவியானவர் பூமியில் இருக்கமாட்டார் பரலோகத்துக்கு போய் விடுவார்" என்று. நான் அதிகமான விபத்துகளுடன் போக்கு வரத்து தடைகளை கண்டேன். அநேகர்  தங்களை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். இயேசு கிறிஸ்து சொன்னார் "அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்(வெளிபடுத்தல் 9 :6 )" என்று. தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் "ஆயிரக்கணக்கான மனிதர்களை காணவில்லை" என்று செய்திகள் வந்தன. பெரும்பாலான ஜனங்களுக்கு கர்த்தரின் ரகசிய வருகை நிகழ்ந்து விட்டது என்று தெரிந்தது. பின்மாற்றம் அடைந்திருந்த ஜனங்கள் வீதிகளில் அழுதுகொண்டு திரிந்தனர் அவர்கள் தங்களை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர் ஆனாலும் அவர்களுக்கு அது முடியவில்லை.

 

பரலோகத்தில் வைத்து கர்த்தர் கூறியது "பரிசுத்தமான சபைக்காகவும் பரிசுத்தவான்களுக்காகவும் நான் அதிசீக்கிரம் வருகிறேன்" என்றார். ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பதாக ஆண்டவர் என்னிடம் "மகளே நான் உனக்கு கட்டளையிட்ட யாவற்றையும் நீ செய்து கொண்டு வருவதை நான் காண்கிறேன். ஆனாலும் என் ஜனங்களிடம் நான் சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லாதே, இதோ நான் இப்பொழுதே வருகிறேன் என்று சொல், நான் பரிசுத்தமான ஜனங்களுக்காகவே வருகிறேன், பரிசுத்தமானவர்கள் பரிசுத்தமானவர்கள் மட்டுமே என்னை காண்பார்கள்! நான் சொன்ன யாவற்றையும் அவர்களிடம் சொல்" என்றார்.

 

அன்ஜளிக்கா சபையாரோடு ஜெபம் செய்தல்:

எல்லோரும், கண்களை மூடுங்கள் உங்கள் வலது கையை உங்கள் இருதயத்தின் மேலும் இடது கையை உயர்த்திய வண்ணமாகவும் உங்கள் மனதில் வரும் காரியங்களை கர்த்தரிடம் கூறுங்கள். கர்த்தரை ஏற்று கொள்ள மனதுள்ளவர்கள் என்னோடு கூட நான் சொல்லும் ஜெபங்களை திரும்ப சொல்லுங்கள். 

ஆண்டவரே , உம்முடைய அன்புக்காகவும் கிருபைக்காகவும் ஸ்தோத்திரம், இன்றைய நாளிலும் கூட உம்முடைய வார்த்தைகள் என் இருதயத்திற்குள் பிரவேசித்த படியால் நன்றி. பிதாவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கும் படியாய் ஜெபிக்கிறேன். என்னை மன்னியும். உம்முடைய விலை ஏறப்பட்ட ரத்தத்தினால் என்னை சுத்திகரியும், என்னுடைய பெயரை உம்முடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதும். உம்முடைய பிள்ளையாக என்னை ஏற்றுகொள்ளும் ஆண்டவரே. யாரையாவது இது வரை  நான் மன்னிக்காமல்  இருந்தால்  இப்பொழுதே அவர்களை மன்னிக்கிறேன். நான் மற்றவரை  மன்னிக்காத பழக்கத்தை இப்பொழுதே கைவிடுகிறேன். உம்முடைய வார்த்தையின் படி நான் செய்ய தவறிய  எல்லா காரியங்களையும் கைவிடுகிறேன். என்னை மாற்றும் படியாகவும் ஒவ்வொரு நாளும் உம்முடைய பிரசன்னத்தில் என்னை வைத்து கொள்ளும் படியாகவும் வேண்டுகிறேன். நன்றி பிதாவே நன்றி இயேசு கிறிஸ்துவே நன்றி பரிசுத்தாவியானவரே;  இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், ஆமென்.

 

அன்ஜளிக்கா

இந்த சாட்சி ஒரு பொய் அல்ல, ஒரு கதையும் அல்ல, ஒரு கனவும் அல்ல நரகம் என்பது உண்மை! அது உண்மை, யாராவது அதை நம்பாமல் இருந்தால் நான் அவர்களுக்கு சொல்வது  நரகம் என்பது உண்மை! அதை விளங்கப்படுத்த வார்த்தைகள் இல்லை நீங்களும் கூட கர்த்தரிடத்திலிருந்து அதன் வெளிப்படுத்தளை பெற்று கொண்டாள் நலமென்று நான் விரும்புகிறேன்.

 

அன்ஜளிக்காவின் பொதுவான உரை.

நேரம் நெருங்கிவிட்டது, நடக்கபோவது என்ன என்பதை ஆண்டவர் அடையாளங்களினாலே மனிதர்களுக்கு காட்டுகிறார். நீங்கள் கைவிடப்பட்டு விட்டதாக எண்ணம் கொள்ள வேண்டாம் பிசாசுக்கு அதுவே அவசியம். நீங்கள் நரகத்துக்கு போகும் சுரங்க பாதையில் பயனிக்குரீர்களா? என்று உங்களையே கேட்டு பாருங்கள். இன்றே ரட்சிப்பின் நாள் இன்றே இயேசு கிறிஸ்துவை உங்கள் ரட்சகராக ஏற்று கொள்ளும் நாள். நீங்கள் சொல்லுவதற்கு  இலகுவானதும் சிறந்ததுமான வார்த்தைகள்  இதோ "நான் உங்களை ஏற்று கொள்கிறேன். இயேசுவே என் ஆண்டவரும் என் சொந்த இரட்சகருமாக நான் ஏற்று கொள்கிறேன். என்முழு இருதயத்துடனும் என் வாழ்க்கையையும் ஆத்துமாவையும் உங்களுக்கே கொடுக்கிறேன். நான் உங்களோடு கூட நித்திய காலமாக பரலோகத்தில் இருக்க வேண்டும் என்பதே என் வாஞ்சை".

 

உங்கள் கடைசி முடிவை தெரிந்து கொள்ளுங்கள்: மரணமோ ஜீவனோ என்று, சொர்கமோ நரகமோ என்று, இயேசு கிறிஸ்துவோ பிசாசோ என்று. நீங்கள்  இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களா? அல்லது பிசாசுக்கு சொந்தமானவர்களா? என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள். சரியானதை செய்வதையோ  தவறானதை  செய்வதையோ தெரிந்து கொள்ளுங்கள்.  உங்கள் முடிவை தெரிந்து கொள்ளுங்கள்: நித்திய ஜீவனோ நித்திய நரகமோ என்று  தெரிந்து  கொள்ளுங்கள். அதை பற்றி சிந்தியுங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள். நம்  ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார், எங்களுடைய  பாவத்துக்காக…..  அவர் எங்களுக்கு கிருபையாக இரட்சிக்கப்படும் சந்தர்ப்பத்தை தந்துள்ளார், ஆகையால் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுகொள்ளுங்கள்!

"இதோ இப்போது இந்த சாட்சியை நீங்கள் அறிந்து கொண்டீர்கள், இதைத்தள்ளி விட்டு நரகத்தில் சதா காலமும் வேதனைப்படும் ஒருவராக உங்கள் முடிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்".

உன் தேவனை சந்திக்க ஆயத்தபடு
சொர்க்கலோக இராட்சியம், நரகம், இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை

சாட்சி : அன்ஜளிக்கா சம்ப்ரானோ

 

அன்ஜளிக்கா எனும் பெயர் கொண்ட 18 வயது நிரம்பிய ஒரு எகோடோரியன் பெண்பிள்ளை சொர்க்கலோக இராட்சியத்தையும் நரகத்தையும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையையும் பார்த்துள்ளாள் சுமார் 23 மணித்தியாலங்கள் இந்த மூன்று காரியங்களும் அவளுக்கு காட்டப்பட்டுள்ளது. நரகத்தில் நித்திய அழிவுக்கு தள்ளப்பட்ட ஆத்துமாக்களுக்காகவும், இயேசு கிறிஸ்துவை மருதலித்து கொண்டிருக்கும் உலகத்துக்காகவும், இயேசு கிறிஸ்துவுக்காக ஆயத்தமாகாத சபைகளுக்காகவும், புறஜாதியார் மத்தியில் சாட்சியின் ஜீவியத்தை கைவிட்ட  மக்களுக்காகவும், சாத்தானுக்கு மனிதர்களை பிடிக்கும் தூண்டிலாக நவ நாகரீக கேளிக்கை துறைகளை பார்த்தும் இயேசு கிறிஸ்து கண்ணீர்விட்டளுவதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள்.  அத்தோடு மதிப்புக்குரிய அநேக பிரபல்யங்கள் நரகக்குழியில் கிடந்து வேதனைப்படுவதாகவும் அதில் பாடகர்கள், கேளிக்கையாளர்கள், இன்னும் பலர் வேதனைப்படுவதாகவும் பாப்பரசர் கூட இருப்பதாக இச்சிறு பெண் சாட்சி கொடுக்கிறாள். அத்தோடு அன்ஜளிக்கா ஒரு தீங்கும் அற்ற, அற்புதமான, எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ள, தயார் நிலையில் இருக்கும், கற்பனைக்கு அப்பால்பட்ட மகிமையான இடமாக சொர்க்கலோக இராட்சியத்தை கண்டுள்ளால் இயேசுகிறிஸ்து மறுபடியும் வருவது தம்முடைய பரிசுத்தமான ஜனங்களுக்காக மாத்திரமே பல தேவ பிள்ளைகள் அந்த நாளிலே ஆயத்தமாக இருப்பதில்லை அவர்கள் கைவிடப்பட்ட கூட்டமாக இந்த பூமியிலே காணப்படுவர் என்பது  அன்ஜளிக்காவின் சாட்சி.  

 

 மக்சிமா (தாயார்)

என் பெயர் மக்சிமா சம்ப்ரானோ மோரா நாங்கள் நிகாரோகுவா தேசத்தில் அமைந்துள்ள எல் எம்பாம் ஊரில் நடத்தப்பட்டு வருகின்ற "காசா டீ ஒராசியன்" எனப்படும் கர்த்தருடைய சபையிலே 15 நாட்கள்  உபவாசித்து கர்த்தரை நோக்கி மன்றாடிக்கொண்டிருந்தோம். என் மகள் அன்ஜளிக்காவும் எங்களோடுகூட உபவாச ஜெபத்திலே இணைந்து கொண்டாள். இந்த 15 நாட்கள் உபவாச ஜெபத்திலே, நான் இது வரை கண்டிராத என் அறிவுக்கு எட்டாத அநேக காரியங்களை என்னால் காணக்கூடியதாக இருந்தது. கர்த்தர் எங்களோடு பேசும் படியாக நாங்கள் குழுவாக உபவாசித்து ஜெபித்தோம் இல்லத்திலும் எங்கள் மன்றாடல் தொடர்ந்தது.

 

எங்கள் சோதனைகளிலே நாங்கள் பின்வாங்கி போக எத்தனித்த சமயங்களில் கர்த்தர் எங்களை மிகவும் தைரியப்படுத்தினார். எரேமியா 33:3ல் சொல்லப்பட்ட படி "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்."  என்ற வாக்குதத்தத்தின் மூலம் கர்த்தர் எங்களோடு இடைப்பட்டார். என் மகள் கர்த்தர் கொடுத்த இந்த வாக்குத்தத்தத்தை உறுதியாக பற்றிக்கொண்டு மன்றாடியுள்ளாள் அந்நேரத்தில் நான் அதை அறிந்திருக்கவில்லை.

 

அன்ஜளிக்கா (மகள்)

என் பெயர் அன்ஜளிக்கா எலிசபெத் சம்ப்ரானோ மோரா என் வயது 18 நான் எல்கேன்டன், எல்எம்பாம், எகொடோர் "எனும் இடத்தில் உள்ள கொளிகியோ ஜோசே மறயா வேலாஸ்கோ இப்பர்ரா" பள்ளியில் கல்வி கற்கிறேன். நான் 12 வயதாக இருந்த போது இயேசு கிறிஸ்துவை ஏற்று கொண்டேன் ஆனாலும் நான் என்னோடு கூட சொல்லிகொண்டது என்னவென்றால் "என் நண்பர்களுக்கிடையில் சுவிசேஷத்தை அறிந்தவர் ஒருவரும் இல்லை அவர்கள் மத்தியில் நான் அந்நியவளாக காணப்படுவேன்" என்பதே ஆகவே நான் ஆண்டவரை விட்டு விலகி பயங்கரமான கெட்ட  பழக்க வழக்கங்கள் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தேன்.

 

ஆனாலும் ஆண்டவர் என்னை மீட்டெடுத்தார். என்னுடைய 15 ஆவது பிறந்த தினத்தன்று  நான் மறுபடியும் ஆண்டவர் கரத்திற்கு என்னை ஒப்படைத்தேன்.  இருந்தும் கூட என் மனம் இருமனமாகவே காணப்பட்டது. வேதம் சொல்லுகிறது   "இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான்" (யாக்கோபு 1:8) என்று நானும் கூட அப்படிப்பட்டவளாக இருந்தேன். என் தந்தை கூறுவார் "நீ அப்படி இருக்க கூடாது, அது சரி இல்லை தவறு" என்று நான் அவருக்கு மறுமொழியாக " நான் இப்படித்தான் இருப்பேன், நான் எப்படி இருக்க வேண்டும் என்ன செய்ய வேண்டும் எப்படி உடுத்த வேண்டும் என்று யாரும் எனக்கு சொல்ல அவசியம் இல்லை" என்பேன். அதற்கு அவர் ஆண்டவர் உன்னை மாற்றுவார் அவர் பார்த்து கொள்வார் என்பார்.

 

என் 17 ஆவது பிறந்த தினத்தன்று நான் ஆண்டவரை கிட்டி சேர்ந்தேன். ஏப்ரல் 28 ம் திகதி நான் அவரிடம் வந்து கூறினேன் " ஆண்டவரே நான் என்னை தவறாக உணர்கிறேன்,  நான் ஒரு பாவி என்பது எனக்கு தெரியும்" என்று நான் எனக்கு எப்படி தோன்றியதோ அதை அப்படியே ஆண்டவருக்கு சொன்னேன் ' ஆண்டவரே என்னை மன்னியுங்கள் என் பெயர் ஜீவ புத்தகத்தில் எழுதப்படட்டும் என்னை உங்கள் பிள்ளையாக மாற்றுங்கள்" என்றேன். நான் மனந்திரும்பி என் வாழ்க்கையை ஆண்டவரிடம் ஒப்படைத்தேன். நான் ஆண்டவரிடம் என்னை மாற்றும் படியாகவும் என்னில் ஒரு வித்தியாசத்தை உண்டு பண்ணும்படியாகவும் மன்றாடினேன் நாட்கள் கடந்தது அனாலும் ஒரு மாற்றமும் நிகழவில்லை. ஒரே ஒரு மாற்றம் மட்டும் என்னில் காணப்பட்டது நான் ஆலயத்திற்கு செல்லுபவளாகவும் வேதம் வாசிபபவளாகவும் ஜெபம் செய்பவளாகவும் மட்டுமே காணப்பட்டேன்.

 

அப்படி இருக்கும் போது ஆகஸ்ட் மாதம் 15 நாட்கள் உபவாசித்து ஜெபிக்கும் ஒரு நிகழ்விற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அந்நிகழ்வில் கலந்து கொள்ள நான் முடிவுசெய்து ஆண்டவரிடம், "ஆண்டவரே நீங்கள் என்னோடு இடைபடவேண்டும்" என்று சொன்னேன். அந்த உபவாச ஜெபத்திலே என்னை தவிர மற்ற எல்லோரிடமும் ஆண்டவர் பேசினார்! அது ஆண்டவர் என்னை கனாததைபோல எனக்கு மிக வேதனை தரக்குடியதாக இருந்தது. ஆண்டவரிடம், நான் "ஆண்டவரே நீங்கள் என்னோடு இடைபட மாடீர்களா?" என்று கண்ணீர் வடித்து மன்றாடி கொண்டிருந்தேன்  "ஆண்டவரே நீங்கள் என்னை நேசிக்கிறீர்களா? இங்கே இருக்கிறீர்களா? என்னோடு இருக்கிறீர்களாமற்றவர்களிடம் பேசுவதைப்போல் என்னோடு ஏன் பேசவில்லை? மற்றவர்களிடம் அநேக வார்த்தைகளை பேசுகின்றீர்களே தீர்கதரிசன வார்த்தைகள் கூட ஆனால் என்னோடு இல்லையே" என்று கேட்டு கொண்டே இருந்தேன். கர்த்தர் என்னோடு கூட இருந்தால் ஒரு அடையாளத்தை எனக்கு காட்டும் படியாக கேட்டேன் அதற்கு அவர் எரேமியா 33:3 காட்டினார் "என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்."  என்ற வாக்குதத்தத்தை எனக்கு கொடுத்தார். அப்போது நான் "ஆண்டவரே நீங்கள் என்னோடு பேசினீர்களா?" என்றேன் காரணம் நான் அவரது ஓலியை கேட்டேன் அத்தோடுகூட எரேமியா 33:3 ல் உள்ள வார்த்தைகளை தரிசனமாக கண்டேன்.

 

நான் கர்த்தரிடம் "ஆண்டவரே இது எனக்கு தானா?" என்று கேட்டேன், அந்த வார்த்தையை எனக்காக நான் வைத்துக்கொண்டேன், ஒவ்வொருவரும் கர்த்தர் தங்களுக்கு கொடுத்த வார்த்தைகளை சாட்சியாக சொன்னார்கள் ஆனால் நானோ எனக்கு கொடுக்கப்பட்ட வார்த்தைகளை ரகசியமாக வைத்துக்கொண்டு தியானித்து கொண்டிருந்தேன்: "என்னை நோக்கிக் கூப்பிடு" என்பது ஜெபம் செய்வது ஆனால் "அறியாததும் எட்டாததுமான பெரிய காரியங்கள்" என்பது? இது நிச்சயமாக சொர்க்கமும் நரகமுமாகதான் இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். ஆகவே நான் ஆண்டவரிடம் சொன்னது "ஆண்டவரே சொர்க்கத்தை மட்டும் எனக்கு காட்டுங்கள் நரகத்தை நான் பார்க்க விரும்பவில்லை காரணம் அது பயங்கரம் நிறைந்த இடம் என்று நான் கேள்விப்பட்டதுண்டு இருப்பினும் உங்களுடைய சித்தம் எதுவோ அதை செய்யுங்கள் அதற்கு முன்பதாக எனக்குள் ஒரு மாற்றத்தை செய்யுங்கள் நான் என் தன்மையிலிருந்து மாற்றபட விரும்புகிறேன்" என்று சொன்னேன். 

 

நாங்கள் உபவாச ஜெபத்தை முடித்தபோது சோதனைகளும் கஷ்டங்களும் வந்தது சில சமயங்களில் நான் சோர்ந்து போனேன் கர்த்தரோடுகூட நடக்க முடியாத நிலை காணப்பட்டது அனாலும் அவர் எனக்கு பெலனளித்தார். நான் அவரது குரலை கேட்க அவரை நன்றாக தெரிந்துகொள்ள ஆரம்பித்தேன். நாங்கள் நல்ல நண்பர்களானோம். பரிசுத்த ஆவியானவரே நமது நல்ல நண்பர். நான் அவரிடம்  "ஆண்டவரே நீங்கள் தான் என் நல்ல நண்பர். நான் உங்களை அதிகமாக அறிந்துகொள்ள வேண்டும்" என்று சொன்னேன். என் சிந்தனைகளையும் அவரோடுகூட பகிர்ந்து கொள்ள ஆரம்பித்தேன்.  

 

நான் ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஜெபித்தேன் நவம்பர் மாதம் ஒரு கர்த்தருடைய ஊழியக்காரர் எங்கள் வீட்டிற்கு வந்தார் அவர் கூறியதாவது: " கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பாராக" நான் மறுமொழியாக "ஆமென்" என்றேன். தொடர்ந்தும் அவர் " நான் கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியை உனக்கு கொடுக்கும் படியாக இங்கே அனுப்பப்பட்டேன் நீ உன்னை தயார் படுத்தவேண்டும் காரணம் ஆண்டவர் நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு காண்பிக்க போகிறார். நீ எரேமியா 33:3 ல் இருந்து ஜெபித்து கொண்டிருந்தவாறு அவர் உனக்கு சொர்கத்தையும் நரகத்தையும் காண்பிக்க போகிறார்" என்றார். நான் அவரிடம் " ஆம் அது உங்களுக்கு எப்படி தெரியும்? நான் அதை யாரிடமும் சொல்லவில்லையே என்றேன். அதற்கு அவர் "நீ சேவிக்கிரவரும் ஆராதிக்கிரவருமான அதே தேவனையே நானும் ஆராதிக்கிறேன் அவரே இவை எல்லாவற்றையும் எனக்கு சொன்னவர்" என்றார். 

 

துரிதமாக நாங்கள் ஜெபம்பண்ண ஆரம்பித்தோம். எங்கள் சபையின் சில சகோதேரிகளும், குடும்ப அங்கத்தவர்களும் அங்கே எங்களோடு கூடி இருந்தனர். நாம் ஜெபிக்க ஆரம்பித்த உடனே நான் வானம் திறந்திருப்பதை கண்டேன். நான் அப்போது சொன்னது " வானம் திறக்கப்பட்டுள்ளது இரண்டு தேவதூதர் கீழே இறங்கி வருகின்றனர் " அங்கே இருந்த ஒருவர் சொன்னார் "கேள் ஏன் அவர்கள் இங்கே வந்தார்கள்" என்று.

 

அவ்விரு தேவதூதர்களும் உயரமாகவும் அழகாகவும் காணப்பட்டனர். அவர்களுக்கு இரண்டிரண்டு செட்டைகள் இருந்தன. அவர்கள் பெரிய உருவத்திலும் மினுங்க கூடிய தன்மையிலும் காணப்பட்டனர் அவர்களது உடல் பசும்பொன்னை போல தோற்றமளித்தன. கால்களில் பளிங்கை போன்ற சென்ட்ல்ஸ்சும் பரிசுத்தமான உடைகளும் அணிந்திருந்தனர். "ஏன் இங்கே வந்தீர்கள்?" என்று நான் அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் "நாங்கள் இங்கு வந்திருப்பது எங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வேலையை செய்து முடிப்பதற்காகவே நீ சொர்க்கத்துக்கும் நரகத்துக்கும் போய்வரவேண்டிய காரியம் முடியும் வரை நாங்கள் இங்கு இருக்க வேண்டும் என்றனர் " அதற்கு நான் "நல்லது, எனக்கு சொர்க்கத்திற்கு போகவேண்டும் நரகத்திற்கு அல்ல என்றேன்"  அவர்கள் என்னை பார்த்து புன்னகை செய்து அங்கேயே இருந்து விட்டனர் ஆனால் அதன்பிறகு அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் எங்கள் ஜெபத்தை முடித்தோம், ஆனால் அந்த தேவதூதர்கள் அங்கேயே காணப்பட்டார்கள்.  நான் பரிசுத்த ஆவியானவரையும் பார்க்க ஆரம்பித்தேன் அவர் என் சிறந்த நண்பர் அவர் இறைவன், அவர் எங்கும் நிறைந்திருக்கிறவர்! நான் அவருடைய தோற்றத்தை அதிக பிரகாசம் நிறைந்ததாகவும் கண்ணாடிக்கொப்பாக மறுபுறத்தை ஊடுருவி பார்கக்கூடியவாறும் காண்பேன் அவருடைய முகம் மிகவும் பிரகாசாம் நிறைந்ததாக இருக்கும். அன்பு நிறைந்த முகத்தோடும் புன்முறுவலோடும் அவர் என்னை நோக்குவதை நான் பார்ப்பதுண்டு. நான் அவரை எழிதில் கண்டுபிடித்துவிடுவேன் காரணம் அவர் அந்த இரண்டு தேவதூதர்களையும் விட அழகானவர். தேவதூதர்களும்  அழகானவர்கள் ஆனால் பரிசுத்த ஆவியானவர் அவர்களை பார்க்கிலும்  மிக மிக அழகானவர். நான் அவரது குரலை கேற்பதுண்டு அன்பு நிறைந்த பாசம் ததும்பும் ஒரு குரல். என்னால் அதை விவரிக்க முடியாது இடிமுழக்க குரலாகவும் அந்தக்குரல் காணப்படும். "நான் உன்னுடனே கூட இருக்கிறேன்" என்று அவர் எனக்கு சொல்வதுண்டு. சோதனைகள்  வந்த போதும் கூட நான் ஆண்டவரோடு தொடர்ச்சியாக நடக்க முயற்சித்தேன். பலவிதமான சோதனைகளுக்கு நாங்கள் முகம்  கொடுக்கவேண்டி வந்தது ஆனாலும் அவை எல்லா சந்தர்பங்களிலும் எங்களுக்கு ஜெயமே கர்த்தரால் வந்தது. "ஆண்டவரே உங்கள் சித்தமே நடக்கட்டும்" என்று நான் கர்த்தரிடம் கூறினேன். நான் தொடர்ச்சியாக அவதானித்தது என்னவென்றால் அந்த இரண்டு தேவதூதர்களும் என் பள்ளியிலும் வகுப்பறையிலும் காணப்படுவர் அப்போதெல்லாம் எனக்கு மிக மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

 

முன்பு ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வந்து என்னை சொர்க்கத்தையும் நரகத்தையும் பார்க்கும்படி ஆயத்தப்படும்படி கூறிய தேவனுடைய ஊழியக்காரர் இன்னும் ஒரு கடினமான காரியத்தையும் கூறினார் அதாவது நான் மரிக்க போவதாக கூறினார் அதை நான் கேட்ட போது அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது.

 

நான் மரிப்பது எப்படி? நான் இளவயதை உடையவள் அல்லவா? என்று கேட்டதற்கு அவர் "நீ ஒன்றையும் குறித்து கவலைப்படாதே கர்த்தர் எல்லா காரியத்தையும் சரிவர செய்வார் அவர் உன்னை மறுபடியும் உயிருடன் எழுப்புவார் அப்போது சொர்க்கத்தையும் நரகத்தையும் குறித்து கர்த்தருடைய திட்டத்தின்படி நாங்கள் அனைவரும் அறிந்து கொள்ளுவதற்கு நீ சாட்சி கொடுப்பாய்" என்றார் நான் ஆமென் என்றேன், ஆனாலும் என் உள்ளத்தில் நான் மரிப்பது எப்படி? ஒரு கார் என்மேல் மோதுமோ அல்லது நான் எப்படி மரிப்பேன்? என்று குலம்பிக்கொண்டிருந்தேன் அப்போது கர்த்தர் கலங்காதே எல்லாம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது என்றார் நான்  கர்த்தருக்கு நன்றி  சொன்னேன்.

 

நவம்பர் 6ம் திகதி நான் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்தேன். இன்னும் தேவதூதர்கள் என்னோடு தான் காணப்பட்டனர் எப்போதும் போலவே அவர்கள் தேவனை துதித்து கொண்டிருந்தனர். அவர்கள் என்னுடன் பேசுவதில்லை, எப்போதும் "பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் அல்லேலூயா அல்லேலூயா  எல்லா துதி கன மகிமை எங்கள் பரலோக பிதாவுக்கே" என்று எப்போதும் கர்த்தரை துதித்து கொண்டே இருப்பார்கள். பரிசுத்த ஆவியானவரும் கூட அவர்களோடு இருந்தார் நான் மிக மகிழ்ச்சியாக இருந்தேன். ஆவிக்குரிய ஜீவியம் அலுப்பாக காணப்படும் என்று பலரும் கூறலாம் ஆனால் அது மிகப்பெரிய பொய் மனிதர்கள் தேவனை தேடுவதை தடுக்கும் படியாக சாத்தானே இப்பொய்யை மனிதர்கள் மத்தியில் விதைத்துள்ளான். நானும் கூட இப்படிப்பட்ட எண்ணத்துடனே காணப்பட்டேன் ஆனால் கர்த்தரை பரிசுத்த ஆவியானவரை சந்தித்ததும் தான் எனக்கு விளங்கியது ஆவிக்குரிய ஜீவியமானது எவ்வளவு இன்பம் தரக்கூடிய ஒன்று என்பது. அதுவே பூமியில் அனுபவிக்க கூடிய பெரிய சந்தோஷம்!

 

நான் பரிசுத்த ஆவியானவரை பார்க்கவும் அவரோடு விளையாடவும் கதைக்கவும் கூட செய்வேன். தேவதூதர்கள் என்னுடன் பேசுவதில்லை அவர்கள் எப்போதும் கர்த்தரை துதித்து கொண்டே இருப்பார்கள் "பரிசுத்த ஆவியானவரே என்னிடம் வாருங்கள் இதை செய்யுங்கள்" என்று நான் கூப்பிடும்போதெல்லாம் அவர் அங்கு வருவார் அப்போது நான் அவரை காணுவேன் அவரை உணருவேன்.

 

பரிசுத்த ஆவியானவர் கால் ஊன்றி நிற்பதை நான் காணுவேன் அவருக்காக ஒரு நாற்காலியையும் ஆயத்தம் செய்வேன். அவர் இங்கே இருக்கிறார்! அநேகருக்கு அவரை பார்க்கமுடியாது! எங்களுடைய உறவு இன்னும் தொடர்கிறது அதை நிறுத்துவதற்க்கு எந்த ஒரு காரணமும் இல்லை. நீங்களும் கூட அந்த அனுபவத்துக்குள் வந்தால் உங்களாலும் அதை உணரமுடியும் எப்படியும் அவரைவிட்டு பின் வாங்கி போக எனக்கு முடியாது. அவர் மனிதர்கள் மீது கொண்டுள்ள பாசத்தையும் என்மீது கொண்டுள்ள பாசத்தையும் எண்ணி பார்க்கும் போதும் என் பழைய வாழ்க்கையிலிருந்து அவர் என்னை மீட்ட விதத்தை நான் எண்ணி பார்க்கும் போதும் அவருடைய இரக்கத்திற்காக மிகவும் மிகவும் நன்றி கூறுகிறேன்.

 

நவம்பர் 7 ம் திகதி நான் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வரும் வழியில் ஒரு குரலை கேட்டேன் அது "தயாராகு இன்று நீ மரிக்க போகிறாய்" என்றது. அது பரிசுத்த ஆவியானவருடைய குரல் ஏனெனில் நான் அவரை கண்டேன் ஆனாலும் நான் அவருடைய வார்த்தையை புறக்கணிக்கும் விதமாக "ஆண்டவரே நான் இன்று மரிக்க கூடாது" என்றேன். மறுபடியும் அவர் " தயாராகு இன்று நீ மரிக்க போகிறாய்" என்றார் ஆனால் இந்த முறை அவருடைய குரல் மிகவும் சத்தமாகவும் மிகுந்த வல்லமையோடும் காணப்பட்டது. அப்போது நான் "ஆண்டவரே நீங்கள் தான் என்னோடு பேசுவது என்று எனக்கு தெரியும் ஆனாலும் நான் ஒரே ஒரு அடையாளத்தை மட்டும் உங்களிடம் கேட்கின்றேன் அதன் பின் நான் பயந்தாலும் கூட உங்கள் சித்தம் என்னில் நடக்கட்டும் நீங்கள் சொல்வதை எல்லாம் செய்கின்றேன் என்னை உங்களுக்கு அர்பணிக்கின்றேன் ஏனெனில் நீங்கள் உண்மையான தெய்வம் என்பது எனக்கு தெரியும்" என்றேன்.

 

நான் ஜெபித்து "ஆண்டவரே முன்பு என்னிடம் உங்களால் அனுப்பப்பட்ட அதே ஊழியக்காரர் நான் வீடு செல்லும் முன் அங்கே இருக்க வேண்டும் நான் இன்று மரிப்பேன் என்று அவர் சொல்லவேண்டும்" இதுவே நான் எதிர் பார்க்கும் அடையாளம் என்றேன். ஆண்டவருக்கு எல்லாம் தெரியும் நான் எதை கேட்பேன் என்றும் தெரியும் ஆகவே அவர் நான் வீடு செல்லும் முன்பாகவே அவருடைய ஊழியக்காரர் அங்கே இருந்தார்.

 

மக்சிமா
என் மகள் வீட்டுக்கு வந்ததும் நாங்கள் சமையலறையிலே இருந்தோம். அன்ஜளிக்கா கர்த்தருடைய ஊழியக்காரரை பார்த்ததும் "கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக" என்றாள் பதிலுக்கு அவர் "கர்த்தர் உன்னையும் ஆசீர்வாதிப்பார் நீ ஆயத்தமா? இன்று தான் கர்த்தர் உன்னை அழைத்து போகப்போகும் நாள், மாலை 4 மணிக்கு" என்றார். அவள் அங்கே நின்றிருந்தால், அவள் எதிர்பார்த்த வண்ணமாகவே கர்த்தர் அவள் வேண்டுதலை கேட்டார்.

 

அன்ஜளிக்கா

நான் இதை கேட்ட மாத்திரத்தில் " ஆமென் ஆனால் ஆண்டவரே நான் மரிக்க கூடாது,  என்னால் முடியாது, எனக்கு திகில் பிடிக்கிறது பயமாக இருக்கிறது" என்றேன். அப்போது அங்கே இருந்த ஊழியக்காரர் சொன்னார் "நாங்கள் இப்போது ஜெபிப்போம் கர்த்தருடைய நாமத்தினாலே இப்போதே  உன் பயம் உன்னை விட்டு போய் விடும்" என்றார். நான் "ஆமென்" என்றேன் நாங்கள் ஜெபித்தோம் உடனடியாகவே என் பயம் என்னை விட்டு போனது, ஒரு பேரின்பம் என்னை ஆட்கொண்டது, மரிப்பது நல்ல காரியம் அது எனக்கு நடக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்தது! எல்லோரும் என்னை பார்த்து கொண்டிருக்கும் போதே நான் சிரிக்கவும் மகிழவும் ஆரம்பித்தேன். நான் சிரிக்கவும் பாடவும் குதிக்கவும் செய்தேன் நான் பயத்தை மறந்து மகிழ்ச்சி அடைந்திருப்பதை எல்லோரும் பார்த்தனர்.

 

மக்சிமா

என் மகள் சீக்கிரத்தில் சந்தோஷத்தை உணர்ந்தவளாய் சாப்பிடும்படி ஆயத்தமானாள். எல்லாவற்றிலும் சிறிய அளவு உணவையே எடுத்து கொண்டாள் "நன்றாக நிறைவாக சாப்பிட்டேன் ஒரு வேலை நான் திரும்பி வராவிட்டால்!" என்றாள். 

 

அன்ஜளிக்கா

எல்லோரும் என்னை பார்த்து நகைத்து கொண்டு கேட்டனர் "துக்க படுவதற்கு பதிலாக ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்? நீ மகிழ்ச்சியாக சந்தோஷமாக இருக்கிறாயா? என்றனர்" "ஆம்! ஏனெனில் நான் என் ஆண்டவரை பார்க்கபோகிறேன் அவரோடு இருக்க போகிறேன். ஆனால் நான் திரும்பி வருவேனா என்பது எனக்கு தெரியாது ஆகவே எனக்கு சொந்தமான எல்லாவற்றையும் நான் கொடுத்துவிட போகிறேன்" என்றேன். எல்லோரும் என்னை பார்த்து கேட்டனர் "உனக்கு சொந்தமான எல்லாவற்றையும் கொடுத்துவிட போகிறாயா என்று? "என் அம்மா என்னை ஆச்சரியத்தோடு பார்த்தார்!

 

மக்சிமா

என் மகள் அவளுடைய பொருட்களை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க தொடங்கினால். எல்லாவற்றையும் கொடுத்தாள் எல்லாவற்றையும்!. எப்போதும் போல எங்கள் சபையின் சகோதரிகள் சிலர் எங்களோடு இருந்தனர் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது   ஒன்றை  அவள் கொடுத்தாள். நான் அதை பற்றி அவளிடம் கேட்ட போது அவள் "நான் மறுபடியும் திரும்பி வந்தால் இவர்கள் என் எல்லா  பொருட்களையும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் நான் திரும்பி வராவிட்டால் அவர்களே அவற்றை  வைத்து கொள்ளலாம் என்றாள்.

 

அன்ஜளிக்கா

நான் இந்த வார்த்தைகளை என் அம்மாவிடம் சொன்னதும் அவர்கள் அடைந்த வேதனையை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால் நான் மிக மகிழ்ச்சியாக என் பொருட்களை பகிர்ந்து கொண்டிருந்தேன் என் உடைகள் என் படுக்கை என் கை தொலைபேசி எல்லாவற்றையும் கொடுத்தேன் ஒரு நிபந்தனையோடு கூட என்ன வென்றால் நான் மறுபடியும் திரும்பி வந்தால் அவைகள் எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்பதே.

 

மக்சிமா

அவள் மிக உறுதியாக இருந்தாள் ஆனால் ஒரு தாயாக எனக்கு மிகவும் துக்கமாக இருந்தது. அது இலகுவான காரியம் அல்ல. "ஆண்டவரே அந்த சந்தர்ப்பம் எப்போது வரும்? அது எப்படி இருக்கும்?" என்று நான் ஆச்சரியப்பட்டு கொண்டிருந்தேன் எனக்கு அது விளங்க வில்லை. அவர்கள் ஜெபிக்க ஆரம்பித்தனர் நானோ வீட்டு காரியங்களை ஒழுங்கு படுத்தி கொண்டிருந்தேன். அவர்கள் என்னை ஜெபிக்க அழைத்தபோது "நீங்கள் ஜெபியுங்கள்  நான் என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்" என்றேன். 

 

அன்ஜளிக்கா

நாம் எல்லோரும் ஜெபிக்கும் போது அவர்கள் என்மீது கண்நோக்கமாக இருந்தார்கள். நான் ஜெபித்தேன் "ஆண்டவரே உங்கள் சித்தமே என்னில் நடக்க வேண்டும், நீங்கள் பொய் சொல்லவோ மனம் மாறவோ ஒரு மனிதன் அல்ல நீங்களே உண்மையான தெய்வம் என்பது எனக்கு தெரியும். நான் உங்கள் சித்தத்தை செய்ய தவருவேனானால் என்னை உங்களோடு கூட எடுத்து கொள்ளுங்கள், சரியாக செய்வேனானால் என்னை மறுபடியும் உயிரடைய செய்யுங்கள், நான் உண்மையை சொல்லும் படியாக எனக்கு உதவி செய்யுங்கள், என்னை ஆயத்த படுத்துங்கள். மனிதர்கள் மனந்திரும்பும் படியாக நான் எடுத்துரைக்கவும் உபதேசம் பண்ணவும் எனக்கு உதவி செய்யுங்கள்." என்றேன் இது தான் என் சிறிய ஜெபமாக இருந்தது. இதை நான் அந்த ஊழியக்காரருக்கு சொல்லிவிட்டு என் அம்மாவிடம் இதை சொல்லவேண்டாம்என்று சொன்னேன் அதற்கு அவர் இப்போது அவளிடம் சொல்லமாட்டேன் ஆண்டவர் உன்னை கொண்டுபோனதும் சொல்லுவேன் என்றார். நாங்கள் தொடர்ந்தும் ஜெபம் செய்து ஒருவர் கையை ஒருவர் பற்றி  கொண்டு ஜெபம் செய்தோம்.  

 

மக்சிமா

சரியாக பி.ப. 3:30 மணிக்கு கர்த்தர் தன்னுடைய ஊழியக்காரரிடம் என் மகளை எண்ணெயால் அபிஷேகம் செய்யும் படி சொன்னார். நாங்கள் சிலர் அவளை அபிஷேகம் பண்ணும் படியாக ஒரு அறைக்குள் சென்றோம். அவளை முழுவதும் அபிஷேகம் பன்னும் படியாக அவர் எங்களுக்கு நிமிடங்கள் மட்டுமே கொடுத்தார். அவள் உச்சிமுதல் பாதம் வரை முழுவதுமாய் அபிஷேகம் பண்ணப்பட்டாள்.

 

 

அன்ஜளிக்கா மரித்தல்

அன்ஜளிக்கா

என் அம்மாவும் சபை சகோதரி ஒருவரான பெடிமா நவர்றேடே என்பவரும் என்னை எண்ணெயால் அபிஷேகம் செய்தனர். அவர்கள் என்னை அபிஷேகித்தபோது ஏதோ என்னை சுற்றி கண்ணாடியை போல உரை இடபடுவதை நான் உணர்ந்தேன். அதை பற்றி விவரிப்பது கடினம். என்னை சுற்றி ஒரு கடினமான உரை காணப்பட்டது அதன் பின் அவர்களால் என்னை தொட முடியவில்லை.

மக்சிமா

நாங்கள் ஜெபித்து கொண்டிருந்த போது  நான் அன்ஜளிக்கா மேல் என் கைகளை வைக்க முயற்சித்தேன் என்னால் அவளை தொட முடியவில்லை. அவளை ஏதோ மூடி இருந்தது. அது கடினமாக இருந்தது யாருக்கும் அவளை தொட முடியவில்லை. அது அவள் உச்சந்தலை முதல் பாதம் வரை காணப்பட்டது சாதாரணமாக 12  அங்குல அளவிட்கு அதன் பருமன் காணப்பட்டது. இந்த காரியமே என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. ஊழியத்தில் அநேகர் மீது நான் ஜெபிக்கும் படியாக கைகளை வைத்ததுண்டு ஆனால் இதை போன்ற ஒரு காரியம் எப்போதும் நடந்ததில்லை. ஏதோ நடக்கிறது என்று நான் கூறிக்கொண்டே ஜெபிக்கவும் கர்த்தரை துதிக்கவும் ஆரம்பித்தேன். உடனடியாக என் மனதில் பெரும் மகிழ்ச்சி உண்டானது எனது துக்கம் வேதனை எல்லாம் என்னை விட்டு போனதை உணர்ந்தவளாக மகிழ்ச்சியோடு ஜெபித்தேன். எல்லோருமாக ஜெபித்து கொண்டே இருந்தோம். சரியாக பி.ப. 4 மணிக்கு என் மகள் நிலத்திலே சரிந்து விழுந்தாள்.

 

அன்ஜளிக்கா

ஜெபித்து கொண்டிருந்தபோது என் சுவாசம் குறைந்தது, நான் மூச்சு விட கஷ்டப்பட்டேன். என் அடி வயிற்றிலும் மார்பிலும் ஒருவித வலி காணப்பட்டது. என் இரத்த ஓட்டம் குறைந்து போவதை உணர்ந்தேன் ஒரு பயங்கரமான வேதனை என் முழு உடம்பையும் வாட்டியது. அப்போது நான் "ஆண்டவரே பெலபடுத்துங்கள் பெலபடுத்துங்கள்" என்று சொல்லிக்கொண்டே இருந்தேன். எனக்கு பெலன் இருக்கவில்லை அது என்னை விட்டு போனது! நான் ஆவியில் இருந்துதேன்  என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன் நான் வானம் திறப்பதை கண்டேன் ஆயிரக்கனக்கான தேவதூதர்கள் ஒன்று கூடுவதை கண்டேன். அந்த  ஆயிரக்கனக்கான தேவதூதர்களுக்கு மத்தியிலே, ஒரு ஒளி சூரியனை விட 10,000 மடங்கு அதிகமாக பிரகாசித்தது. அப்போது நான் "ஆண்டவரே அது நீங்களா? யார் வருவது  நீங்களா?" என்று கேட்டேன். 

 

மக்சிமா

அவள் கீழே விழுந்த போது நாங்கள் அவள் தானாக நிற்கும் படியாக அவளை தூக்கினோம் ஆனால் அவளுக்கோ முடியவில்லை. ஆனால் இப்போது அவளை எங்களால் தொட முடிந்தது. அவள் முனங்கினாள் "ஜெபியுங்கள் அம்மா ஜெபியுங்கள் எனக்கு பெலன் இல்லை எனக்கு பெலன் இல்லை என் உடல் வலிக்கிறது" என்றாள் முதலில் அவளுக்கு நெஞ்சு வலித்து பின்பு அந்த வலி அவளது அடி வயிறு வரை சென்றதாம். நாங்கள் கர்த்தரிடம் ஜெபித்து கொண்டும் மன்றாடிக்கொண்டுமிருந்தோம் அவர் அவளது உயிரை எடுத்து கொண்டார்!. 

 

அந்நாள் வரை யாரும் மரிப்பதை  நான் பார்த்தது கிடையாது. என் மகள் மரண வேதனை படுவதை, அவள் மரிப்பதை நான் பார்த்தேன், அது இலகுவான காரியம் இல்லை! அவள் கடைசியாக சொன்ன வார்த்தைகளை என்னால் விளங்கி கொள்ள முடியவில்லை கடைசியாக ஏதோ சொல்லி முடித்தாள். அவளது முகத்தில் எனது கைகளை வைத்தேன், கண்ணாடி ஒன்றை அவள் மூக்கருகே வைத்து அவள் சுவாசிக்கின்றாளா? என்று பார்த்தேன் சுவாசம் இருக்கவில்லை, அவள் சற்று நின்றிருந்தாள். அவளை தொட்டு பார்த்தபோது அவள் உடலில் சாதாரணமான வெப்பம் இருந்தது. நான் ஒரு போர்வையை எடுத்து அவளை போர்த்தினேன். சற்று நேரத்தில் அவள் உடல் குளிர்ந்து போனது. தலை மயிரும் வாடி இறந்த மனித மயிரை போலானது அவள் உடல் மிகவும் குளிர்ந்து போனது.

 

 

அன்ஜளிக்கா

இயேசு கிறிஸ்து கீழே இறங்கி வந்தார், நான் என் உடல் மரிப்பதை உணர்ந்தேன்.  இயேசு கிறிஸ்துவும் தேவதூதர்களும் நெருங்கி வந்தனர், என் உயிர் உடலை விட்டு பிரிவதை உணர்ந்தேன் நான் மரித்தேன் அது மிகவும் வேதனையான வலியாக இருந்தது! என் உடல் நிலத்தில் விழும்போதே அவர்கள் இறங்கி வந்திருந்தனர். என் வீடு தேவதூதர்களால் நிறைந்திருந்தது, அவர்களுக்கு நடுவில் நான் ஒரு ஒளியை கண்டேன் அந்த ஒளி சூரியனை விட பிரகாசமாக இருந்தது! என் ஆவியும் ஆத்துமாவும் பிரியும் பொது நான் பாரிய வலியை உணர்ந்தேன் அது மிகவும் கடினம்!.

 

நான் கதறி அழுது, என் உடல் நிலத்தில் இருப்பதை கண்டேன். நான் "ஆண்டவரே என்ன நடக்கிறது? என்ன நடக்கிறது? நான் என் உடலை தொட வேண்டும் அதற்குள் போக வேண்டும்" என்றேன் ஆனால் நான் முயன்றபோது என்னால் அதை செய்ய முடியவில்லை என் உடலை தொட்டால் அது என் கைக்கு அகப்படாமல் காற்றை பிடிப்பதை போல ஊடுருவி சென்றது. அங்கு ஜெபித்து கொண்டு இருந்த ஒருவருக்கும் என் குரல் கேட்க வில்லை!. "ஆண்டவரே உதவி செய்யுங்கள் என்று கதரி கொண்டிருந்தேன்!". 

 

 

மக்சிமா

நாங்கள் ஜெபித்து கொண்டிருக்கும்போதே என் கணவரும் வந்து சேர்ந்தார் , மகளின் உடலை அவர் பார்த்தார். அவ்வேளையிலே என்ன செய்வதென்று எனக்கு தெரியாதிருந்தது கர்த்தர்  எனக்கு மிகுந்த பெலனை கொடுத்தார் . என் மகள் கோமாவில் இருப்பதை போல காணப்பட்டாள், ஆனாலும் எனக்கு தெரியும் அவளுக்கு ஒன்றும் நடக்கவில்லை என்று காரணம் அது கர்த்தருடைய வேலையாய் இருந்தது. நான் கூறினேன் "கர்த்தாவே உங்கள் சித்தமே நடக்கவேண்டும்" என்று.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

அன்ஜளிக்கா

அப்போது நான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குரலை கேட்டேன், அழகியகுரல் இடிமுழக்கத்தைபோல அன்பு நிறைந்த ஒரு குரல், "பயப்படாதே, என் மகளே, நானே யேகோவா  உன் தேவன், உன் கர்த்தர், நான் உனக்கு ஆணை இட்டதை உனக்கு காண்பிக்கும் படியாகவே இங்கே வந்திருக்கிறேன். எழுந்திரு நானே யேகோவா, உன் வலதுகையை பிடித்திருப்பவரும் பயப்படாதே உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்பவரும்" என்றார். உடனே நான் எழுந்தேன் அதற்கு முதல் நான் என் உடலருகே மண்டியிட்டு  அதற்குள் போக வகைதேடி கொண்டிருந்தேன். அவருடைய குரலை நான் கேட்டதும் என் பயம் என்னை விட்டு அகன்றது.

 

நான் நடக்க தொடங்கினேன் தேவதூதர்கள் விலகி எனக்கு வழிவிட்டனர். அங்கு ஒரு வல்லமையான ஒளி உதித்தது நான் அதையே நோக்கிப்பார்த்தேன், நான் என்னுள் சமாதானத்தை உணர்ந்தேன். நான் பார்த்தபோது மிக அழகான, உயர்ந்த, அபூர்வமான, கட்டுமஸ்த்தான, திடகாத்திரமான ஒரு மனிதனை கண்டேன். அவரிடமிருந்து வல்லமையான வெளிச்சம் புறப்பட்டது அவருடைய முகத்தில் அதிகமான ஒளி பிரகாசித்த படியால் எனக்கு அவருடைய முகத்தை பார்க்க கூடாமலிருந்தது ஆனால் நான் அவரது அழகிய தலைமயிரை பார்த்தேன் அது பசும்பொன்னை போல இருந்தது வெள்ளை நிறமான அங்கி அணிந்திருந்தார்  அவரது மார்பில் ஒரு பொன்னிறமான கச்சை காணப்பட்டது அதில் வார்த்தைகள் எழுதி இருக்கக்கண்டேன் அது "ராஜாதி ராஜா கர்த்தாதி கர்த்தா" என்பதே.

 

அவர் கால்களில் தகதகவென மின்னக்கூடிய பசும் பொன்னாலான செண்ட்ல்ஸ் அணிந்திருந்தார். அவர் மிகவும் மிகவும் அழகாக இருந்தார்!! தன் கையை என்னிடமாக நீட்டினார் நான் அவர் கையை பிடித்தேன் அதன் பிறகு தான் என் உடம்பை என்னால் தொட முடிந்தது. நான் அவரிடம் "என்ன நடக்கின்றது?" என்று கேட்டேன் அதற்கு அவர் "நான் உனக்கு நரகத்தை காட்டப்போகிறேன், ஆகையால் நீ திரும்பி வந்து நரகத்தின் உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும்; நரகம் என்ற இடம் இருப்பது உண்மையே. அத்தோடு நான் என்னுடைய மகிமையான சொர்க்கலோக ராட்சியத்தையும் உனக்கு காண்பிப்பேன் ஆகையால் அந்த இடத்துக்கு செல்ல நீ என் ஜனங்களை ஆயத்தப்படும்படியாக சொல்லவேண்டும்.  என் மகிமையான சொர்க்கலோகம் உண்மையே!, நானும் உண்மையே! என்றார்.

 

பின்னும் அவர் "மகளே பயப்படாதே" என்று மறுபடியும் கூறினார். அதற்கு நான் "ஆண்டவரே நான் சொர்க்கத்தை பார்க்க ஆசைப்படுகிறேன் ஆனால் நரகத்தை பார்க்க விரும்ப வில்லை காரணம் நான் அது கொடுமை நிறைந்த இடம் என்று கேள்விப்பட்டதுண்டு" என்றேன். அவர் சொன்னார் "மகளே நான் உன்னுடன் இருக்கிறேன். நான் உன்னை அந்த இடத்தில் விட்டு விட மாட்டேன் உனக்கு நான் அந்த இடத்தை காட்ட வேண்டும் காரணம்  ஜனங்களில் பலர் நரகம் உண்மை என்பதை அறிந்துள்ளனர் ஆனால் அதைக்குறித்த பயம் அவர்களிடம் இல்லை அதை ஒரு விளையாட்டாகவும்,கேலியாகவும் எண்ணுகிறார்கள் இன்னும் பலருக்கு அதன் தன்மை தெரியாது. அதனால் தான் நான் உனக்கு அதை காட்டபோகிறேன் என் சொர்க்கலோக ராட்சியத்திற்குள் வரும் ஜனங்களை விட நரகத்தில் கெட்டு போகிறவர்கள்  அதிகமாக இருக்கிறார்கள்" என்றார் அவர் இதை சொல்லிமுடிக்கும்போது அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து அவர் உடைகளை நனைத்தது. "ஆண்டவரே ஏன் அழுகின்றீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் மகளே அந்த இடத்திலே அதிகமான  ஜனங்கள் வெந்து கொண்டிருக்கிறார்கள். நரகத்திற்கு போவதை தடுக்கும் முகமாக நான் உனக்கு காட்டும் காரியங்களை நீ  ஜனங்களுக்கு சொல்ல வேண்டும்" என்றார்.

 

 

நரகம்

 

அவர் கதைத்து கொண்டிருக்கும்போதே திடீரென  நாங்கள் இருந்த இடம் நகர ஆரம்பித்தது பூமி குலுங்கி  பிளவுன்டு திறந்தது.  நான் இருண்ட பெரிய குழி போன்ற ஒரு சுரங்கம் கீழே இருப்பதை கண்டேன்.

 

நாங்கள் ஒரு பாறையில் நின்றிருந்தோம் தேவதூதர்கள் எங்களை சூழ இருந்தனர். அப்போது நான் "ஆண்டவரே நான் அந்த இடத்துக்கு போக வேண்டாம்" என்றேன். ஆண்டவர் சொன்னார் "மகளே பயப்படாதே நான் உன்னுடனே இருக்கிறேன்" என்றார். நொடிப்பொழுதில் நாங்கள் அந்த சுரங்க குழிக்குள் இறங்கி சென்றோம். அந்த சுரங்கம் பயங்கர இருட்டாக இருந்தது. நான் ஒரு பெரிய வட்டத்தை போல கண்டேன் ஆயிரக்கனக்கான குரல்களை கேட்டேன்.

 

நான் என் உடல் எரிவதை போல் அதிகப்படியான வெப்பத்தை உணர்ந்தேன், "ஆண்டவரே என்ன இது? நான் அந்த இடத்துக்கு போக வேண்டாம்" என்றேன். ஆண்டவர் சொன்னார் "இது நரகர்த்திற்கு செல்லும் சுரங்கபாதை மட்டுமே" என்றார். அங்கே பயங்கரமான, குமட்டக்கூடிய துர்நாற்றம் வீசியது நான் ஆண்டவரிடம் அங்கு போக வேண்டாம் என்று கெஞ்சினேன். "மகளே நீ இந்த இடத்தை தெரிந்து கொள்வது அவசியம்" என்றார். "ஏன்? ஆண்டவரே ஏன்?" என்றேன். "நீ நரகத்தின் உண்மையை மக்களுக்கு சொல்லவேண்டும் என் சொர்க்கலோக ராட்சியத்திற்குள் வரும் ஜனங்களை விட நரகத்தில் கேட்டு போகிறவர்கள்  அதிகமாக இருக்கிறார்கள்" என்றார். அவருடைய வார்த்தைகள் என்னை தைரியப்படுத்தியது நான் தொடர்ந்து நடந்தேன்.

 

நாங்கள் அந்த சுரங்கத்தின் முடிவிற்கு வந்து சேர்ந்தோம் நான் நெருப்பால் நிறைந்திருந்த பாதாளத்தை கண்டேன். ஆண்டவர் சொன்னார் "மகளே நான் இதை உனக்கு தருகிறேன்" என்றார் அது இணைக்கப்பட்ட காகித தாள்களாக இருந்தது "மகளே இந்த பென்சில்லை எடுத்துக்கொள் அப்போது நீ  நான் உனக்கு காண்பிக்கின்ற, கூறுகிற, நீ உணருகிற, பார்க்கிற ஒவ்வொன்றயும் எழுதிக்கொள்ளலாம்" என்றார். அப்போது நான் "சரி ஆண்டவரே நான் செய்கிறேன் இப்போதும் நான் அநேக ஆத்துமாக்கள் நெருப்பினால் வெந்து வேதனைப்படுவதை காண்கிறேன்" என்றேன்.

 

மக்சிமா

நேரம் கடந்து கொண்டிருந்தது என் மகளுடைய சரீரம் அங்கேயே கிடத்தப்பட்டிருந்தது. "ஆண்டவரே என்ன நடக்கிறது?"  என்றேன் காரணம் என் மகளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது நான் துடைத்தேன் மீண்டும் வழிந்தது கண்ணாடி ஒன்றை அவள் மூக்கருகே வைத்து அவள் சுவாசிக்கின்றாளா? என்று பார்த்தேன் சுவாசம் இருக்கவில்லை நாடி துடிக்கவில்ல வயிற்றில் கைவைத்து பார்த்தேன் ஒன்றும் இல்லை அங்கே இருந்த கர்த்தருடைய ஊழியக்காரர் சொன்னார் "அவள் இப்போது பார்த்து கொண்டிருக்கின்ற இடம் சிரிக்க கூடிய இடம் இல்லை வேதனைப்படுகிற இடம்" என்றார்.

 

அன்ஜளிக்கா

நான் ஆண்டவரிடம் சொன்னேன் "நான் நரகம் என்பது உண்மை என்றும், அப்படி ஒரு இடம் இருக்கிறது என்றும் சாட்சி கொடுக்கிறேன் ஆனால் என்னை இப்போது இந்த இடத்திலிருந்து கொண்டு போய் விடுங்கள்!" என்றேன். அதற்கு கர்த்தர் பதிலாக "மகளே இன்னும் நாம் சரியான இடத்தை அடையவே இல்லை, இன்னும் நான் உனக்கு ஒன்றையும் காட்டவும் இல்லை. அதற்கு முன்பாக உன்னை இந்த இடத்திலிருந்து கொண்டு போய் விட வேண்டுமா?" என்றார். ஆனால் நான் "ஆண்டவரே தயவு செய்து என்னை இந்த இடத்திலிருந்து கொண்டு போய் விடுங்கள்!" என்றேன். நாங்கள் பாதாளத்துக்குள் கடந்து செல்ல ஆரம்பித்தோம். "ஆண்டவரே வேண்டாம் வேண்டாம் நான் போகக்கூடாது" என்றேன். அதற்கு அவர் நீ கட்டாயம் இந்த இடத்தை பார்க்க வேண்டும் என்றார்.

 

பயங்கரமான பிசாசுகளை நான் பார்த்தேன் பெரிதும் சிறிதுமாக எல்லாவிதத்திலும் அவை காணப்பட்டன. அவைகள்  கைகளில் எதையோ தூக்கிக்கொண்டு  வேகமாக ஓடிக்கொன்டிருந்தன. "ஆண்டவரே அவைகளது கைகளில் என்ன? எங்கே இவ்வளவு வேகமாக ஓடுகின்றன?" அதற்கு கர்த்தர் "மகளே அவைகளுக்கு தங்கள் முடிவு சீக்கிரம் வந்து கொண்டிருக்கிறது என்று தெரியும் அதனால் முடிந்தளவு மனிதர்களை அழிக்கும் படிக்கு ஓடிக்கொனடிருக்கின்றன குறிப்பாக என் ஜனங்களை அழிக்கும் படிக்கு…. அவைகளது கையில் இருப்பது மனிதர்களை அழிக்கும் படிக்கு வீசக்கூடிய முட்கள். ஒவ்வொரு பிசாசிற்கும் ஒரு பெயர் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பெயரின் படி அவைகளுக்கு  வீசக்கூடிய முள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த பெயருள்ள மனிதனை அழித்து இந்த நரகத்திற்க்கு கொண்டு வரும்படியான  முள்ளே அவைகளது கையில் இருக்கிறது. அவைகளது லட்சியம் அந்த குறிப்பிட்ட நபரை நரகத்திற்கு கொண்டு வருவதே" என்றார். நான் பார்த்தேன் பிசாசுகள் பூமிவரை ஓடியது ஆண்டவர் சொன்னார் "அவைகள் ஓடுவது மனித இனத்தை இதற்க்குள் கொண்டுவரவும் வீசவுமே" என்று. அவர் இவற்றை சொல்லி கொண்டே அழுதார் மிகவும் அழுதார். எல்லா சந்தர்பங்கள்ளிலும் அழுதார் நானும் அவரோடு சேர்ந்து அழுதேன்.

 

 

 

மக்சிமா

என் மகள் 23  மணித்தியாலங்கள் மரித்திருந்தாள் நான் அதைக்குறித்து எந்த ஒரு அதிகாரிக்கும் தகவல் கொடுக்கவில்லை நான் ஜெபித்து கர்த்தரிடம் "கர்த்தாவே நான் 24  மணித்தியாலங்கள் பார்ப்பேன் என் மகள் உயிரடையாவிட்டால் வைத்தியருக்கு தகவல் கொடுப்பேன்" என்றேன். ஆனால் கர்த்தர் என் மகளை 24  மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே உயிரோடு எழுப்பினார்.

 

அன்ஜளிக்கா

ஆண்டவர் என்னிடம் "நான் உனக்கு காண்பிக்கும் காரியங்களை பார்க்க நீ ஆயத்தமா?" என்றார். நான் "ஆம் ஆண்டவரே" என்றேன். அவர் என்னை செல் எனப்படும் சிறிய அறைக்கு அழைத்து போனார் அங்கே ஒரு வாலிபன் நெருப்பில் வெந்து வேதனைப்பட்டு கொண்டிருந்தான். நான் கவனித்தேன் அந்த சிறிய அறை வரிசைபடுத்த பட்டிருந்து, அவைகளின் இலக்கங்கள் எனக்கு விளங்க வில்லை  அவைகள் பின்னிருந்து காணப்பட்டது.அங்கே ஒரு பெரிய பெயர்ப்பொறி கல் காணப்பட்டது. அந்த வாலிபன் தன் நெற்றியில் 666 என்ற இலக்கத்தை உடையவனாக இருந்தான். அத்தோடு ஒரு உலோகத்தகடு அவனது தோளோடு இணைக்கப்பட்டிருந்தது புழுக்கள் அவனை தின்றது. அந்த உலோக தகட்டை மட்டும் புழுக்களுக்கோ நெருப்பிற்கோ பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஆண்டவரை பார்த்து அவன் கதறினான் "ஆண்டவரே என் மீது இறக்கம் காட்டுங்கள் இந்த இடத்திலிருந்து என்னை வெளியே எடுத்து விடுங்கள். என்னை மன்னியுங்கள் ஆண்டவரே" என்றான். கர்த்தர் பதிலாக "இப்போது மிகவும் பிந்தி விட்டது. நான் உனக்கு எவ்வளவோ சந்தர்ப்பங்களை கொடுத்தேன் நீ மனந்திரும்பவில்லை" என்றார்.

 

நான் "ஆண்டவரே இவன் ஏன் இங்கிருக்கிறான்?" என்றேன், எனக்கு விளக்கப்பட்டது. பூமியில் அவன் இருக்கும் போது அவனுக்கு கர்த்தருடைய வார்த்தை தெரிந்திருந்தும் அவன் கீழ்படியவில்லை போதை பொருட்களை விரும்பி பாவித்தான் தீயவழியில் நடந்தான். கர்த்தர் அநேக முறை எச்சரித்தும் அவனுக்கு அவரை பின்பற்ற பிடிக்கவில்லை. ஆண்டவர் "மகளே இவன் இங்கிருப்பது என் வார்த்தைகளை தள்ளிவிட்டதால் தான், யாராவது என் வார்த்தைகளை தள்ளிவிட்டால் அதுவே அவர்களுடைய நியாயத்தீர்ப்பு: நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். (யோவான் 12:48 ) என்று சொல்லி அழுதார்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அழும் விதமானது பூமியில் எந்த ஒரு மனிதனும் அழும் விதத்தை பார்க்கிலும் அதிக வித்தியாசமானது. உள்ளத்திலிருந்து மிகவும் வேதனைப்பட்டு தேம்பி அழுதார், "நான் நரகத்தை உண்டாக்கியது மனிதவர்க்கத்திற்காக அல்ல" என்றார் அப்போது ஏன் ஆண்டவரே மனிதர்கள் இங்கிருக்கிறார்கள்? என்றேன்" அவர் "மகளே நான் நரகத்தை உண்டாக்கியது சாத்தானுக்காகவும் அவன் தூதர்களான பிசாசுகளுக்காகவுமே;(மத்தேயு 25:41) ஆனால் பாவத்தினாலும் மனந்திரும்பாததாலும் மனிதர்களுடைய முடிவு நரகத்தில் காணப்படுகின்றது. என்னுடைய ராட்சியத்துக்கு வருபவர்களை விட கெட்டுபோகும் ஜனங்களே அதிகமாக இருக்கிறார்கள்(மத்தேயு 7: 14)" என்றார். அவர் தொடர்ந்தும் அழுதார் அவர் அழுத விதம் என்னை மிகவும் வருத்தப்படுத்தியது."மகளே ஒருவரும் கெட்டு போகாதபடிக்கும் அவர்களது முடிவு இங்கே வராத படிக்குமே நான் மனிதவர்கத்திற்காக என் ஜீவனை கொடுத்தேன். என் அன்பிற்கும் இறக்கத்திற்கும் மேலாக என் ஜீவனையே நான் கொடுத்தது எல்லா ஜனங்களும் மனந்திரும்பி பரலோக ராட்சியத்தை சுதந்தரித்து கொள்ளும் படியாகத்தான்." என்றார். வேதனையை வலியை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் வருந்தி புலம்புவதை போல இங்கே இருக்கும் மனிதர்களை பார்த்து ஆண்டவர் வருந்துகின்றார்.

 

ஆண்டவரோடு கூட இருந்தது எனக்கு பாதுகாப்பாக இருந்தது. "நான் கர்த்தரை விட்டு போனால், இங்கேயே தரிக்க நேரிடும்!" என்று நினைத்தேன். "ஆண்டவரே எனது உறவினர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா?" என்று கேட்டேன். அவர் என்னை பார்த்தார் நான் அழுது கொண்டிருந்தேன். நான் பயந்திருந்த படியால் "மகளே நான் உன்னுடனே இருக்கிறேன்" என்றார். அவர் என்னை இன்னொரு சிறிய அறைக்கு அழைத்து போனார். நான் கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை அந்த அறையிலே நான் என்னுடைய ஒரு உறவினரை பார்ப்பேன் என்று. நான் அங்கே நெருப்பில் எரிந்து வேதனைப்பட்டு கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்தேன் புழுக்கள் அவள் முகத்தை தின்று கொண்டிருந்தன, பிசாசுகள் அவளுடைய உடலை  ஈட்டியால் குத்தி கொண்டிருந்தன. அவள் கர்த்தரை பார்த்து கதறினாள் ஆண்டவரே என்மீது இரக்கம் காட்டுங்கள், என்னை மன்னியுங்கள், இங்கிருந்து ஒரு நிமிடத்திற்கு மாத்திரம் என்னை வெளியே விடுங்கள்" (லூக்கா 16:24)  என்று கெஞ்சினாள்  அவள் என் பெரிய பாட்டி .

 

நரகத்திலே, வேதனைப்படும் மனிதர்களுக்கு அவர்கள் பூமியில் வாழ்ந்த வாழ்க்கை நன்றாக நினைவிருக்கிறது. பிசாசுகள் அவர்களை அடித்து நொறுக்கி அவர்களிடம் "துதித்து ஆராதனை செய் இதுவே உன் ராட்சியம்" என்று சொல்லுகிறது. அந்த மனிதர்களோ கர்த்தரை அவர்கள் மறுதலித்த விதத்தை நினைத்து நினைத்து கதறுகிறார்கள். கர்த்தரை அறிந்து அவரை மருதலித்தவர்கள் இரட்டிப்பான வேதனையை அனுபவிக்கிறார்கள்.

 

ஆண்டவர் சொன்னார் "இங்கே இருப்பவர்களுக்கு வேறொரு சந்தர்ப்பம் இல்லை: இன்னும் உயிருடன் இருப்பவர்களுக்கு தான் சந்தர்ப்பம் இருக்கிறது" என்றார். நான் கேட்டேன் ஆண்டவரே ஏன் என்  பெரிய பாட்டி இங்கே இருக்கிறாள்?, அவள் உங்களை அறிந்திருந்தாளா என்று எனக்கு தெரியாது  அவள் ஏன் இங்கே இருக்கிறாள்? என்றேன். அதற்கு கர்த்தர் "மகளே அவள் மற்றவர்களுக்கு மன்னிப்பு கொடுக்காததால் தான் இங்கே இருக்கிறாள்... மகளே மற்றவர்களை மன்னிக்காதவர்களை என்னாலும் மன்னிக்க முடியாது" என்றார்.

 

நான் "ஆண்டவரே நீங்கள் இரக்கம் நிறைந்தவரே மன்னிப்பவரே" என்றேன் அதற்கு அவர் "ஆம் மகளே, மன்னிப்பது அவசியம் அநேகர் மற்றவர்களை மன்னிப்பதில்லை அதனால் தான் இந்த இடத்தில் மன்னிக்காதவர்கள் அநேகர் இருக்கிறார்கள். மன்னிக்கும் தருணம் இதுதான் என்று நீ போய் மனிதர்களிடம் கூறு விசேஷமாக என் மக்களிடம் கூறு என் மக்கள் அநேகர் மற்றவர்களை மன்னிப்பதில்லை.  தாங்கள் விரும்பாத காரியங்களிலிருந்து தங்களை விடுவித்து கொள்ளுமாறு கோபத்தையும் பகைமையையும் விட்டு மற்றவர்களை மன்னிக்கும் படி கூறு. மன்னிக்க மறந்தவன்  ஆச்சரியவன்னமாக நரகத்திற்கு போவான் அங்கிருந்து ஒருவரும் அவன் ஆத்துமாவை ஆதாயப்படுத்த முடியாது" என்றார். நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம் என் பெரிய பாட்டி நெருப்பிலே வெந்து "ஆஆஆ" என்று கதறினாள் கர்த்தரை திட்டவும் சபிக்கவும் தொடங்கினாள். நரகத்திலிருக்கும் எல்லா மனிதர்களும் கர்த்தரை திட்டவும் சபிக்கவுமே செய்கிறார்கள்.

 

நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம், அங்கே வெந்து வேதனைப்படுகிற அநேக ஆத்துமாக்களை கண்டேன். அநேக மனிதர்கள் தங்களுக்கு உதவி செய்யும்படி தங்கள் கைகளை ஆண்டவருக்கு நேரே நீட்டி கெஞ்சினார்கள். ஆண்டவர் எதுவும் செய்யவில்லை அதனால் அவர்கள் கோபத்தால் அவரை திட்ட சபிக்க தொடங்கினார்கள். அப்போது கர்த்தர் அழுதுகொண்டே சொன்னார் "அவர்கள் சத்தத்தை கேட்பதும் அவர்களை பார்ப்பதும் எனக்கு மிக வேதனையாக இருக்கிறது காரணம் எனக்கு இவர்களுக்கு உதவி செய்யும் சந்தர்ப்பம் கடந்து விட்டது. ஆனால் இன்னும் பூமியில் உயிரோடு இருப்பவர்களுக்கு உதவ என்னால் முடியும் அவர்களுக்கு மனந்திரும்புவதற்கான நேரம் இன்னும் இருக்கிறது" என்றார்.

 

பிரபல்யமான பலர் நரகத்திலே இருப்பதாக கர்த்தர் கூறினார். அத்தோடு பலர் கர்த்தரை அறிந்தவர்கள் என்று அவர் தெரிவித்தார். "நான் இன்னுமொரு அக்கினி மயமான பகுதியை உனக்கு காட்டப்போகிறேன்" என்றார் நாங்கள் ஒரு இடத்திற்கு வந்தோம் அங்கே ஒரு பெண் நெருப்பினால் சுற்றி வலைக்கப்பட்டு அதிக வேதனைப்பட்டாள் அவள் ஆண்டவரை கண்டதும் இரக்கம் கேட்டு கெஞ்சினாள்.  அவளுக்கு நேராக கர்த்தர் கைகளை நீட்டி "மகளே நீ அங்கே பார்க்கும் பெண் தான் செலினா " என்றார் நாங்கள் அவளருகே நெருங்கியதும் அவள் அதிகதிகமாக சத்தமிட்டு கெஞ்சினாள்ஆண்டவரே என்மீது இரக்கம் காட்டுங்கள், என்னை மன்னியுங்கள், இங்கிருந்து என்னை வெளியே எடுத்து விடுங்கள்" என்றாள். ஆனால் கர்த்தர் அவளுக்கு மறுமொழியாக "இப்போது மிகவும் பிந்தி விட்டது. உனக்கு மனந்திரும்ப இனி சந்தர்ப்பம் இல்லை" என்றார். 

 

அப்போது அவள் என்னை பார்த்து "நான் உன்னை கெஞ்சி கேட்கிறேன் உலகத்திற்கு போய் சொல் சொல்லாமல் விடாதே மனிதர்களை இந்த இடத்திற்கு வரவேண்டாம் என்று சொல், அவர்களிடம் என் பாடல்களை கேட்க வேண்டாம் என்று சொல் என் பாடல்களை பாடவேண்டாம் என்று சொல் (1 யோவான் 2 :15)  " என்றாள். நான் அவளிடம் "ஏன் நான் இதை சொல்லும் படி கேட்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவள்  "மனிதர்கள் என் பாடல்களை கேட்கும்போதும் பாடும்போதும் இங்கே என் வேதனை அதிகதிகமாக இருக்கிறது. ஒருவன் அப்படி செய்யும் போது அந்த காரியம் இங்கே வந்து என்னை அதிகமாக சித்திரவதை செய்கிறது ஆகையால் தயவு செய்து போய் அவர்களிடம் சொல் இந்த இடத்திற்கு வரவேண்டாம் என்று சொல் நரகம் உண்மை என்று சொல்" என்றாள். அவள் கெஞ்சினாள் அப்போது பிசாசுகள்  தூரத்திலிருந்து  வேகமாக வந்து அவளை தாக்கியது அவள் கதறி அழுதாள்.ஆண்டவரே இரக்கம் காட்டுங்கள், மன்னியுங்கள் என்றாள். கர்த்தர் வேதனையோடு "இப்போது மிகவும் பிந்தி  விட்டது" என்றார்.

 

நான் அந்த இடத்தை சுற்றிலும் பார்த்த போது அந்த இடமானது இறந்துபோன பாடகர்களாலும் கலைஞர்களாலும் நிறைந்திருந்தது. அங்கே அவர்கள் நிறுத்தாமல் பாடி பாடி கொண்டே இருக்கிறார்கள். ஆண்டவர் எனக்கு விளங்கப்படுத்தினார் "மகளே ஒரு மனிதன் மனந்திரும்பாவிட்டால் அவன் பூமியில் எதை செய்தானோ அதை இங்கே இடைவிடாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்." என்றார்.

 

நான் அந்த பகுதியை கவனித்த போது, ஒரு பகுதியில் திரளான பிசாசுகள் ஒரு விதமான மழையை பொழிகின்றது. நான் அதை மழை என்று நினைத்தேன். ஆனால் நெருப்பில் எரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் அதற்கு விலகியோடி கதறுகிறார்கள் " வேண்டாம், உதவி செய்யுங்கள், ஆண்டவரே உதவி செய்யுங்கள். முடியாது இப்படி இருக்க முடியாது" என்று கதறுகிறார்கள் அப்பொழுது அந்து பிசாசுகள் சிரித்து கொண்டு அவர்களிடம் "துதித்து ஆராதனை செய்யுங்கள் இதுவே உங்கள் முடிவில்லாத ராட்சியம்" என்கின்றன. நான் பார்த்தபோது அவர்களுடைய நெருப்பும் புழுக்களும் அதிகரிக்கின்றன!. அந்த மழையில் தண்ணீர் இல்லை அவை கந்தக கற்கள் அவை அந்த மனிதர்களின் நெருப்பை அதிகரிக்க செய்து பொறுக்கமாட்டாத வலியை ஏற்படுத்துகிறது. நான் ஆண்டவரிடம் "ஆண்டவரே இது என்ன?, என்ன நடக்கிறது?" என்றேன். அதற்கு கர்த்தர் "இதுதான் மனந்திரும்பாதவர்களின் கூலி (சங்கீதம் 11 :6 )" என்றார்.

 

எல்லோருக்கும் பிரபல்யமான ஒரு மனிதன் இருக்கும் இடத்திற்கு கர்த்தர் என்னை அழைத்து வந்தார். என் ஆரம்ப நாட்களில் இருமனம் கொண்ட வாலிப பெண்ணாக நான் வாழ்ந்தேன். நான் எபோதும் நினைத்தேன் ஒருவர் மரித்தால் சொர்க்கத்திற்கு போவதாக; சபை கூட்டங்களை ஆசரிப்பவர்கள் சொர்க்கத்திற்கு போவதாக, ஆனால் நான் நினைத்தது பிழை. இரண்டாவது பாப்பரசர் என்று சொல்லப்படும் ஜோன் போல்மரித்தார், என் நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் அவர் சொர்க்கத்திற்கு தான் சென்றிருப்பார் என்றனர். எல்லா தொலைக்காட்சி (டிவீ)  செய்திகளிலும், மற்ற இடங்களிலும் "இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்சமாதானமாக இளைப்பாறுகிறார். அவர் ஆண்டவரோடும் தேவதூதர்கலோடும் மகிழ்ச்சியாக இருப்பார்" என்றனர். நானும் அவை எல்லாவற்றையும் விசுவாசித்தேன் அது என் முட்டாள் தனம், காரணம் நான் அந்த மனிதனை நரகத்திலே பார்த்தேன். அவர் முகத்தை பார்த்தேன் அவர் இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்ஆண்டவர் சொன்னார் "மகளே நீ அங்கு பார்க்கும் மனிதன் இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்2. அவன் இங்கே தான் இருக்கிறான். மனந்திரும்பாத காரணத்தினால் அவன் இங்கு வெந்து வேதனைப்படுகிறான்" என்றார்.

 

நான் "ஆண்டவரே ஏன் இந்த மனிதன் இங்கே இருக்கிறான் இவன் எப்போதும் சபைகளில் உபதேசம் செய்பவன் அல்லவா" என்றேன். அதற்கு ஆண்டவர் "மகளே விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது என்னுடைய ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லை(எபேசியர் 5:5)" என்றார். அது உண்மை என்று நான் அறிந்திருக்கிறேன் ஆண்டவரே ஆனால் இந்த மனிதன் எப்படி இங்கு? இவன் ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு உபதேசம் செய்தவன் அல்லவா? என்றேன். கர்த்தர் பதிலாக "ஆம் மகளே இவன் அநேக உபதேசங்களை செய்தான் ஆனாலும் ஒரு நாளும் சத்தியத்தை உபதேசிக்கவில்லை.  இவனுக்கு சத்தியம் நன்றாக தெரியும் ஆனாலும் இவன் இரட்சிப்பை விட பணத்தையே அதிகம் விரும்பினான். இவன் உண்மையை மதிக்கவில்லை பரலோகமும் நரகமும் உண்மை என்று ஜனங்களுக்கு  சொல்லவில்லை இப்போது இந்த நரகத்தில் வெந்து வேதனைப்படுகிறான்" என்றார்.

 

நான் இந்த மனிதனை பார்த்த போது ஆணிகளால் நிறைந்த ஒரு பெரிய பாம்பு அவனுடைய தொண்டையை சுற்றி இருக்கிக்கொண்டிருந்தது அவன் அதை எடுக்க போராடிக்கொண்டிருந்தான். நான் ஆண்டவரிடம் கெஞ்சினேன் "ஆண்டவரே இவனுக்கு உதவுங்கள்" என்று, அந்த மனிதனும் கதறினான் "ஆண்டவரே எனக்கு உதவுங்கள்! என் மீது இறக்கம் காட்டுங்கள், இந்த இடத்திலிருந்து என்னை வெளியே எடுத்து விடுங்கள், என்னை மன்னியுங்கள் ஆண்டவரே. நான் மனந்திரும்ப மறுபடியும் பூமிக்கு செல்லவேண்டும்" என்றான். ஆண்டவர் அவனுக்கு சொன்னார் "உனக்கு நன்றாக தெரியும் இந்த நரகம் உண்மை என்று, இப்போது மிகவும் பிந்தி விட்டது உனக்கு வேறு சந்தர்ப்பம் இல்லை" என்றார்.

 

ஆண்டவர் என்னிடம் "மகளே பார் நான் இந்த மனிதனுடைய வாழ்க்கையை உனக்கு காட்டுகிறேன்" என்றார். ஒரு பெரிய திரையிலே இவனுடைய வாழ்க்கை எனக்கு காட்டப்பட்டது இவன் ஆயிரமாயிரம் ஜனங்களுக்கு உபதேசம் செய்வதும் அந்த ஜனங்கள் அதிக விக்கிரகாராதனைக்காரராக இருப்பதையும் நான் பார்த்தேன்" ஆண்டவர் சொன்னார் "பார் மகளே, இந்த இடத்தில் அநேக விக்கிரகாராதனைக்காரர்கள் இருக்கிறார்கள், விக்கிரகாராதனை ஒரு மனிதனை விடுதலை செய்யாது நான் மட்டுமே எவரையும் விடுதலை செய்வது. என்னை அல்லாமல் விடுதலை செய்ய யாருமே கிடையாது. நான் பாவியை நேசிக்கிறேன் பாவத்தையோ வெறுக்கிறேன். மனிதர்களிடம் போய் சொல் நான் அவர்களை நேசிக்கிறேன் அவர்கள் என் பக்கமாக திரும்புவது அவசியம்" என்றார். 

 

ஆண்டவர் பேசி கொண்டிருக்கும் போது, இந்த மனிதன் எப்படி கோடிக்கணக்கான பணத்தை பெறுகிறான் என்று திரையிலே பார்த்தேன் அதிகமான பணம் இவனிடம் இருந்தது. ஒரு சிங்காசனத்தில் இவன் வீற்றிருந்தான் அவனுடைய மறைவான காரியங்களும் எனக்கு காட்டப்பட்டது. கர்த்தர் எனக்கு காட்டிய ஒரு உண்மையை கூறுகிறேன் இது  என்னால் உண்டாக்கப்பட்டதல்ல, இந்த மனிதர்கள் திருமணம் முடிப்பதில்லை என்பது உண்மை ஆனால், இந்த மனிதர்கள் கன்னியாஸ்திரிகளுடன் விபச்சாரம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர் அங்கே அநேக பெண்கள் உண்டு!. (இதோ ஒரு கன்னியாஸ்திரியின் சாட்சி: http://www.youtube.com/watch?v=-Q_aj8YPaKE ) 

 

இந்த மனிதர்கள் விபசாரத்தில் வாழ்வதை ஆண்டவர் எனக்கு காண்பித்தார், கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது விபசாரகாரர்கள் அவருடைய ராட்சியத்தை சுதந்தரிப்பதில்லை என்று. ஆண்டவர் சொன்னார் "மகளே பார் நான் உனக்கு காட்டுவதெல்லாம் அநேக மனிதர்களிடம் தற்போதும் நடக்கிறது, அதில் அநேக திருச்சபை தலைவர்களும், குருமார்களும் இருக்கின்றனர். மகளே மனிதர்களிடம் நீ  போய்  அவர்கள் மனந்திரும்பும் நேரம் இதுதான் என்று சொல்" என்றார்.

 

அநேக மனிதர்கள் நரகத்தை நோக்கி நடந்து வரும் ஒரு இடத்தை கர்த்தர் எனக்கு காண்பித்தார். நான் கேட்டேன் "ஆண்டவரே அவர்கள் எப்படி இந்த இடத்தை நோக்கி நடக்கிறார்கள்? என்றேன், அவர் எனக்கு ஒரு சுரங்கத்தை காண்பித்தார் அதற்கூடாக அநேகர் நடக்கின்றார்கள் அவர்களது கைகளிலிருந்து கால்கள்வரை சங்கிலிகளால் கட்டபட்டிருக்கின்றது. அவர்கள் கருப்பு உடை அணிந்தவர்களாக தங்களுடைய தோள்களில் சுமைகளை சுமந்தவர்களாக வந்து கொண்டிருக்கின்றனர். ஆண்டவர் சொன்னார் "மகளே நீ பார்க்கும் மனிதர்கள் இன்னும் என்னை அறியாதவர்கள் அவர்கள் சுமப்பது அவர்களது பாவசுமையே அவர்களிடம் போய் சொல் என்பக்கமாக திரும்பி அவர்களது சுமைகளை என்மீது வைக்கும் படி அப்போது நான் அவர்களுக்கு ஆறுதல் கொடுப்பேன். அவர்களிடம் நீ போய் சொல் அவர்கள் இந்த நரகத்தை நோக்கியே நடக்கிறார்கள் நானோ என் கரங்களை நீட்டிய வண்ணம் அவர்களுக்காக காத்து கொண்டிருக்கிறேன்" என்றார்.

 

நடந்து வரும் மனிதர்களை நான் கவனித்தபோது. நான் சொன்னேன் "ஆண்டவரே அதோ அங்கே நடந்து வரும் வாலிபன் என் மைத்துனன், அந்த வாலிப பெண் என் மைத்துனி என் உறவினர்கள் இங்கே வருகிறார்கள்!" என்றேன். ஆண்டவர் சொன்னார் "மகளே நீ அவர்களிடம் போய் அவர்கள் நரகத்திற்கு வருகிறார்கள் என்று சொல் இதோ நான் உன்னை என் காவலாளியாக வைத்தேன் அதற்கே உன்னை தெரிந்து கொண்டேன் ஆகையால் நீ உண்மையை சொல்வது அவசியம். நான் உனக்கு காட்டிய எல்லாவற்றையும்  நீ போய் சொல்ல வேண்டும். நீ சொல்லாமல் அந்த மனிதனுக்கு ஏதும் நடந்தால் அவனது ரத்தபலியை உன் கையில் கேட்பேன். நீ அவனை எச்சரித்தும் அவன் மனந்திரும்பாவிட்டால் அவன் ரத்தப்பலி அவன் தலைமீதே இருக்கும் நீயும் உன்னை தப்புவித்து கொள்வாய் (எசேக்கியேல் 3 :17 -19) என்றார்.

 

பல பிரபலங்களும் முக்கியஸ்தர்களும் இந்த இடத்தை நோக்கி வருவதாக ஆண்டவர் சொன்னார். உதாரணமாக "மைக்கேல் ஜாக்சன்" இந்த மனிதன் முழு உலகத்திற்கும் தெரிந்தவன் ஆனாலும் இவன் ஒரு சாத்தான் பக்தன். பலருக்கு இது தெரியாதிருந்தாலும் இது உண்மையே. இவனுக்கு அதிகமான ரசிகர்கள் ஏற்படும் படியாகவும் இவனுடைய பாடல் அதிக புகழ் அடையும் படியாகவும்  இவன் சாத்தானுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தான்.

 

இப்படித்தான் இவன் முன்னேறி இருக்கிறான், பிசாசுகள் நரகத்தில் சத்தமிட்டு கொண்டே மனிதர்கள் மேல் பின்புறமாக சறுக்கி விழுகிறது முன்னதாக நகர்வதில்லை, விழுந்து மனிதர்களை மிகவும் கொடுமையாக வேதனைப்படுத்தி மகிழ்ச்சியடைகின்றது. ஆண்டவர் மைகேல் ஜாக்சன் நரகத்தில் படும் பாடுகளை எனக்கு காட்டினார் என்னால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. அவன் கொடுமைப்படும் விதத்தையும் கதறும் விதத்தையும் சகிக்க முடியாது. நான் ஆண்டவரிடம் "ஏன்?" என்று கேட்டு கொண்டே கதறி அழுதேன். மைகேல் ஜாக்சனுடைய ரசிகர்களுக்கும் அவனுடைய பாடல்களை கேட்பவர்களுக்கும் நான் எச்சரிப்பாக சொல்வது என்னவென்றால் சாத்தான் உங்களை வஞ்சிக்கிறான் உங்களுடைய முடிவு நரகத்தில் தான் இருக்கும். இப்போதே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் அவற்றை கைவிட்டு, மனந்திரும்புங்கள். கர்த்தர் உங்களை விடுதலைசெய்ய விரும்புகிறார். அப்போது நீங்கள் கெட்டுபோவதில்லை.

 

ஆண்டவர் சொன்னார் "மகளே என்னை அறிந்த மனிதர்களும் இந்த இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள்" என்றார். நான் "ஆண்டவரே எப்படி உங்களை அறிந்தவர்கள் இங்கே வருகிறார்கள்?" என்றேன். அதற்கு அவர் "அவர்கள் என் வழிகளை கைவிட்டு இருமனமுள்ள வாழ்க்கை வாழ்கிறார்கள்" என்றார். யாரெல்லாம் நரகத்தை நோக்கி வருகிறார்கள் என்பதை கர்த்தர் காண்பித்தார் அவர்கள் கைமுதல் கால் வரை சங்கிலிகளால் கட்டப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கின்றனர். 

 

அவர்கள் வெள்ளை உடை அணிந்திருந்தனர் ஆனால் அது அழுக்காகவும் கரைபடிந்தும் கிழிந்தும் கசங்கிய நிலையிலும் காணப்பட்டது. "மகளே எந்த அளவு என் ஜனங்கள் என்னை விட்டு  விலகி நடக்கிறார்கள் என்று பார், மகளே என் ரகசிய வருகையானது இப்படிப்பட்டவர்களுக்காக அல்ல, நான் வருவதோ பரிசுத்தமாகவும், குற்றம் சாட்டப்படாமலும், கசங்காத கறைபடியாத ஜீவியம் செய்பவர்களுக்க்காகவுமே, ஆதலால் ஆதி கிரியைகளுக்கும் ஆதி அன்புக்கும் திரும்பும் படி அவர்களிடம் சொல்(எபேசியர் 5:26 -27)" என்று ஆண்டவர் சொன்னார். நான் பார்த்தபோது எனது உறவினர்களும் இன்னும் அநேகரும் கர்த்தரை விட்டு விலகி நடப்பதை கண்டேன். ஆண்டவர் என்னிடம் "மகளே நான் அவர்களுக்காக காத்துகொண்டிருக்கிறேன் அவர்களோ இந்த இடத்தை நோக்கிவருகிறார்கள்! உன் உறவினர்களிடம் நீ போய் உண்மையை சொல். மகளே பலர் உன்னை விசுவாசிக்க மாட்டார்கள், ஆனால் நான் உன் நம்பிக்கைக்குரிய சாட்சியாய் இருக்கிறேன், நான் உன்னை கைவிடமாட்டேன், அவர்கள் உன்னை விசுவாசிக்காவிட்டாலும் நான் உன் நம்பிக்கைக்குரிய சாட்சியாய் இருக்கிறேன். அவர்களிடம் போய் உண்மையை சொல். அவர்கள் எவ்விதம் இங்கு வருகிறார்கள் என்பதை நான் உனக்கு காட்டுகிறேன்" என்றார்.

 

நாங்கள் ஒரு சுரங்கத்தண்டையிலே போனோம் அங்கே அதிகமான மனிதர்கள் பாதாள குழிக்குள் விழுந்து கொண்டிருந்தனர் ஆயிரம் ரெண்டாயிரம் பேர் அல்ல. கடல் மணலத்தனையான  எண்ணிக்கைற்ற ஜனங்கள். கை நிறைய மணலை அல்லி வீசுவதைப்போல் அவர்கள் நொடிப்பொழுதில் அதிவேகமாக விழுகின்றனர். இயேசு கிறிஸ்து அழுதுகொண்டே சொன்னார் "இப்படித்தான் மகளே மனிதகுலம் அழிந்து கொண்டிருக்கின்றது இதை பார்ப்பது எனக்கு மிகுந்த வேதனையை  தருகின்றது" என்றார். 

 

ஆண்டவர் "பிசாசுகள் இந்த இடத்திலே கூட்டங்களை நடத்தும்" என்றார். நான் "பிசாசுகள் கூட்டம் நடத்துமா?" என்றேன். அதற்கு அவர் "ஆம் மகளே அவைகள் ரகசியமாக ஒவ்வொரு நாளும் கூட்டம் கூடி மனிதவர்க்கத்தை எப்படி அழிக்கலாம் என திட்டமிடும்" என்றார். அவர் என்னை ஒரு இடத்திற்கு அழைத்த்து சென்றார் அங்கே ஒரு பெரிய மேசையையும் அதை சுற்றிலும் கதிரைகளையும் நான் கண்டேன் அங்கே எல்லா விதமான பிச்சாசுகளும் இருந்தன. ஆண்டவர் என்னிடம் "மகளே இவைகள் இப்போது போதகர்களையும், சுவிசேஷகர்களையும், என்னை அறிந்த யாவரையும், அவர்கள் குடும்பங்களையும், எப்படி நிர்மூலமாக்கலாம் என்று திட்டமிடுகின்றன. அவர்களை நிர்மூலமாக்குவதே இவைகளுடைய தேவை இவைகளிடம் அநேக விதமான குறிவைத்து வீசும் முல்லுகள் இருக்கின்றன" என்றார். 

 

பிசாசுகள் சிரித்து கேலியாக, நாம் போய் மனிதர்களை நிர்மூலமாக்கி இந்த இடத்துக்கு கொண்டு வருவோம் என்றன. ஆண்டவர் சொன்னார் "ஜனங்களிடம் நீ போய்; நான் அவர்களோடு இருக்கிறேன் என்றும், தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1 பேதுரு 5 :8 ) என்றும் சொல்" என்றார். வார்த்தை சொல்கிறது கெர்ச்சிக்கிற சிங்கம்போல் என்று தான் ஆனால் மெய்யான சிங்கம் யூதாவின் சிங்கமே அது நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவே (வெளிப்படுத்தல் 5:5) ஆண்டவர் சொன்னார் "மகளே முக்கியமாக ஊழியக்காரர்களை நிர்மூலமாக்குவதே பிசாசுகளுக்கு தேவை" என்றார். " நான் "ஏன் ஆண்டவரே முக்கியமாக ஊழியக்காரர்களை? என்றேன். ஆண்டவர் பதிலாக "காரணம் அவர்களே மந்தைகளின் மெய்ப்பர்களாக இருக்கின்றனர். கர்த்தர் அவர்களையே ஆடுகளை மேய்க்கும் படியாக வைத்திருக்கிறார். ஆகவே அந்த மேய்ப்பர்களை நிர்மூலமாக்கி ஆடுகளான என் ஜனங்களை மறுபடியும் உலகத்தின் இன்பங்களுக்கு கொண்டு வந்து அவர்களின் முடிவை நரகத்தை அடையவைப்பதே இவைகளின் திட்டம். ஆகையால் நீ என் ஊழியகாரர்களிடம் போய் உண்மையை பேசும்படியாகவும் நான் அவர்களுக்கு சொல்வதை பிரசங்கிக்கும் படியாகவும் தங்கள் சுய பிரசங்கத்தை விடும்படியாகவும் சொல்லு" என்றார்.

 

நாங்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம் ஆண்டவர் சொன்னார் "இன்னும் சில காரியங்களை நான் உனக்கு காட்ட வேண்டும், சிறுவர்களும் இங்கே இருக்கின்றனர்" என்றார். நான் கேட்டேன் " ஆண்டவரே " சிறுவர்கள் இங்கே இருக்கின்றனரா? ஏன் அவர்கள் இங்கே வந்தனர் உங்கள் வார்த்தை சொல்கிறதே, சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, (மத்தேயு 19:14) " என்றேன். ஆண்டவர் சொன்னார் "அது உண்மை தான் மகளே பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது தான் ஆனால் சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வரவேண்டும் என்னிடத்தில் வருபவர்களை நான் புறம்பே தள்ளுவதில்லை (யோவான் 6:37)" என்றார்.  உடனடியாக ஆண்டவர் எனக்கு 8 வயது நிரம்பிய ஒரு சிறுவனை காட்டினார் அவன் நெருப்பினால் வெந்து வேதனைப்பட்டு கொண்டிருந்தான். அந்த பையன் அழுதான் "ஆண்டவரே என்மீது இறக்கம் காட்டுங்கள், என்னை வெளியே எடுத்து விடுங்கள், எனக்கு இங்கே இருக்க முடியாது" என்றான் அவன் அழுதுகொண்டு கதறினான். அவனை சுற்றிலும் பிசாசுகள் இருந்து அவனை துன்புறுத்தின அவை காட்டூன் உருவங்களாக இருந்தன. அவை டிராகன், பாய்ஸ், பென்10 ,போக்மேன், டோரள் இன்னும் பல உருவங்களில் இருந்தன. "ஏன் இவன் இங்கிருக்கிறான்?” என்றேன். ஆண்டவர் ஒரு திரையில் இந்த சிறுவனின் ஜீவியத்தை காண்பித்தார். அவன் வாழ்ந்த நாட்கள் முழுவது தொலைக்காட்சி பெட்டி (டி வீமுன்பாக இருந்து இப்படிப்பட்ட காட்டூன்களையே  பார்க்கிறான்.

 

ஆண்டவர் சொன்னார் "மகளே இப்படிப்பட்ட காட்டூன், திரைப்படங்கள், நாடகங்கள் என்பவை எல்லாம் தினமும் தொலைக்காட்சி பெட்டியில் (டி வீ யில்) காண்பிக்கப்படுகின்றன. இவைகள் எல்லாம் மனிதர்களை நாசம் செய்யும் படியான சாத்தானுடைய ஆயுதங்கள். மகளே பார் எப்படி இவன் இங்கே வந்தானென" என்றார். நான் பார்த்தேன் இவன் அடங்காதவனும் தாய் தகப்பனுக்கு கீழ்ப்படியாதவனுமாய் இருந்தான். இவனுடைய பெற்றோர் இவனை கண்டித்தபோது இவன் அவர்களுக்கு கீழ்ப்படியாமல் பொருட்களை வீசியடித்து வெளியிலே ஓடி ஒரு காரில் மோதுகிறான் இப்படியே இவன் வாழ்க்கை முடிகிறது. "அதன் பின் இவன் இங்கேயே இருக்கிறான்" என்றார் ஆண்டவர்.

 

நான் சிறுவனை பார்த்தேன் அவன் கொடுமை படுத்தப்பட்டு கொண்டிருந்தான். ஆண்டவர் சொன்னார் "மகளே பெற்றோரிடம் போய் சொல் என் வசனத்தில் சொல்லப்பட்டபடி பிள்ளைகளை வளர்க்கும்படியாக (நீதிமொழிகள் 22 :6) கர்த்தருடைய வார்த்தை சத்தியம், ஒரு பிள்ளை கீழ்ப்படியாதபோது தண்டனையின் பிரம்பினால் அவனை திருத்தும்படி கர்த்தருடைய வார்த்தை சொல்லுகிறது (நீதிமொழிகள் 22 :15 )

 

"மகளே கீழ்ப்படியாமையினாலும், காட்டூன் கதைகளை பார்ப்பதாலும் இங்கே அநேக சிறுவர்கள் இருக்கிறார்கள்" என்று கர்த்தர் கூறினார். அது மனதிற்கு மிகவும் வேதனை தரக்கூடியதாக இருந்தது.  நான் கேட்டேன் ஏன் ஆண்டவரே காட்டூன் பார்ப்பது தவறு?" என்று. ஆண்டவர் சொன்னார் "காரணம் அந்த காட்டூன்களுக்கூடாக பிசாசுகள் கீழ்ப்படியாமை, அடங்காமை, கசப்பு, பகைமை போன்ற ஆவிகளை கொண்டு வந்து உணர்வுகளாக சிறுவர்களின் இருதயத்தில் விதைகின்றன, இன்னும் சில பிசாசுகள் இந்த சிறுவர்களுக்குள் புகுந்து விடுகின்றன அதனால் இச்சிறுவர்கள் நல்ல காரியங்களை அல்ல கெட்ட காரியங்களையே விரும்பி செய்வார்கள். அது மட்டுமல்லாமல்  இச்சிறுவர்களுக்கு தேவை தாங்கள் தொலைக்காட்சி பெட்டியில் (டி வீ யில்) பார்க்கும்

காரியங்களை நிஜத்திலும் செய்ய வேண்டும் என்பதேஎன்றார்.

நரகம் இருப்பது உண்மை சிறுவர்கள் கூட தங்களுடைய பங்கை தெரிந்துகொள்வது அவசியம். "ஆண்டவரே ஏன் சிறுவர்கள் இங்கே இருக்கிறார்கள்?” என்று நான் மறுபடியும் கேட்டேன் ஆண்டவர் சொன்னார் "சிறுவர்களுக்கும் நல்லது எது? கெட்டது எது? என்கின்ற ஞானம் உண்டு ஆகையால் அவர்களும் சரியானதை தெரிந்துகொள்வது அவசியம்" என்றார்.

 

 

சொர்க்கம்

இன்னும் அநேக காரியங்கள் நரகத்திலே உண்டு ஆனால் இப்போது நான் சொர்க்கத்தில் கண்டவைகளை உங்களோடு கூட பகிர்ந்து கொள்கிறேன். கர்த்தர் என்னை நோக்கி "மகளே இப்போது நான் என்னுடைய பரிசுத்த ஜனங்களுக்காக ஆயத்தம் செய்தவைகளை உனக்கு காண்பிக்க போகிறேன்" என்றார். நாங்கள் அந்த நரக பகுதியிலிருந்து ஒரு சுரங்கபாதை கூடாக வெளிய வந்தோம். பின்பு திடீரென  ஓளி வீசும் இடத்தை அடைந்தோம் நான் பார்த்தேன் அங்கே இருள் இல்லை,நெருப்பு இல்லை, வேதனை இல்லை. "மகளே என் மகிமையை நான் உனக்கு காண்பிக்க போகிறேன் என்று கர்த்தர் சொன்னார்". அப்போது நாங்கள் மேல் நோக்கி உயர்ந்து சொர்க்கலோகத்தை நோக்கி சென்றோம்!. சீக்கிரத்தில் ஒரு வாசலண்டைக்கு வந்தோம் அங்கே  மிகப்பெரிய தங்க எழுத்துக்களால் "சொர்க்கலோக இராட்சியம் உங்களை வரவேற்கின்றது" என எழுதப்பட்டிருந்தது. ஆண்டவர் சொன்னார் "மகளே, உள்ளேபோ, நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்(யோவான் 10 :9 ) என்றார். 

ஆண்டவர் இந்த வார்த்தைகளை சொன்னதும் அந்த வாசல் கதவுகள் திறந்தது. நாங்கள் உள்ளே நுழைந்தோம். நான் பார்த்தேன் தேவதூதர்கள் மகிமையையும் கனத்தையும் எங்கள் பிதாவாகிய தேவனுக்கு செலுத்தினார்கள்! (வெளிப்படுத்தல் 7:11-12). நாங்கள் தொடர்ந்து நடந்தபோது நாங்கள் ஒரு ஆயத்தம் செய்யப்பட்ட மேசையை வந்தடைந்தோம். அதன் தொடக்கம் இருந்தது முடிவோ காணப்படவில்லை(வெளிப்படுத்தல் 19:9). ஒரு பெரிய சிங்காசனமும் சிறிய சிங்காசனமும் அதைசுற்றிலும் ஆயிரக்கணக்கான ஆசனங்களும் வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆசனங்களுக்கு நடுவில் வெள்ளை நிற அங்கிகளும் கிரீடங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆண்டவர் சொன்னார் "மகளே நீ அங்கே பார்ப்பவைகள் தான் ஜீவகிரீடங்கள்(வெளிப்படுத்தல் 2:10)" என்றார்.

ஆண்டவர் சொன்னார் "இவை தான் மகளே நான் என் ஜனங்களுக்காக ஆயத்தம் செய்திருப்பவை" என்று , நான் பார்த்தபோது மேசையில்  வெள்ளை நிற மேசை துணி விரிக்கப்பட்டிருந்தது. அங்கே தட்டுகள், பாத்திரங்கள், பழங்கள் எல்லாம் பரிமாறப்பட்ட நிலையில் தயாராக இருந்தது.  அவை பார்ப்பதற்க்கு மிகவும் அழகாக இருந்தன. அந்த மேசைக்கு நடுவில் மிகபெரிய ஒரு பாத்திரம் இருந்தது அதில் திராட்சை ரசம் வார்க்கப்பட்டிருந்தது. ஆண்டவர் "மகளே என்னுடைய சபையின் வருகைக்காக எல்லா ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளது" என்றார்.

நாங்கள் இன்னொரு இடத்திற்கு போனோம் அங்கே அநேக ஜனங்கள் ஒரு பூங்காவிலே இருந்தனர். வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள நன்றாக அறிந்த அநேகர் அங்கே இருந்தனர் ஆனால் அவர்கள் வயது முதிர்ந்தவர்கள் அல்ல இளம் வயதுள்ளவர்கள். அங்கே ஒரு வாலிபன் கையில் பெரிய கைக்குட்டையுடன் சுழன்று சுழன்று நடனமாடி ஸ்தோத்தரித்து  கொண்டிருந்தான்.

 

ஆண்டவர் சொன்னார் "மகளே அங்கே நடனமாடி கொண்டிருக்கும் வாலிபன் என் ஊழியக்காரனான தாவீது" என்றார். அவன் பிதாவுக்கு மகிமை செலுத்தி கொண்டிருந்தான். ஆண்டவர் அங்கே இருந்தவர்களை காண்பித்து; "மகளே இவன் யோசுவா, இவன் மோசே அடுத்தவன் ஆபிரகாம்" என்றார். அவர்களை பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் தோற்றங்களும் அப்படியே இருந்தன. ஆண்டவர்  "மகளே நீ அங்கே பார்க்கும் பெண் என் ஊழியக்காரி மகதலேனா மரியாள்,  அடுத்தவள் சாராள்" என்றார்.

 

அவர் சொன்னார் "மகளே இவள் மரியாள் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தவள் அதாவது என்னை பெற்றெடுத்தவள். மகளே இவளுக்கு பூமியில் நடப்பவை தெரியாது. நீ போய் மனிதர்களிடம் சொல்லவேண்டும், விக்கிரகாராதனைக்காரர்களிடம் நரகம் இருப்பது உண்மை விக்கிரகாராதனைக்காரர்கள் தேவனுடைய ராட்சியத்தை சுதந்தரிப்பதில்லை, ஆனால் அவர்கள் மனந்திரும்பினால் நித்தியமான சொர்க்க ராட்சியத்தை அடையலாம் என்று, நான் அவர்களை நேசிப்பதாக அவர்களிடம் சொல், மரியாள் பூமியில் தன்னை ஆராதனை செய்வதை அறிவதில்லை. மரியாளோ, வேறு எந்த புனிதர்களோ இரட்சிப்பை கொடுப்பதில்லை.  நான் மட்டுமே இரட்சிப்பவர், என்னை அன்றி ஒருவருமில்லை! ஒருவருமில்லை! ஒருவருமில்லை!" என்று மூன்று தடவைகள் சொன்னார். அவர் இரட்சிக்காவிட்டால் ஒருவராலும் இரட்சிக்க முடியாது.

 

மனிதர்கள் தங்களாலேயே வார்க்கப்பட்ட புனிதர்களை விசுவாசிப்பதால் வஞ்சிக்கப்பட்டு போகிறார்கள். ஆனால் அவை புனிதர்கள் அல்ல மனிதனுடைய கைவேலையான விக்கிரகமாகவும், பிசாசாகவும் இருக்கிறது. ஆனாலும் கர்த்தர் மனிதர்களுக்கு சிறந்தவற்றையே கொடுக்கிறார் மனிதர்கள் விக்கிரகங்களை விட்டு மனந்திரும்பி தேவனுடைய ராட்சியத்தை அடைவதே அவரின் வாஞ்சையாக இருக்கிறது. காரணம் விக்கிரகம் இரட்சிப்பதில்லை. முழு மனிதவர்கத்திற்காகவும் தன் ஜீவனை கொடுத்த நசரேயனாகிய இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே இரட்சிப்பு உண்டு. ஆண்டவர் கண்ணீர் விட்டு சொன்ன காரியம் "மகளே தயவுசெய்து, நான் உனக்கு காட்டியவற்றையும் சத்தியத்தையும் மனிதர்களிடம் போய் சொல், சொல்லாமல் விடாதே" என்பதே.

 

மரியாள் இயேசு கிறிஸ்துவை வணங்குவதை நான் பார்த்தேன். பெண்கள் அழகிய நீண்ட கூந்தலுடன் இருப்பதை நான் பார்த்தேன். நான் "ஆண்டவரே, எவ்வளவு அழகாக இவர்களுடைய கூந்தல் இருக்கிறது" என்றேன். அதற்கு ஆண்டவர் "மகளே நீ பார்க்கும் இப்படியான கூந்தலே பெண்களுக்கு என்னால்  கொடுக்கப்பட்ட முக்காடாக இருக்கிறது மகளே பெண்களிடம் போய், நான் அவர்களுக்கு கொடுத்திருக்கும் முக்காடுகள் மேல் கவனம் செலுத்தும்படியாக சொல் " என்றார்.

 

பின்பும் அவர் என்னிடம் "உனக்கு காட்டும் படியான முக்கியமானதொன்று இருக்கிறது" என்றார். நான் தூரத்திலே ஒரு பளிச்சிடும் நகரத்தை கண்டேன். அந்த நகரம் தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. நான் "ஆண்டவரே அது என்ன? நான் அங்கே போக வேண்டும் என்றேன். அவர் பதிலாக "மகளே அங்கே என்ன இருக்கிறது என்று நான் உனக்கு காட்டுகிறேன், நீ பார்ப்பது  தான் பரலோக குடியிருப்பு அது என் ஜனங்களுக்காக ஆயத்தமாக  இருக்கிறது" என்றார்.  

 

நாங்கள் ஒரு தங்க பாலம் இருக்கும் இடம் வரை வந்து அதற்கூடாக நடந்து சுத்த தங்கத்தால் கட்டப்பட்டிருக்கும் வீதிகள் வரை வந்தோம்!. (வெளிப்படுத்தல் 21 :21)

 

எல்லாம் பளிங்கிற்கு ஒப்பாக மிக நேர்த்தியாக, அழகாக இருந்தது, அது விபரிக்க முடியாத தெய்வீக  அதிசயமாக இருந்தது! நாங்கள் பரலோக குடியிருப்புகளை பார்த்தோம், அங்கே ஆயிரக்கணக்கான தேவதூதர்கள் கட்டுவேலையில் ஈடுபட்டிருந்தனர். சில தூதர்கள் மிகவேகமாகவும், சிலர் மெதுவாகவும், சிலர் ஒன்றும் செய்யாமலும் இருந்தனர். நான் ஆண்டவரிடம் "ஏன் சில தூதர்கள் மிகவேகமாகவும், சிலர் மெதுவாகவும், சிலர் ஒன்றும் செய்யாமலும் இருக்கின்றனர்?" என்று கேட்டேன்.  அதற்கு ஆண்டவர் "மகளே இவ்வண்ணமே என் ஜனங்கள் பூமியில் என் ஊழியத்தை செய்வது.... மகளே என் ஜனங்கள் இப்போது சுவிசேஷத்தை அறிவிப்பதில்லை, உபவாசிப்பதில்லை, வீதிகளில் சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து சத்தியத்தை சொல்வதில்லை. என் ஜனங்கள் இப்போது ஊழித்துக்கு வெட்கப்படுகிறார்கள் அவர்களிடம் தங்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பும்படி போய் சொல். என் வழியை விட்டு விலகிப்போனவர்களுக்கு சொந்தமான தேவதூதர்களே நீ பார்த்த வேலை செய்யாமல் இருந்த தேவதூதர்கள்...  என் ஜனங்கள் தங்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பும் படி அவர்களிடம் சொல்" என்றார் (எரேமியா 6 :16 ). இதை சொல்லி இயேசு கிறிஸ்து கண்ணீர் விடத்தொடங்கினார்.

 

நான் இன்னும் வேறு ஜனங்கள் பாடும் சத்தத்தை கேட்டேன், "ஆண்டவரே அந்த பாடும் இடத்திற்கு என்னை அழைத்து செல்லுங்கள்" என்றேன். ஆண்டவர் நான் கேட்டதை கவனித்தார் அவரின் முக அசைவை வைத்தே நான் அதை விளங்கிக்கொண்டேன் எனக்கு அவருடைய முகத்தை அந்த சந்தர்ப்பத்தில் பார்க்கமுடியாமல் இருந்தது. ஆனால் அவருடைய உடை கண்ணீரால் நனைந்து கொண்டிருந்தது. அவர் அழுவது ஏன்? என்று நான் கேட்டதற்கு பதில் ஏதும் அவரிடமிருந்து வரவில்லை.

 

பின்பு நாங்கள் அழகிய பூந்தோட்டத்திட்கு வந்தோம். அந்த பூந்தோட்டமானது பரலோக குடியிருப்புகளுக்கு மத்தியில் இருந்தது. அங்கே பூக்கள் அசைந்தாடி கொண்டிருந்தன. நான் கேட்ட பாடும் சத்தம் இந்த பூக்கள் பாடிய சத்தமே. ஆண்டவர் சொன்னார் "மகளே இந்த பூக்களை பார் அவைகள் என்னை துதிக்கின்றன! ஆராதிக்கின்றன! ஆனால் என் ஜனங்களோ என்னை துதிப்பதையும், ஆராதிப்பதையும், என்னை தேடுவதையும்  கைவிட்டு விட்டனர் ஆதியன்பு அவர்களிடம் இப்போது இல்லை. அதனால் தான் நான் உனக்கு சொன்னேன் அவர்களிடம் போய் மறுபடியுமாக என்னை தேடும்படி சொல், இதோ நான் வருகிறேன், நான் வருகிறேன், நான் வருகிறேன், நான் வருவது என்னை ஆவியோடும் உண்மையோடும் தேடும் பரிசுத்தமுள்ள ஜனங்களுக்காக மட்டும் தான்" என்றார். இதை சொல்லி ஆண்டவர் அழுது கொண்டு  "நான் வருகிறேன்! வருகிறேன்!" என்றார். அவர் ஏன் அதிகமாக அழுதார் என்பதன் காரணம் எனக்கு விளங்கியது அது என்னவெனில் அவர் வருவது எல்லா கிறிஸ்தவ ஜனங்களுக்காகவும் அல்ல அவரை சரியான வழியிலும் ஆவியோடும் உண்மையோடும் தேடும் பரிசுத்தமுள்ள ஜனங்களுக்காக மட்டுமே.

 

பின்பு ஆண்டவர் என்னை பூமிக்கு திரும்பும்படி சொன்னார். நான் ஆண்டவரிடம் பூமிக்கு திரும்பி போக மனதாக இல்லை! ஏன் பூமியை குறித்து சொல்கிறீர்கள் எனக்கு உங்களுடனேயே இருக்க வேண்டும் நீங்கள் என்னை இங்கு கொண்டு வந்தீர்கள் நான் எங்கேயும் போக மனதாக இல்லை, நான் உங்களுடன் இருக்கிறேன்" என்றேன். அதற்கு ஆண்டவர் என்னை நோக்கி "மகளே நீ பூமிக்கு சென்று என் மகிமை உண்மையென்றும் நான் உனக்கு காண்பித்த காரியங்கள் அனைத்தும் உண்மை என்றும் சொல்வது அவசியம் அப்போது அநேகர் கெட்டு போகாமல் மனந்திரும்புவார்கள்" என்றார். நான் அழுதுகொண்டு, என்னால் பூமிக்கு செல்ல முடியாது என்று சொல்லும் படி அவருடைய பாதத்தில் விழுந்தேன். ஆண்டவருடைய பாதத்தில் ஆணிகள் பாய்ந்த காயங்கள் இன்னும் ஆற்ற படாமல் காயங்கலாகவே இருந்தன. நான் கேட்டேன் "ஆண்டவரே ஏன் இன்னும் இந்த காயங்கள் அப்படியே இருக்கின்றன?" என்று. அவர் சொன்னார் மகளே இந்த காயங்கள் ஜனங்களுக்காக நான் என் ஜீவனை கொடுத்த நாளிலிருந்தே இருக்கிறன" என்றார். நான் அவருடைய கைகளிலும் காயங்களை கண்டேன். "ஆண்டவரே ஏன் இன்னும் இவற்றை வைத்திருக்குறீர்கள் என்றேன். அவர் "நினைவு கூறுதலுக்காக" என்றார். "இவைகள் சுகமாகுமா?" என்றேன்.  அவர் சொன்னார் "மகளே என்னுடைய பரிசுத்தவான்கள் எல்லோரும் இங்கே என்னோடு கூட வந்து சேரும்போது இவைகள் சுகமாகும்" என்று சொல்லி மகளே நான் உன்னை அழைத்துபோக வேண்டும் உன் குடும்பமும் உன் ஜனங்களும் உனக்காக காத்திருக்கின்றனர்" என்றார்.

 

 நான் மறுப்பதற்கு முயற்சித்தேன் அவரோ கீழாக சுட்டிக்காட்டி "பார்!... அங்கே நீ பார்க்கும் மனிதர்கள் உன் உறவினர் அங்கே இருக்கும் உடல் உன்னுடையது நாம் இப்போது போக வேண்டிய நேரம் நெருங்கி விட்டது" என்றார். அவர் பளிங்கு போலிருந்த சுத்தமான ஒரு ஆற்றிற்கு என்னை அழைத்து வந்து அதில் மூழ்கும்படி சொன்னார். நான் அதில் மூழ்கும் முன் அதனிடத்தில் வந்து அந்த வர்ணிக்க முடியாத சந்தோஷத்தை அனுபவித்தேன், பின்பு நான் அதில்மூழ்கி பரவசம் அடைந்தேன். நான் நினைத்தேன் மறுபடியும் என் வீட்டிற்கு போக வேண்டிய அவசியம் இருக்காது என்று ஆனால் கர்த்தர் கூறினார். "மகளே நீ பூமிக்கு திரும்பிபோவது அவசியம், நான் உனக்கு என்னுடைய ரகசியவருகையில்  நிகழப்போகும் காரியங்களை காண்பிக்கிறேன் வா" என்று சொன்னார்

 

 

 

இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும் உபத்திரவகாலமும்

நாங்கள் ஒரு பெரிய திரை இருந்த இடத்திற்கு வந்தோம், அதிலே நான் மனிதர்களை பார்த்தேன். அதில் நான் முழு உலகத்தையும் கவனித்தேன் பல ஜனங்கள் காணாமல் போவதை பார்த்தேன். கர்ப்பிணிகளின் கர்ப்பம் மறைந்து போனது அவர்கள் பைத்தியம் பிடித்தவர்களை போல் கதறினார்கள்.

எல்லா இடங்களிலேயும் சிறுபிள்ளைகள் காணாமல் போனார்கள். நேகமான ஜனங்கள் இங்கும் அங்கும் கதறிக்கொண்டு ஓடினார்கள் அவர்கள் "இது நடக்க கூடாது, இது நடக்க கூடாது என்ன நடக்கிறது?" என்று கதறிக்கொண்டு ஓடினார்கள்

கர்த்தரை அறிந்தும் அவரை விட்டு விலகிய ஜனங்களை நான் கண்டேன்(மத்தேயு 24:40-41) அவர்கள் இயேசு கிறிஸ்துவின் ரகசிய வருகை நடந்து விட்டது என்று கதறிக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கின்றனர். ஆண்டவர் சொன்னார் "மகளே அந்த நாட்களிலே மரணம் அவர்களை விட்டு ஓடி போகும், அந்த நாட்களிலே பரிசுத்த ஆவியானவரும் பூமியிலிருந்து " போய் விடுவார் (வெளிபடுத்தல் 9:6) என்றார். அநேக விபத்துகளை கண்டேன்  ஆனால் ஒருவர் கூட மரிக்கவில்லை காயங்களோடு உயிருடனேயே இருந்தனர்.

 

பலவிதமான போக்கு வரத்து இடையூறுகளையும் ஆயிரக்கணக்கான மனிதர்களையும் அவதானித்தேன். ஆண்டவர் சொன்னார் "மகளே பார், இப்படிதான் எல்லாம் நடக்கும்" என்று. மனிதர்கள் "ஆண்டவர் வந்து விட்டார்!, ஆண்டவர் வந்து விட்டார்! என்று சத்தமிட்டு கொண்டே ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடினர். அவர்கள் கெஞ்சிய வண்ணம் "ஆண்டவரே எங்களை மன்னியுங்கள், எங்களை மன்னியுங்கள், எங்களை உங்களோடு எடுத்து கொள்ளுங்கள்" என்றனர்.

 

ஆனாலும் துக்கமாக ஆண்டவர் சொன்னார். "அப்போது மிகவும் பிந்திவிடும் இப்போது தான்  மனந்திரும்பும் நேரம் ஆகையால் நீ போய் சொல் மனிதர்கள் மனந்திரும்பும் படியாக அல்லது அவர்களுடைய சந்தர்ப்பம் அவர்களை  விட்டு போய் விடும்

(ஏசாயா 55 :6 )” என்றார். ஜனங்கள் ஆண்டவரை விட்டு போவதை அவர் உணர்ந்தவராக கண்ணீர் விட்டு சொன்னார் "மகளே நான் பூமிக்கு செல்வது 1 தெசலோனிக்கேயர் 4 :16 -17 ல் கூறப்பட்டபடிதான் என்றார் (அதிலே – 16 ல்: ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 ல்:. பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக மேகங்கள்மேல், அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.) என்று சொல்லப்பட்டுள்ளது.

 

ஆனாலும் எல்லா கிறிஸ்தவர்களும் கர்த்தரோடு போவது இல்லை பிதாவின் சித்தத்தை செய்பவர்களும் பரிசுத்த ஜீவியம் ஜீவிப்பவர்களுமே கர்த்தரோடு போவார்கள்(மத்தேயு 7 :21). ஆண்டவர் சொன்னார் "பரிசுத்தமுள்ளவர்கள் மாத்திரமே பரலோக இராட்சியத்தில் பிரவேசிப்பார்கள். என் ஜனங்களுக்காக நான் போகும் அந்த நாளையும் அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்(மத்தேயு 24 :36)" என்றார்.

 

அந்த திரையிலே ஜனங்கள் ஓடுவதை நான் பார்த்தேன். பத்திரிக்கைகளிலும்  தொலைக்காட்சி செய்திகளிலும் "இயேசு கிறிஸ்து வந்து போய் விட்டார்" என்று சொல்லப்பட்டது. திரை மூடப்பட்டது ஆண்டவர் "என்னுடைய ரகசிய வருகையானது பரிசுத்த ஜனங்களுக்கே" என்று சொல்லி முடித்தார். அதன் பின் அவர் என்னை பூமிக்கு கொண்டு வந்தார்.  தேவதூதர் கூட்டம் எங்களை சூழ்ந்திருந்தது அழகிய வெள்ளை நிற பூக்களால் சூழப்பட்ட படிகளில் இறங்கி வந்தோம். நான் அழுதுகொண்டே வந்தேன் ஆண்டவரே என்னை இங்கே விட்டு போகாதீர்கள் என்னை உங்களுடன் அழைத்து போங்கள் என்று கெஞ்சினேன். "மகளே உன் ஜனங்களும் உன் குடும்பத்தாரும் உனக்காக காத்திருக்கின்றனர்.... மகளே நீ அந்த உடலுக்குள் புகுந்து கொள்ள வேண்டும் உன் உயிர் திரும்பி வரும்  அப்போது நான் உனக்கு காண்பித்த எல்லாவற்றையும் நீ சாட்சியாக சொல்லவேண்டும் பலர் உன்னை விசுவாசிப்பார்கள் பலர் உன்னை விசுவாசிக்க மாட்டார்கள் ஆனால் நான் உன் சாட்சியாக இருக்கிறேன்" என்றார்.

 

 

மறுபடியும் பூமியில்

 

மக்சிமா

என் மகள் திரும்பி வந்தபோது நாங்கள் எல்லோரும் அங்கே இருந்தோம், அவள் நிலத்தில் கிடத்தப்பட்டிருந்தாள். மெதுவாக  "ஊஊம்ம்ம்" என்றாள். என் மகள் திரும்பி வந்து விட்டாள் "ஆண்டவரே ஸ்தோத்திரம்" என்றேன்.

நாங்கள் எல்லோரும் கர்த்தரை ஸ்தோத்தரிதோம். சீக்கிரமாகவே அவள் மெதுமெதுவாக மூச்சு விட ஆரம்பித்தாள். ஐந்து மணிநேரத்திற்கு பின் கண் விழித்து பேச ஆரம்பித்தாள். ஆரம்பத்தில் அவள் கூறியவற்றை எங்களால் விளங்கி கொள்ள முடியவில்லை அது விளக்கமாக இருக்க வில்லை. அவளுக்கு பெலன் இருக்க வில்லை. நாங்கள் ஜன்னல்களை மூடியே வைத்திருந்தோம் காரணம் அவளுடைய கண்களுக்கு வெளிச்சத்தை பார்க்க முடியாதிருந்தது.

நாங்கள் அனைவரும் அவள் பார்த்தவைகளை தெரிந்து கொள்ள மிக ஆர்வமாக இருந்தோம். அவள் மிகவும் பெலனற்று இருந்ததால் ஒருசில வார்த்தைகளை மட்டும் தான் அவள் பேசினால். இரண்டு வாரங்களின் பின்பு தான் அவள் பார்த்த எல்லாவற்றையும் எங்களுக்கு சொன்னாள்.

இவைகளின் பின் பிசாசுகள் அவளிடம் வந்து அவளை துன்பப்படுத்த ஆரம்பித்தன. அவளால் அந்த பிசாசுகளை நன்றாக பார்க்க முடிந்தது அவைகள் தங்களை நிழலுக்குள் மறைத்துக்கொள்ள முயற்சித்தன. அவள் மறுபடியும் உயிர் பெற்றதன் பின் மறுபடியும் பேசும்வரை மூன்று நாட்களாக அந்த பிசாசுகள் இங்கே இருந்தன. அவள் பேசும் நிலைக்கு வந்ததன் பின் அந்த பிசாசுகளுக்கு என்ன வேண்டும் என்று கேட்டாள் அதற்கு அவை "நாங்கள் உன்னோடு ஒரு ஒப்பந்தத்தை செய்யும்படியே வந்தோம்... நீ உன் வாயை மூடி கொண்டு பேசாமல் இருக்கவேண்டும் நீ கீழே நரகத்தில் பார்த்த ஒன்றையும் ஒருவருக்கும் சொல்லக்கூடாது சொன்னால் நாங்கள்  உன்னை கொலை செய்து விடுவோம்" என்றன.

 

அந்த பிசாசுகள் மிக விகாரமாகவும், உருவத்தில் பெரியதாகவும், பார்ப்பதற்கு மிகவும் அருவருப்பாகவும் இருந்ததாக மகள் கூறினாள். அவள் அவைகளை அநேகமுறை அதட்டினாள் ஆனால் அவைகள் அவளை விடவில்லை. அவைகள் வந்து அவள்மீது பாயவும் அவள் கழுத்தை நெரிக்கவும்  செய்தன. அவள் அவைகளை கடிந்துகொண்டு அவைகளோடு போராட தொடங்கினாள். அப்படி அவள் கடிந்துகொண்டிருந்த ஒரு தடவை ஒரு மிகபெரிய ஒளி வீசியது அத்தோடு அவை ஓடி விட்டன. அந்த ஒளி கர்த்தரே.

 

என் மகள் பெற்றுக்கொண்ட அனுபவம் இலகுவானதல்ல. கர்த்தரை ஜனங்கள் தேடும் படியான ஒரு உன்னத செய்தியை அவள் மனிதர்களுக்கு கொடுக்கிறாள். மனிதர்களோ அவர்கள் செய்வது சரி என்றே நினைக்கின்றனர். வாலிபர்கள் மதுபானம் பாவிப்பது சரி என்றே நினைக்கின்றனர் அது சரி அல்ல. என் மகள் ஆச்சரியமான ஒரு அனுபவத்துக்கூடாக நரகத்தில் பிரபல நட்சத்திரங்களும் இரண்டாவது பாப்பரசர் ஜோன் போல்2    கூட இருப்பதாக பார்த்திருக்கிறாள். இதுவே கர்த்தரை தேடவும் மனந்திரும்பவும் அவருக்கு முன்பாக தங்களை தாழ்த்தவும் கூடியநேரம். ஆண்டவருடைய வசனம் சொல்லுகிறது "வானமும் பூமியும் ஒழிந்து போகும் என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை(மத்தேயு 13 :31 )" என்று, சரியான நேரத்தில் கர்த்தருடைய வார்த்தைகள் நிறைவேறும்.

 

ஒரு சுரங்கத்தையும் அதற்கூடாக மனிதர்கள் நரகத்தை நோக்கி செல்வதையும்  கர்த்தர் அவளுக்கு காட்டியுள்ளார். அநேகர் தற்போது நரகத்தில் இருக்கின்றனர். அது உண்மை! கர்த்தருடைய ஜனங்களில் சிலர் இதை நம்புவதில்லை,  அநேகர் நம்புவதில்லை.

 

முக்கிய செய்தி என்ன வென்றால் நாம் ஆண்டவரை தேடவேண்டும் என்பதே, உதடுகளால் மட்டுமல்ல முழு இருதயத்தோடும் நாம் அவரை தேட வேண்டும். அவர் சீக்கிரம் வருகிறார். அவர் சொல்கிறார் "இதோ நான் வாசற்படியண்டையிலே நிற்கிறேன், சீக்கிரம் வருகிறேன், தாமதிப்பதில்லை, என் வருகை அதிசீக்கிரம். என் ஜனங்கள் என்னை விட்டு உலகத்திற்குள் சென்றிருக்கின்றனர். சொல் என் ஜனங்களுக்கு அவர்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பும் படியாக" என்பதே. சபைகள் தங்களுடைய பழைய வழிகளுக்கு திரும்பவேண்டும் அதாவது நாங்கள் ஆவியிலே அனலுள்ளவர்களாய் கர்த்தரை தேடவும் எக்காள சத்தம் வானில் தொனிக்கும் போது அவரை சந்திப்பதற்கு ஆயத்தமாய் இருக்கவும் வேண்டும்.  

 

ஆண்டவருடைய முக்கிய செய்தி

 

அன்ஜளிக்கா சபையில் ஜனங்களுக்கு முன்பாக பேசியது

 ஆண்டவர் என்னிடம் சொன்னார் "மகளே அந்த நாட்களில் பரிசுத்தாவியானவர் பூமியில் இருக்கமாட்டார் பரலோகத்துக்கு போய் விடுவார்" என்று. நான் அதிகமான விபத்துகளுடன் போக்கு வரத்து தடைகளை கண்டேன். அநேகர்  தங்களை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர். இயேசு கிறிஸ்து சொன்னார் "அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம்(வெளிபடுத்தல் 9 :6 )" என்று. தொலைக்காட்சிகளிலும் பத்திரிக்கைகளிலும் "ஆயிரக்கணக்கான மனிதர்களை காணவில்லை" என்று செய்திகள் வந்தன. பெரும்பாலான ஜனங்களுக்கு கர்த்தரின் ரகசிய வருகை நிகழ்ந்து விட்டது என்று தெரிந்தது. பின்மாற்றம் அடைந்திருந்த ஜனங்கள் வீதிகளில் அழுதுகொண்டு திரிந்தனர் அவர்கள் தங்களை தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தனர் ஆனாலும் அவர்களுக்கு அது முடியவில்லை.

 

பரலோகத்தில் வைத்து கர்த்தர் கூறியது "பரிசுத்தமான சபைக்காகவும் பரிசுத்தவான்களுக்காகவும் நான் அதிசீக்கிரம் வருகிறேன்" என்றார். ஆனால் இரண்டு வாரங்களுக்கு முன்பதாக ஆண்டவர் என்னிடம் "மகளே நான் உனக்கு கட்டளையிட்ட யாவற்றையும் நீ செய்து கொண்டு வருவதை நான் காண்கிறேன். ஆனாலும் என் ஜனங்களிடம் நான் சீக்கிரம் வருகிறேன் என்று சொல்லாதே, இதோ நான் இப்பொழுதே வருகிறேன் என்று சொல், நான் பரிசுத்தமான ஜனங்களுக்காகவே வருகிறேன், பரிசுத்தமானவர்கள் பரிசுத்தமானவர்கள் மட்டுமே என்னை காண்பார்கள்! நான் சொன்ன யாவற்றையும் அவர்களிடம் சொல்" என்றார்.

 

அன்ஜளிக்கா சபையாரோடு ஜெபம் செய்தல்:

எல்லோரும், கண்களை மூடுங்கள் உங்கள் வலது கையை உங்கள் இருதயத்தின் மேலும் இடது கையை உயர்த்திய வண்ணமாகவும் உங்கள் மனதில் வரும் காரியங்களை கர்த்தரிடம் கூறுங்கள். கர்த்தரை ஏற்று கொள்ள மனதுள்ளவர்கள் என்னோடு கூட நான் சொல்லும் ஜெபங்களை திரும்ப சொல்லுங்கள். 

ஆண்டவரே , உம்முடைய அன்புக்காகவும் கிருபைக்காகவும் ஸ்தோத்திரம், இன்றைய நாளிலும் கூட உம்முடைய வார்த்தைகள் என் இருதயத்திற்குள் பிரவேசித்த படியால் நன்றி. பிதாவே என் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கும் படியாய் ஜெபிக்கிறேன். என்னை மன்னியும். உம்முடைய விலை ஏறப்பட்ட ரத்தத்தினால் என்னை சுத்திகரியும், என்னுடைய பெயரை உம்முடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதும். உம்முடைய பிள்ளையாக என்னை ஏற்றுகொள்ளும் ஆண்டவரே. யாரையாவது இது வரை  நான் மன்னிக்காமல்  இருந்தால்  இப்பொழுதே அவர்களை மன்னிக்கிறேன். நான் மற்றவரை  மன்னிக்காத பழக்கத்தை இப்பொழுதே கைவிடுகிறேன். உம்முடைய வார்த்தையின் படி நான் செய்ய தவறிய  எல்லா காரியங்களையும் கைவிடுகிறேன். என்னை மாற்றும் படியாகவும் ஒவ்வொரு நாளும் உம்முடைய பிரசன்னத்தில் என்னை வைத்து கொள்ளும் படியாகவும் வேண்டுகிறேன். நன்றி பிதாவே நன்றி இயேசு கிறிஸ்துவே நன்றி பரிசுத்தாவியானவரே;  இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால், ஆமென்.

 

அன்ஜளிக்கா

இந்த சாட்சி ஒரு பொய் அல்ல, ஒரு கதையும் அல்ல, ஒரு கனவும் அல்ல நரகம் என்பது உண்மை! அது உண்மை, யாராவது அதை நம்பாமல் இருந்தால் நான் அவர்களுக்கு சொல்வது  நரகம் என்பது உண்மை! அதை விளங்கப்படுத்த வார்த்தைகள் இல்லை நீங்களும் கூட கர்த்தரிடத்திலிருந்து அதன் வெளிப்படுத்தளை பெற்று கொண்டாள் நலமென்று நான் விரும்புகிறேன்.

 

அன்ஜளிக்காவின் பொதுவான உரை.

நேரம் நெருங்கிவிட்டது, நடக்கபோவது என்ன என்பதை ஆண்டவர் அடையாளங்களினாலே மனிதர்களுக்கு காட்டுகிறார். நீங்கள் கைவிடப்பட்டு விட்டதாக எண்ணம் கொள்ள வேண்டாம் பிசாசுக்கு அதுவே அவசியம். நீங்கள் நரகத்துக்கு போகும் சுரங்க பாதையில் பயனிக்குரீர்களா? என்று உங்களையே கேட்டு பாருங்கள். இன்றே ரட்சிப்பின் நாள் இன்றே இயேசு கிறிஸ்துவை உங்கள் ரட்சகராக ஏற்று கொள்ளும் நாள். நீங்கள் சொல்லுவதற்கு  இலகுவானதும் சிறந்ததுமான வார்த்தைகள்  இதோ "நான் உங்களை ஏற்று கொள்கிறேன். இயேசுவே என் ஆண்டவரும் என் சொந்த இரட்சகருமாக நான் ஏற்று கொள்கிறேன். என்முழு இருதயத்துடனும் என் வாழ்க்கையையும் ஆத்துமாவையும் உங்களுக்கே கொடுக்கிறேன். நான் உங்களோடு கூட நித்திய காலமாக பரலோகத்தில் இருக்க வேண்டும் என்பதே என் வாஞ்சை".

 

உங்கள் கடைசி முடிவை தெரிந்து கொள்ளுங்கள்: மரணமோ ஜீவனோ என்று, சொர்கமோ நரகமோ என்று, இயேசு கிறிஸ்துவோ பிசாசோ என்று. நீங்கள்  இயேசு கிறிஸ்துவுக்கு சொந்தமானவர்களா? அல்லது பிசாசுக்கு சொந்தமானவர்களா? என்பதை தெளிவாக விளங்கிக்கொள்ளுங்கள். சரியானதை செய்வதையோ  தவறானதை  செய்வதையோ தெரிந்து கொள்ளுங்கள்.  உங்கள் முடிவை தெரிந்து கொள்ளுங்கள்: நித்திய ஜீவனோ நித்திய நரகமோ என்று  தெரிந்து  கொள்ளுங்கள். அதை பற்றி சிந்தியுங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள். நம்  ஒவ்வொருவருக்காகவும் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தார், எங்களுடைய  பாவத்துக்காக…..  அவர் எங்களுக்கு கிருபையாக இரட்சிக்கப்படும் சந்தர்ப்பத்தை தந்துள்ளார், ஆகையால் இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த ரட்சகராக ஏற்றுகொள்ளுங்கள்!

"இதோ இப்போது இந்த சாட்சியை நீங்கள் அறிந்து கொண்டீர்கள், இதைத்தள்ளி விட்டு நரகத்தில் சதா காலமும் வேதனைப்படும் ஒருவராக உங்கள் முடிவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம்". 

This free website was made using Yola.

No HTML skills required. Build your website in minutes.

Go to www.yola.com and sign up today!

Make a free website with Yola